Showing posts with label Political அரசியல். Show all posts
Showing posts with label Political அரசியல். Show all posts

04/09/2021

தலிபான்களின் அதிரடி சட்டம்

 ஆக மொத்தத்தில பெண்களை மெசினாத்தான் பாக்கிறாங்க போல.....


தாலிபான்கள் தற்போது விதித்துள்ள தடைகள்:

************

football தடை !

காற்றாடி விட தடை !

பெண்கள் தனியாக வெளியே போகதடை !

பெண்கள் கல்வி கற்க தடை !

பெண்கள் வேலை பார்க்க தடை !

ஆண்கள், பெண்கள் ஜீன்ஸ் உடை அணிய தடை !

பெண்கள் சைக்கிள்,பைக் ஓட்ட தடை !

தனியே பெண்கள் டாக்ஸியில் போக தடை  !

ஆண்கள்,பெண்கள் ஒரே பேருந்தில் பயணம் தடை !

டிவிதடை ! வீடியோ தடை !

ஆண்கள் சவரம் செய்ய தடை !

பறவை நாய் வளர்ப்பு தடை !

இலக்கிய நூல் தடை !

கடைகளில் ஆண்கள் இருந்தால் பெண்களுக்கு பேச தடை !

ஆண் டாக்டர்கள் பெண்களுக்கு சிகிச்சையளிக்க தடை . !

பெண்களின் பள்ளிகள், கல்லூரிகள் மத கருத்தரங்கு கூடமாக மாற்றப்படும் !


பெண்களுக்கு நெயில்பாலிஷ்,முகபூச்சு இருந்தால் விரல்கள் வெட்டப்படும் ! 

பெண் சத்தமாக சிரித்தால் பிரம்படி !

ஹைஹீல்ஸ் போட பெண்களுக்கு தடை !

பெண் நடக்கும் போது செருப்பு சத்தம் வந்தால் பிரம்படி !

பெண்கள் ரேடியோ டிவியில் பேச தடை !

பெண்கள் விளையாட்டு  விளையாட தடை !

பெண்கள் வீட்டு பால்கனியில் 

நிற்க தடை !

வீட்டு ஜன்னல் கண்ணாடிகளில் 

கட்டாய பெயின்ட் !

பெண்களுக்கு ஆடை அளவோ , 

ஆடை தைத்து தரவோ 

ஆண்களுக்கு தடை !

பெண்களை படம் பிடிக்க தடை !

பத்திரிகைகளில் பெண்கள் படம் 

வர தடை ! 

வீடு, கடைகளில் பெண்கள் 

படம் மாட்ட தடை !

இசை,சினிமா, பாடல் 

என அனைத்துக்கும் தடை !

2021 "31 செப்டம்பருக்கு பிறகு இஸ்லாமிய பெயர் வைக்காதவர்க்கு தண்டனை !

ஆண்கள் முடிவெட்ட தடை !

ஆண்கள் தாடி,தொப்பி ,ஆப்கான் உடை கட்டாயம் .!

இஸ்லாமிலிருந்து வேறுமதம் மாறுவோருக்கு மரண தண்டனை !

2021" செப்டம்பர் -30 க்கு பிறகு இன்டர்நெட் தடை !

பெண்கள் செண்ட் பூச தடை !

பெண்களின் கொலுசு சத்தம் எழ தடை !

பெண்கள் பிற ஆணுடன் பேசதடை !


இதெல்லாம் " நேற்று           வெளியிட்டுள்ள சட்டம் !


15/05/2021

மறைக்கப்பட்ட துடுப்பாட்ட வரலாற்றில் தமிழ் பெண்.

 1950 இற்கு முன்பு கொழும்பு p. சரவணமுத்து விளையாட்டு மைதானத்தின் மைதான அமைப்பாளராக கடமை புரிந்தவர் " அருள் மேரி " என்றழைக்கப்படும் இந்த தமிழ் பெண் , சுமார் 40 ஆண்டுகள் இந்த கடமையில் இருந்துள்ளார் 



இவ்வாறான ஒரு பனியில் ஈடுபட்ட முதலும் muduvumaana பெண் இதுவரை இவர் மட்டுமே 


கிரிக்கட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சார் டொனால்ட் பிரட்மான் ஆசியாவில் விளையாடிய ஒரே ஒரு திடல் தமிழ் யூனியனுக்கு சொந்தமான இந்த சரவணமுத்து திடல் 


அவர் விளையாடிய போட்டிக்காக  மைதானத்தை பொறுப்புடன்  தயார் செய்தது இவரே 


இன்று தமிழ் யூனியன் கழகத்துக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை,  சரவணமுத்து மைதானம் load's  ஆஃ ஸ்ரீலங்கா என்று அழைக்கப்பட்டது தற்போது p.Sara stadium ஆகிவிட்டது 


அருள் மேரி அம்மணியை யாருக்கும் தெரியாது 


உலகத்தின் அதிசயமாக இருக்க வேண்டிய இந்த தேசம் வக்கிர இனவாதத்தால் நக்குற தேசம் ஆகிவிட்டது 😥😥😥


கிருஷ்ணா

Dharmalingam Krishna

01/05/2021

இலங்கையின் வளர்சி எங்கு தடைப்படுகிறது

 இலங்கையின் பொருளாதார வீழ்சியும் வளர்ச்சியும் தங்கியிருப்பது எங்கு என்று பார்த்தால் சின்ன ஒரு இடம்தான். 


இலங்கையின் அனைத்து விடயமும் தங்கியிருத்தல் என்பதன் ஊடாக பல விடயங்களை வளர்க்க வேண்டிய தேவையில்தான் இலங்கை அரசாங்கங்கள் மாறி மாறி செயற்படுகின்றன.


அரசியல் கட்சி சார் அரசாங்கத்தில் மட்டுமே இலங்கையின் பொருளாதாரம், வளர்ச்சி மனித உரிமை, போன்ற அனைத்தும் தங்கியிருப்பது மக்களின் சாபக்கேட்டில் ஒன்றாகும்.


இதனால் கட்சிசார் அரசாங்கம் ஊழல், மோசடி, திறனற்றோரை அரச வேலைக்கு அமர்த்துதல், அரச நிதி மோசமான காரியங்களுக்கு பயன்படுத்தப்படுதல், அரச நடைமுறைகள் கட்சி சார் அரசாங்கத்திற்கு சார்பாக மாற்றப்படுதல், இவ்வாறான செயற்பாடுகளால் வறுமை உள்ளோர் வறுமையிலும், சில முதலாளிகள் மட்டும் வாழ்க்கூடிய சூழலும் உருவாகிக்கொண்டிருக்கின்றன. 


இந்த முறையை மாற்ற கட்சிகள் கூட்டிணைந்த தனி ஒரு கட்சி மட்டும் ஏனையவற்றை ஆளும் தன்மையற்ற ஒரு அரசாங்கம் அமையுமாக இருந்தால் ஒரு நாட்டில் வளர்ச்சி அதிகரித்து செல்லும்.


வளர்ந்த நாடுகளின் திட்டங்களை இந்த ஒன்றிணைந்த கட்சிகளின் அரசாங்கம் ஓரளாவது கட்டுப்படுத்தும். இதனால் ஓரளவு நனமையை மக்கள் அடையக்கூடியதாய் இருக்கும்.


இந்த ஆட்சி முறையில் வாழ்த மக்களும், தம் உழைப்பிற்கு பங்கமாக இருப்பதாக உணர்ந்த வளர்முக நாடுகள் மற்றும் பணமுதலைகளும் எவ்வளவு பணம் செலவழித்தவது அல்லது எவ்வளவு மகக்ளை கொன்றாவது இதனை மாற்ற முயற்சிப்பார்கள். 


இந்த நடவடிகையாலும் மக்கள்தான் அதிகம் பாதிப்படைவார்கள். இந்த பாதிப்பு எதிர்கால சந்ததியையும் கூடவே பாதிக்கும் என்பதை யாரும் உணர்ந்து கொள்வதாக தெரியவில்லை. 


சில விடயங்களை மாற்றினாலே நாட்டில் இருந்து வெளியேறும் நபர்கள் நாட்டை நோக்கி படையெடுப்பார்கள். இதனை உருவாகக் நல்ல ஆட்சியாளர்களின் வருகையே மிக முக்கியமாகும். 


எவ்வாறெனினும் ஒவ்வொரு வரும் இவ்வாறு கட்டுரைகளும், துண்டு பிரசுரங்களும், கவிதை, போன்றனவும் மட்டுமே வெளியிட முடியும். இறுதியாக மக்கள் தம் வாக்கை சரியாக பேணாதவிடத்து இதன் பலனை யாரும் அனுபவித்துவிட முடியாது.


பொய்க்கு உண்மையாயிருத்தல்

 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இத...