Posts

Showing posts from June, 2018

முரண்பட்ட குடும்பத்தில் புகுந்த தளபதி. கணவர்கள் புலம்பல்

Image
கணவன் மனைவிக்கிடையில் குடும்ப தகராறு ஏற்பட்டால் மூன்றாம் நபர்கள் புகுந்துவிடுவது இலகு. அதன் பின் அந்த பெண்ணிற்கு அன்பு ஆதரவு பணம் இவை கிடைக்கும் போது முழுவதுமாக அப்பெண் மாறிவிடுவாள். இது பெரும்பாலும் குடிகார ஆண்களின் வீட்டில் இடம்பெறுவதுண்டு. அவர்கள் குடித்து விட்டு தம்மை யாரும் புடுங்கமுடியாது, தானே அறிவாளி நேர்மை கௌரவம் என மதுவில் மார்தட்ட அவர் மனைவியின் நடவடிக்கை வேறு ஒருவருடன் உல்லாசமாக இருக்கும். இத்தவறிற்கு காரணம் அந்த ஆடவனே தவிர புகுந்த மற்றவனோ, அல்லது பெண்ணோ இல்லை. அப்பெண் வாழ்வதற்கு தேவையானை கிடைத்த இடம் எதுவோ அங்க அவள். பழமரம் தேடும் பறவைபோல், இன்று குடிகாரர் போல் இருக்கும் தமிழ் அரசியவாதிகள் நிலையும் மக்கள் நிலையும் இவ்வாறு இருக்க துரோகிகள் எதிரிகள் என்றோர் மக்களின் மனங்களில் புகுந்தனர். இது ஒரு சாதாரண உளவியல்தான். இதனை பயன்படுத்தி அன்பை சூறையாடிய இராணுவ தளபதிக்காக அழுவதும், தான் வீரனாக இருந்து தான் அழுவது தெரிய கூடாது என்று கறுப்பு கண்ணாடி வேறு அணிந்துள்ளார். ஒட்டு மொத்தத்தில் வாய்ச்சொல் வீர அரசியல் வாதிகளை விட மிக அன்னியோன்னியமாக வாழ்ந்திருக்கிறார