28/06/2021

Living together ஒன்றாக வாழ்தல்

 Living together. )ஒன்றாக வாழ்தல்)


இந்த சொல் நடைமுறை நமக்கு அதிக தூரம். இந்த முறை வெளி நாடுகள் சிலவற்றில் ஏற்று கொள்ள பட்டாலும் பல நாடுகள் கண்டும் காணாது விட்டிருக்கின்றனன.


இந்த வாழ்தல் முறை என்பது மனமொத்த இருவர் ஒரே வீட்டில் அல்லது ஒரு அறையில் ஒன்றாக வாழ்தல். இதில் திருமணம் என்பது இருக்காது. ஆனால் புரிந்துணர்வின் அடிப்படையில் பின்னர் நடக்கலாம்.


ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடி அவர்கள் இருவரும் ஒன்றாக வாழ முடிவெடுப்பதாகும்.. பாலியல் வரை பகிர்ந்து கொள்ளப்படும் இந்த வாழ்க்கை முரையில்.


இதனை வெளி நாடு செல்லும் பலரும் மேற்கொள்கின்றனர். அது உழைப்பு, வருமானம், ஒரே வேலைத்தளம், குடும்ப நிலை போன்றன தீர்மானிக்கின்றன.


ஒரு மாத வாடகையினை பங்கு போடவும், துணை ஒன்று தேவை என்பதற்காகவும், பாலியல் தேவைக்காகவும் இந்த நடைமுறை பயன்படுத்தப்படுகிறது.


இங்கு இவர்களுக்கு திருமணம் முடித்த குடும்பம் பிள்ளைகள் சொந்த நாட்டில் இருப்போர் கூட இதனை கைகொள்வதனை காணக்கூடியதாக இருக்கிறது. 


இதனால் நன்மை தீமைகளும் உண்டு.


குழந்தை பேறு என்பது இல்லாது போகலாம், இங்கு இந்த வாழ்க்கை சில மாதங்கள் போக வேறொருவருடனும் தொடரலாம்..

விவாகராத்து என்பது இடம்பெற வாய்பில்லை.

விபச்சாரிகளின் உருவாக்கம் குறைவடையும் ஆனால் இந்த வாழ்க்கை கூட அவ்வாறே அமையும்.


 வாழ்க்கை செலவு குறைவடையும்.  வெளி நாட்டில் வாடகை செலவு அதிகம். இதனால் இப்படி கதைத்து பேசி முடிவெடுப்பார்கள்.


குழந்தை பேறு குறைவடைவதால் இனத்தின் நிலை கவலைக்கிடமாகும்

 இந்த நிலை காதல் எனும் போர்வையில் தற்போது தொடர்கிறது. ஏதோ அவரவர் மன நிலையில் இந்த வாழ்க்கை முறைதொடர்கிறது.


இதுவும் ஒரு கள்ள வாழ்க்கை. இந்த வாழ்க்கை முறை ஒருவரை 50 வயதிற்கு பின் அதிகமாக மன உழைச்சலை கொடுக்கும். அப்போது மனவிரக்தியால் வாழவே பெரும் அவதிப்பட நேரிடும்.


இழமையில்சிரிச்சவன் முதுமையில் அழுவான். 




04/06/2021

வீசா கனவுக்கு நாட்டை அழிப்போம்

 இலங்கை வாழ் மக்கள் இன்று பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். இந்த நிலை ஆபிரிக்க நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சமனாகும். 


ஆபிரிக்க நாடுகளில் தொற்று நோய்தாகம், அரசியல் அராஜகம், ஆட்சியாளர் பெயர்களில் அனைத்து அரச நிறுவனங்களும், இராணுவ, பொலிஸ் அதிகார கையாளல், என நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் காணப்படுகின்றன.


இதனை போலவே இலங்கையும் மிகவிரைவில் மாற்றம் அடையலாம். அடைந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் ஆபிரிக்க நாட்டிற்கு சமனாக பல விடயங்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதை காணக்கூடியதாயிருக்கிறது.


தமது ஆட்சியில் நடைபெறும் ஊழலை மோசடியை வெளியில் வருவதை தவிர்க்க ஒரு அரசாங்காம் என்ன என்னெல்லாம் செய்யலாமோ அத்தையும் செய்துகொண்டிருக்கிறது.


இதில் மத தலைவர்கள், எதிர்கட்சிகள், எழுத்தாளர்களிற்கு உயிர் அச்சுறுத்தலும், பாச உயிர் பறித்தலும் இலகுவாக அவர்களை அடக்கிவிட முடிகிறது.


இதில் அப்பாவி மக்கள் மீது அதிகார துஸ்பிரயோகமும் கொள்ளை அடிக்க பயன்படும் வழியில் மகக்ளுக்கு சிறு தூவலும் இலகுவாக இருக்கிறது.


தம் பெயரில் தம் பரம்பரை எனும் ஒரு குறுகிய வெறி கடன்களையும் சுமைகளையும் ஏற்றி விட இத்தனையும் ஒரு விதமாக மாற்றி விட தம்மிடம் இருக்கும் அரசியல் ஆளணியினால் சட்டமாகக் படு பிரயத்தனம் நடைபெறும் போது ஏதாவது இலகுவக கையாழக்கூடிய பிரச்சினை ஒன்றை வெள்ளியிடவேண்டும். 


அந்த பிரச்சினையாக கொவிட் 19 இருக்கும் போது திரைமறைவு உச்சம் அடைந்து கனியாகிவிடும். 


என்ன ஒரு இலாபத்தை அடைய முடியும் வெளி நாட்டு வாழ்க்கையில் இலகுவாக சொந்த பந்தங்களில் காலில் விழுந்து சென்றுவிடலாம். 


எமெக்கென்ன வெளி நாடு முக்கியம். வீசா முக்கியம். 


அப்போ நாமும் பிரார்தனை பண்ணுவோம் நாடு எக்கேடு என்றாலும் படட்டும் என்று. 

 



பொய்க்கு உண்மையாயிருத்தல்

 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இத...