இலங்கையின் சிறப்புக்கள், வளர்ச்சிக்கு சாத்தியம்



ஆம் இலங்கையின் சிறப்பு வாழும் நிலைக்கான சூழல், வசதிகள், இயற்கை நிலைகள், கட்டுப்படுத்தும் வசதிகள், என ஒவ்வொன்றாக எடுத்தாலும் இலங்கை ஒரு சிறப்பு மிகு நாடுதான்.

இந்த நாட்டில் கடல் ஆகாய வளி மார்க்கங்கள் இன்னும் மெருகூட்டும். இப்படியான நாடில் ஏன் மக்கள் கடனாளி ஆனார்கள், ஏன் வாழ் முடியாயது தவிக்கின்றனர்.

காரணம் பலவும் கூறலாம் இதற்கு ஒரு சில காரணிகளே இந்த நிலைக்கு காரணம். மூவின மகள் மூவகை சமயம் இருந்தும் பிரச்சினை வருகிறது என்றால் யோசிக்கவேண்டியதுதான்.

இதனை தீர்க்க முடியாதா?? முடியும் என்றால் ஏன் இன்னும் அப்படி நடக்கவில்லை, என்று எல்லாம் எண்ண தோன்றும். எல்லாம் சுயநலன் சார்ந்த காரணிகள் இவற்றை எல்லாம் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

இத்தீவு சொந்த காலில் நிற்குமா? அதற்கு வளி இல்லையா?? இங்குதான் எல்லாமே இருக்கிறது.

தமது நீண்டகால் அரசியல் இருப்பை விரும்பும் அரசியல் வாதிகள் சுயமாக முடிவெடுக்க வேண்டும். ஒருதடவை ஆட்சி செய்தாலும் அவ்வாட்சி காலத்தில் நாட்டை அபிவிருத்தி செய்து சட்டத்தை இயற்றவேண்டும்.

தமது பொருளாதார இருப்பையும் தமது வியாபாரத்தையும் இலக்காக கொண்டு ராஜ தந்திர நடவடிக்கையில் ஈடுபடும் நாடுகளின் இயல்பில் இரு ந்து விடுபட வேண்டும்.

இறக்குமதிகளை முழுமையாக நம்பி இருக்கும் மக்களிற்கு உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் வகையில் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.

அடுத்து வரும் ஆட்சியாள் இவற்றை மாற்றம் செய்யாத வகையில் சட்டம் இருக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஓங்கி வளர்ந்தும் புல காட்சிக்கி தெரிந்தும் இன்னும் அதனை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காத இலஞ்ச ஊழல்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி பாரபட்சமின்றிய தண்டனை வழங்கவேண்டும்.

இவை சாத்தியமா என்றால் ஆம் என்பதே பதில். தற்போது இணைய மற்றும் செய்தி தணிக்கை என்பனவும் இந்த அவசர கால சூழலில் சாத்தியமான போது அவையும் இலகுவானதே. 

Comments

Popular posts from this blog

பொய்க்கு உண்மையாயிருத்தல்

யாருக்கும் வித்தியாசம் இல்லை.

சென்னையில் தொடரும் ஆழ்துளை கிணறு விபரீதம் கடந்த 10 ஆண்டில் இது 13வது சம்பவம்