Posts

Showing posts from December, 2018

13_வருட_உறுதிப்படுத்தப்பட்ட_கல்வி_நிகழ்ச்சித்_திட்டம்

#13_வருட_உறுதிப்படுத்தப்பட்ட_கல்வி_நிகழ்ச்சித்_திட்டம் இம்முறை G.C.E(O/L) 2017 பெறுபேற்றினைப் பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு அனைத்துப்பாடங்களிலும் W என்ற சித்தியின்மையினைப் பெற்றிருந்தாலும் உயர்தரம்( A/L) இரண்டு வருடங்கள் கற்று பல்கலைக் கழகம் சென்று பட்டம் பெறுவதற்கான சந்தர்ப்பத்தினை தற்போது கல்வி அமைச்சு வழங்கியுள்ளது. இதன்விபரம் பின்வருமாறு தற்போது உள்ள.Bio, Maths, Commerce, Arts, E-Tech, B-Tech என்ற 6 பிரிவுகளுக்கும் மேலதிகமாக 7 ஆவது பிரிவாக தொழில் பிரிவு( Vocational Stream) ஆரம்பிக்கப்படவுள்ளது, அது இம்முறை O/L பரீட்சைப் பெறுபேற்றினைப் பெற்ற உயர்தரத்திற்கு இணையவுள்ள 2018/2020 ஆம் ஆண்டின் மாணவர்களுக்கே நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கு O/L பரீட்சைப்பெறுபேறு கவனத்திற் கொள்ளப்படமாட்டாது, (all F/W உம் கற்கலாம், இரண்டு வருட கற்கை நெறியாகும் ஒவ்வொரு வருடத்திலும் 3 தவணை 2 வருடத்திலும் மொத்தம் 6 தவணைகளாகும், 1ஆம் வருடத்தில் ( first year) 1 ஆம் தவணையில் ஆரம்ப அறிமுகப்பாடங்களாக 9 பாடங்கள் நடைபெறும் தொழில் பிரிவு மாணவர்கள் இப்பாடங்களை( உ+ம்:- தமிழ்,சிங்களம்,ஆங்கிலம்,தொழில்வழிகாட்டல்கள்,உ

தமிழனின் மூளையில் இலங்கை.

Image
சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த இலங்கை அரசியலில் மாற்றம் ஏற்பட்டு எல்லோருமே ஏங்கித்தவித்த போது அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பெருமை தமிழ்தேசிய கூட்டமைபிற்கே என்றால் மிகையாகது. அதிலும் ஒவ்வொரு வளக்கிலும் முன்னின்று பேசி வெற்றி பாதையில் நடத்திய சுமந்திரன் பெருவெற்றி தலைவனேதான்.  இந்த வழக்கை தொடுக்க முடியும் என்றும் வெற்றியீட்ட முடியும் என்றும் ஆலோசனை வழங்கி வளி நடத்தவும் ஒரு சட்டவாளர் இருக்கார் என்றால் அதுவும் தமிழன் என்றால் தமிழிற்கு பெருமைதான். இந்த இடத்தில் ஒவ்வொரு தமிழனும் பெருமை படவேண்டியது. ஆனால் சேர் பொன் இராமநாதன் நடந்ததைப்போல் நடந்து கொள்ளாவிட்டால் தமிழின் பெருமை இன்னும் உச்சமே. அதில் சுமந்திரனின் ஆளுமை தங்கியிருக்கிறது. மீண்டும் வரலாறு ஆக கூடாது