Posts

Showing posts from May, 2021

மறைக்கப்பட்ட துடுப்பாட்ட வரலாற்றில் தமிழ் பெண்.

Image
 1950 இற்கு முன்பு கொழும்பு p. சரவணமுத்து விளையாட்டு மைதானத்தின் மைதான அமைப்பாளராக கடமை புரிந்தவர் " அருள் மேரி " என்றழைக்கப்படும் இந்த தமிழ் பெண் , சுமார் 40 ஆண்டுகள் இந்த கடமையில் இருந்துள்ளார்  இவ்வாறான ஒரு பனியில் ஈடுபட்ட முதலும் muduvumaana பெண் இதுவரை இவர் மட்டுமே  கிரிக்கட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சார் டொனால்ட் பிரட்மான் ஆசியாவில் விளையாடிய ஒரே ஒரு திடல் தமிழ் யூனியனுக்கு சொந்தமான இந்த சரவணமுத்து திடல்  அவர் விளையாடிய போட்டிக்காக  மைதானத்தை பொறுப்புடன்  தயார் செய்தது இவரே  இன்று தமிழ் யூனியன் கழகத்துக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை,  சரவணமுத்து மைதானம் load's  ஆஃ ஸ்ரீலங்கா என்று அழைக்கப்பட்டது தற்போது p.Sara stadium ஆகிவிட்டது  அருள் மேரி அம்மணியை யாருக்கும் தெரியாது  உலகத்தின் அதிசயமாக இருக்க வேண்டிய இந்த தேசம் வக்கிர இனவாதத்தால் நக்குற தேசம் ஆகிவிட்டது 😥😥😥 கிருஷ்ணா Dharmalingam Krishna

வெளிமாவட்ட அரச உத்தியோகம்.

Image
  அரசாங்க வேலையென்றால் ஆடும் மேய்க்கலாம் என்றார்கள்  அவ்வளவாக படிக்காவிட்டாலும் அதட்கேற்ற வேலை கிடைத்தது. அதிகம் பேசுவதில்லை அடக்கமாய் பணிபுரிந்தேன்  அதனால் என்னவோ அடுத்த மாதம் இடமாற்றம் என்றார்கள்  ஆறு மாதம் தான் கடமைக்கு வந்து  அதற்குள் இடமாற்றமா...? என்றேன் அது அப்படிதான் ஐந்து வருடம் வெளிமாவட்டத்தில் பணிபுரிய வேண்டும் என்றார்கள்  வெளி மாவட்டத்தில் பணிக்கு சென்றால் செலவுக்கு பணம் பத்தாது பலரிடம் யோசனை கேட்டேன்  பரவாயில்லை கொஞ்சம் சமாளி அரசாங் வேலை அநியாயமாக்கிடாதே  என்றார்கள்  அதுவும் சரியென்று அடுத்தநாள்  பயணமானேன்  மனைவி கொஞ்சம் சிக்கனக்காரி ஏதோ கிடைத்த பணத்தில்    சிக்கனமாக குடும்பம் நடத்தினாள்   ஆண்டு ஐந்து ஓடியது மீண்டும் சொந்த ஊருக்கு இடமாற்றம்  பஸ்சால் இறங்கி  சைக்கிளை நோக்கி நடந்தேன் அதுவும் காற்றுபோய் நின்றது வீடோ ஐந்து கிலோமீட்டர் தூரத்தில்  காற்று போன சைக்கிளோடு கால்கடுக்க நடந்து வந்தேன்  கூடிவாழ்ந்த நண்பன் ஒருவன் கோல் எடுத்தான் அப்போது   கார் ஒன்று வாங்கியிருக்கன் காலையில வாரன் வீட்ட நில் என்றான் சரிடா என்று போனை வைத்து  வீடு வந்து சேர்ந்தேன்  புன்னகையோடு வாசலில் மனைவி 

ஊடக சுதந்திரம் பற்றி அர்சாங்கம்

Image
  எமது நாட்டில் ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதில் எமது அரசாங்கம் உறுதிப்பாட்டோடு உள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.   www.tamilnews1.com  அனைத்துலக ஊடக சுதந்திர தினமான இன்றைய தினத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.   www.tamilnews1.com  அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,   www.tamilnews1.com  உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பது மட்டுமே ஊடகங்களின் பணி அல்ல; உண்மையற்ற செய்திகள் மக்களுக்குள் பரவி குழப்ப நிலைகளை ஏற்படுத்துவதையும் ஊடகங்களே பொறுப்புடன் தடுக்க வேண்டும்.  www.tamilnews1.com  இன்று நாடு சந்தித்து நிற்கும் பெரும் சுகாதார நெருக்கடியான ஒரு காலகட்டத்தில், அவ்வாறு செயற்படுவதே  ஊடகங்களின் பெரும் பொறுப்பாகவும் இருக்க முடியும்.  www.tamilnews1.com  நிறைவுகள் தொடர்பாகப் பேசுவதைத் தவிர்த்து, குறைகளை மட்டுமே கேள்விக்கு உட்படுத்தி - ஒரு நாட்டையும் அதன் மக்களையும் திறம்பட நிர்வகித்துச் செல்வதில் ஓர் அரசாங்கம் சந்திக்கும் சவால்களை விமர்சிப்பது அல்லாமல், மக்களை நல்வழிப்படுத்திச் செல்வதில் அரசாங்கத்திற்கு ஆக்கபூர்வமான

இலங்கையின் வளர்சி எங்கு தடைப்படுகிறது

Image
 இலங்கையின் பொருளாதார வீழ்சியும் வளர்ச்சியும் தங்கியிருப்பது எங்கு என்று பார்த்தால் சின்ன ஒரு இடம்தான்.  இலங்கையின் அனைத்து விடயமும் தங்கியிருத்தல் என்பதன் ஊடாக பல விடயங்களை வளர்க்க வேண்டிய தேவையில்தான் இலங்கை அரசாங்கங்கள் மாறி மாறி செயற்படுகின்றன. அரசியல் கட்சி சார் அரசாங்கத்தில் மட்டுமே இலங்கையின் பொருளாதாரம், வளர்ச்சி மனித உரிமை, போன்ற அனைத்தும் தங்கியிருப்பது மக்களின் சாபக்கேட்டில் ஒன்றாகும். இதனால் கட்சிசார் அரசாங்கம் ஊழல், மோசடி, திறனற்றோரை அரச வேலைக்கு அமர்த்துதல், அரச நிதி மோசமான காரியங்களுக்கு பயன்படுத்தப்படுதல், அரச நடைமுறைகள் கட்சி சார் அரசாங்கத்திற்கு சார்பாக மாற்றப்படுதல், இவ்வாறான செயற்பாடுகளால் வறுமை உள்ளோர் வறுமையிலும், சில முதலாளிகள் மட்டும் வாழ்க்கூடிய சூழலும் உருவாகிக்கொண்டிருக்கின்றன.  இந்த முறையை மாற்ற கட்சிகள் கூட்டிணைந்த தனி ஒரு கட்சி மட்டும் ஏனையவற்றை ஆளும் தன்மையற்ற ஒரு அரசாங்கம் அமையுமாக இருந்தால் ஒரு நாட்டில் வளர்ச்சி அதிகரித்து செல்லும். வளர்ந்த நாடுகளின் திட்டங்களை இந்த ஒன்றிணைந்த கட்சிகளின் அரசாங்கம் ஓரளாவது கட்டுப்படுத்தும். இதனால் ஓரளவு நனமையை மக்கள் அடை