நாட்டில் ஏற்பட தொற்று நோயாகிய கொரொனா பல சங்கடங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் பல பணக்காரர்கள் கடனாளிகளாகவும் சில நடுத்தர வர்கத்தினர் அதிக பணம் சம்பாதித்தோராகவும் மாறியிருக்கிறார்கள்.
உண்மையில் கொரொனா தொற்றின் பாதிப்பு மரணம் வரை அழைத்து சென்றாலும் அதில் சிலர் தப்பிபது எப்படி, எவ்வாறு அவர்களால் நடமாட முடிகிறது.
இப்படி பல சிக்கலான கேள்வியும் விடையின்றிய அலைவும் இந்த கொரொனா சில திட்டமிட்ட நடவடிக்கைகள் செயற்படுத்த காரணமாக அமைகிறதா??
அதிகமாக தனியார் கம்பனிகள் பாதிப்படைந்திருக்கின்றன. இதில் விடயம் என்னவென்றால் திட்டமிட்டபடி ஏதும் நடைபெறுகிறதா? இல்லா உண்மையில் இது கொரொனா தொற்றின் வளர்ச்சியா??
இவற்றை எல்லாம் யோசிக்கும் அளவிற்கு மக்களை விடாது இதன் செய்திகளையும் அள்ளி வீசும் ஊடகங்கள்.
எப்படியோ பாதிக்கப்படுவது எளிய மக்கள்தான். வலிமை உடையோராக வாழவேண்டும் என்பது நமது கட்டாய தேவையாகும்.