29/10/2019

தேர்தல்லும் மக்களும் இடையில் யாரு






இலஙகை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவருக்கான தேர்தல் சூடுபிடிக்குமா??

மக்கள் என்ன யோசிக்கிறார்கள். போட்டியாளர் என்ன செய்கிறார்கள் என்றால் எல்லாம் புரியாதே உள்ளது..

எதிர்வு கூறமுடியாத அளவில் ஊடகஙகளும் ஆய்வாளர்களும் சொக்கி போயிருக்குமளவிற்கு தேர்தல் நிலவரம் காணப்படுகிறது. தற்போதைய எதிர்வு கூறல் முகனூல் பார்வையாளர்களினை கொண்டே கூறப்படுகிறது.

இந்த எதிர்வு கூறல் எவ்வளவு சாத்தியம். யுத்த முடிவு தமக்கே வெற்றி என்று கோத்தாவும் குடும்ப ஆட்சி முடிவு தமக்கே வெற்றி சஜித்தும் இதற்கிடையில் அனுர தம்பணியை கச்சிதமாக நகர்த்துகிறார்.

ஏனோ படித்த பலர் இவருக்கு பின்னால் இருந்தாலும் கீழ்மட்ட மக்கள் வாக்கு எங்கே என்பதே கேள்விகுறி. மக்கள் தாம் தேர்ந்தெடுக்கும் யாராலும் நன்மை இல்லாத நிலை என்ற எண்ணத்தில்தான்.

இலஙகை எனும் திருநாட்டில் யார் வந்தாலும் விலைவாசி கூட்டி மக்களின் வாழ்வில் விளையாடுவோரே இவர்கள். சரியான வேட்பாளர் தாம் விடும் விஞ்ஞானபவத்திற்கு ஏற்ப நடப்பதுமில்லை.

வெறும் வாய்ப்பேச்சில் மட்டுமே ஆட்சி தொடர்கிறது. மக்கள் நலன் சார்ந்து செயற்பட்ட அரசு அமைந்ததில்லை. அவ்வாறு அமைய மேலைத்தேய நாடுகள் விடப்போவதுமில்லை. 

No comments:

Post a Comment

நட்டமடையும் இலங்கை

  இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ போன்ற பிரதான அரச நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2025 இல் ஏன் இவ்வளவு ப...