22/04/2018

மனதில் வலி இருப்போர் மத்தியில் வெளிப்பூச்சு மினுங்குது.

முள்ளி வாய்க்கால். எல்லோரும் எல்லா தமிழனும் உச்சரிக்கும் சொல். இருக்கும் போது திட்டினோம், ஒழித்தோம், நாட்டைவிட்டும் அனுப்பினோம்.

இன்று இருப்பிற்கு, பணத்திற்கு, பதவிக்கு அரசியலிற்கு முள்ளிவாய்க்கால் தேவைப்படுகிறது.

ஓடியோருக்கு, ஒழித்தோருக்கு, பதவி பட்டம் தேவைப்படுவோருக்கு, வெளி நாட்டு வாழ்க்கைக்கு, அதற்கு மேல் இந்திய தமிழ் நாட்டு அரசியல் சினிமாவிற்கும் தேவைப்படுகிறது.

அனுபவித்து சித்திரவதைப்பட்டு, புற்று நோயால் வேதனைப்பட்டு, உறவிழந்து, வீடிழந்து வாழ்வை வாழ உழைப்போர் முள்ளிவாய்காலில் தவறவிட்ட தலைமையை தேடுகின்றனர். தமக்கான கலாசாரத்தை, பாதுகாப்பை, தேடுகின்றனர்.

இவர்கள் மத்தியில் போக்கில் மக்களை குழப்பி தமது வாக்கு வங்கிக்கு ஓட்டுக்களை சேர்க்கும் நிகழ்வுகள். களைத்தவனுக்கு மீண்டும் மீண்டும் களைப்பையை கொடுத்து கெடுக்கும் மனிதரானார்கள்.

அவர்கள் எழுந்தால் தட்டி தடவி படுக்க வைக்க எதிரியை துரோகியை நாடி தம்மை நல்ல போர்வை போர்த்தி காட்டுவோர் கூட நாளை முள்ளி வாய்க்காலில் கண்ணீர் நாடகம் போடுவதுதான் துயரப்பட்டவனுக்கு மிகுந்த வலி.

முள்ளிவாய்க்கால் தமிழர் எல்லாவற்றையும் தவறவிட்ட இடம். அங்கு வேதனைப்படும் உள்ளங்கள் பலது வரும். வெந்த புண்ணில் வெல் பாச்சுவது போல் முகனூலில் கொண்டாட செல்லதீர்கள். வேதனையின் களம்.

எல்லாம் இழந்த இடத்திற்கு ஏதிலிகளாக ஒரு நாள் சென்று வாருங்கள்.,, போக்குவரத்துக்கான பணம், தொலைபேசிகள், ஆடம்பர உடைகள், உணவு, நீர் இன்றி சென்று வாருங்கள் அபொழுதாவது நாம் ஒன்றிணைய சந்தர்பம் வரலாம்.


21/04/2018

நாட்டின் நிலமை எங்கே செல்கின்றது.



இன்று நாட்டின் நிலமை எப்படி இருக்கிறது. அதனால் மக்கள் நிலை அவர்களின் மன நிலை எப்படி என்று ஆராய்ந்தால் ஏனோ தானோ என்ற நிலை தோன்றியிருக்கிறது.

செல்வாக்கு நிறைந்தவர்களிற்கு எதனையும் செய்யக்கூடைய நிலையும் பணத்தால் அடையாளங்களையும் மறைக்கும் நிலை அதிகரித்தும் காணப்படுகின்றது.

செல்வாக்கு மிகுந்த நபர்களால் எதனையும் இலகுவாக சாதிக்க செய்ய முடிகின்றது. அவர்களே நிரபராதிகளையும் கூண்டில் அடைக்கவும் முடிகிறது.

யார் யார் எல்லாம் அடிபணிந்து குனிந்து நடக்கிறார்களோ அவர்களே வாழ்ந்து வரக்கூடிய நிலை காணப்படுகிறது.

எந்த ஒரு துறையிலும் அற்பணிப்பு மிக்கோர் இல்லை.  அற்பணிப்பு உள்ளோர் போல் பாசாங்கும் அதனை வைத்து பணம், பட்டம், பதவி சம்பாதிக்க முடிகிறது.

ஊரில் அல்லது ஊடகத்தில் யாரும் இதனை தட்டி கேட்க முன்வந்தாலே அவர்கள் நசுக்கப்படுகின்றனர்.

ஊழல் பற்றி பேசும், பெண்ணியம் பற்றி பேசியும் அதனை தாமே அதிகம் மேற்கொள்கின்றனர். எல்லாம் பாசாங்கு உலகம் என்ற நிலையில். அரச அலுவலர்களில் நேர்மையானரும் ஒதுங்கும் நிலை உருவாகியிக்கிறது.

இப்போது அற்பணிப்பு செல்வாக்கால் சோபையிழந்து போகின்றது. நாட்டின் நிலை என்பதை விட சிறுவர்கள் உகண்டா, ஏன் சிரிய குழந்தைகள் போல் வந்தாலும் ஆச்சரியத்திற்கு இல்லை.

11/03/2018

இலங்கையின் சிறப்புக்கள், வளர்ச்சிக்கு சாத்தியம்



ஆம் இலங்கையின் சிறப்பு வாழும் நிலைக்கான சூழல், வசதிகள், இயற்கை நிலைகள், கட்டுப்படுத்தும் வசதிகள், என ஒவ்வொன்றாக எடுத்தாலும் இலங்கை ஒரு சிறப்பு மிகு நாடுதான்.

இந்த நாட்டில் கடல் ஆகாய வளி மார்க்கங்கள் இன்னும் மெருகூட்டும். இப்படியான நாடில் ஏன் மக்கள் கடனாளி ஆனார்கள், ஏன் வாழ் முடியாயது தவிக்கின்றனர்.

காரணம் பலவும் கூறலாம் இதற்கு ஒரு சில காரணிகளே இந்த நிலைக்கு காரணம். மூவின மகள் மூவகை சமயம் இருந்தும் பிரச்சினை வருகிறது என்றால் யோசிக்கவேண்டியதுதான்.

இதனை தீர்க்க முடியாதா?? முடியும் என்றால் ஏன் இன்னும் அப்படி நடக்கவில்லை, என்று எல்லாம் எண்ண தோன்றும். எல்லாம் சுயநலன் சார்ந்த காரணிகள் இவற்றை எல்லாம் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

இத்தீவு சொந்த காலில் நிற்குமா? அதற்கு வளி இல்லையா?? இங்குதான் எல்லாமே இருக்கிறது.

தமது நீண்டகால் அரசியல் இருப்பை விரும்பும் அரசியல் வாதிகள் சுயமாக முடிவெடுக்க வேண்டும். ஒருதடவை ஆட்சி செய்தாலும் அவ்வாட்சி காலத்தில் நாட்டை அபிவிருத்தி செய்து சட்டத்தை இயற்றவேண்டும்.

தமது பொருளாதார இருப்பையும் தமது வியாபாரத்தையும் இலக்காக கொண்டு ராஜ தந்திர நடவடிக்கையில் ஈடுபடும் நாடுகளின் இயல்பில் இரு ந்து விடுபட வேண்டும்.

இறக்குமதிகளை முழுமையாக நம்பி இருக்கும் மக்களிற்கு உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் வகையில் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.

அடுத்து வரும் ஆட்சியாள் இவற்றை மாற்றம் செய்யாத வகையில் சட்டம் இருக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஓங்கி வளர்ந்தும் புல காட்சிக்கி தெரிந்தும் இன்னும் அதனை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காத இலஞ்ச ஊழல்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி பாரபட்சமின்றிய தண்டனை வழங்கவேண்டும்.

இவை சாத்தியமா என்றால் ஆம் என்பதே பதில். தற்போது இணைய மற்றும் செய்தி தணிக்கை என்பனவும் இந்த அவசர கால சூழலில் சாத்தியமான போது அவையும் இலகுவானதே. 

25/02/2018

இனி வருவார்களா முட்டாளாக்க.

அரசியல் என்பது மூன்றுமாதம் மக்களிடம் கெஞ்சி ஐந்து வருடம் மக்கள் கெஞ்சவைக்கும் ஒரு பரஸ்பர கெஞ்சல் விளையாட்டே அரசியல்

உள்ளூராட்சி தேர்தலிலும் அதுவே நடந்தது. இப்போது தேர்தல் முடிந்து 20 நாட்களாகியும் கட்சிகளுக்குள் இழுபறி நிலை முடியவில்லை.

இவ்வாறானவர்கள்  துரோகத்தனம், பழி வாங்கல்களிலும் ஈடுபட்டு ஒட்டுமொத்த வாக்களித்த மக்களுக்கும் தீமையே செய்வார்கள்.

மக்கள் தேவை என்ன இன்று மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினை என்ன அதற்கு தீர்வு என்ன என்பதை விட தங்கள் இருப்பு தொடர் நிலை முக்கியம் என வேட்பாளர்கள் பயணிக்கின்றனர்.

பிரதேசபையினால் செய்யக்கூடியதை செய்து முடிக்கவேண்டியதுதான். அதற்குள்ளும் மடமைத்தனத்தை பாவித்து நான்கு வருடத்தை அநியாயம் செய்யபோகிறார்கள்.

இவர்கள் இனி மக்களை தேடி வர போவதில்லை. அடுத்த தேர்தலின் போதே வருவார்கள் மீண்டும் முட்டாள்கள் ஆக்க.


28/01/2018

தீர்கதரிசியின் வார்தை விளங்காதவர்களா??

இந்த உலகம் மானிட தர்மத்தின் சக்கரத்தில் சுழலவில்லை . ஒவ்வொரு நாடும் தனது தேசிய சுய நலத்தையே  முதன்மைப்படுத்துகின்றது. மனித உரிமை, மக்கள் உரிமை, என்ற தார்மீக அறத்திலும் பார்க்க பொருளாதார, வர்த்தக நலன்களே இன்றைய உலக ஒழுங்கை நிர்ணயிக்கின்றன. ஆகையால் எமது போராட்டம் தார்மீக அறத்தினை சர்வதேச சமூகம் உடனடியாக அங்கீகரிகும் என நாம் எதிர்பார்க்க முடியாது. மேதகு வே.பிரபாகரன்.

இதனை எப்பவோ சொல்லியிருந்தும் மக்கள் ஏமாற்றும் இயல்புடையோரை நம்புகின்றனரா?

இல்லை வேறு தெரிவின்றி வாழ்கின்றனர். அதனை பயன்படுத்தியே இவர்கள் தமது அரசியலை நடத்துகின்றனர்.

ஒவ்வொரு நாடும் தமது தேசிய சுய நலத்திற்காக ஒன்றிணைந்தன. தமிழரின் போரை அழித்தன. தமிழரே உதவினர்.

தற்போது சேந்து ஒழித்த நாடுகள் தமது இருப்பிற்காக தமிழரை நாடுகின்ற போது அரசியல் வாதிகள் சுகபோகம் அனுபவிக்கின்றனர்.

கொத்து குண்டு போட்டாலும் அணுகுண்டு போட்டாலும் தமது தேசிய பொருளாதாரத்திற்கு பலன் இல்லாவிட்டால் யார் செத்தாலும் ஏனைய நாடுகளிற்கு எந்த சிக்கலும் இல்லை.

இதனை தமிழினத்தின் தலைவர் ஒருசில வார்த்தைகளில் உலகின் தன்மையை சொல்லியிருக்கிறார்.

இனியாவது மக்கள் தெளிவடைவர்.

24/01/2018

புலம் பெயர் தமிழர்கள் பிரிகின்றார்களா??

புலம் பெயர் தமிழர்கள் பிரித்தாளும் நடவடிக்கையில் செயற்படுகிறார்களா? இல்லா ஈழத்திற்காக குரல் கொடுக்கின்றனரா?

மக்கள் குழம்பிய நிலையில் இந்த நடவடிக்கைகளுக்கு காரணம் என்ன? பிரித்தானிய தமிழரும் அவுஸ்ரேலிய தமிழரும் எதிர்க்க தமிழர் அதிகம் வாழும் கனடாவில் இல ங்கை பாரளுமன்ற உறுப்பினர் சென்று உரையாற்றி வந்திருக்கின்றார்.

யாருடையா உரையாடலகா  இருந்தாலும் தமிழர்களின் ஒரே தலைவன்  பிரபாகரனையோ அல்லது உயிர்காத்த காவல் தெய்வங்கள் மாவீரர்கள் போராளிகள் பற்றியதாக இருக்கின்றது.

இங்கு சிலரின் இருப்புக்கும் சிலர் தம்மை முன்னிறுத்தவுமே இவ்வாறு செயற்படுகின்றனர்.

"புலிகளை நினைக்கும் போது வருவது என்ன அச்சம் எலிகளைப் போல் ஓடி ஒழிப்பதுதான் மிச்சம்" எனும் பாடல் அடிகள் இங்கு பலருக்கு பொருந்தும்.


இப்போது தமிழர்களினது நிலை எப்படி இருக்கிறது என்று பார்த்தால் தகப்பன் இல்லாத பிள்ளைகளையும் தாயையும் போலவே ஈழமும் தமிழரும்.

இந்த நிலைக்கு பிள்ளைகள் ஒன்றிணைய வேண்டும். இல்லாது விட்டால் வளம்  எல்லாம் சுரண்டப்பட்டு விடும்.

புலம் பெயர் அமைப்புகாலும் புலம் பெயர் தமிழர்களுமே இதற்கு சரியான தீர்வை வைக்கமுடியும். அவர்களிடமே சாவி இருக்கிறது.

அதனை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். 

22/01/2018

பிணைமுறி சிறு விளக்கம்.

பிணைமுறி என்றால் என்ன?

பிணைமுறி என்பது அரசுக்கு கடன் பெற்றுக்கொள்ளும் வழிமுறையாகும். மின் உற்பத்தி நிலையமொன்றை நிர்மாணிக்க நிதி தேவைப்படுகின்றபோது, அரசு மத்திய வங்கியினூடாக பிணைமுறி ஏலம் வெளியிடப்படுகின்றது. அப்படியென்றால் நிரந்தர வைப்புச் சான்றிதழொன்று என நினைத்துக்கொள்க. அவற்றை சாதாரண மக்களைப் போன்றே வங்கிகளும் கொள்வனவு செய்யமுடியும். அதற்காக வட்டியும் வழங்கப்படுகின்றது. இதனால் பிணைமுறிகளை கொள்வனவு செய்வது மக்களைப் போன்றே, வங்கிகளுக்கும் முதலீட்டு உபாயமொன்றாகும்.

வங்கிகள் இந்த பிணைமுறிகளை கொள்வனவு செய்வதேன்? என நீங்கள் நினைக்கக்கூடும். வங்கிக் கிளைகளுக்கு கிடைக்கப்பெறும் வைப்புகளை கடன் கொடுத்தே அவர்கள் இலாபமீட்டுகின்றனர். அதேபோன்று, அவர்கள் இலாபமீட்டும் எதிர்பார்ப்பில் கடன் வழங்குகின்றனர். கடன் வழங்கியும் எஞ்சியிருக்கும் பணத் தொகையை கிடப்பில் வைக்காது அதனை பிணைமுறிகளில் முதலிடுகின்றனர். பிணைமுறிகளென்பது ஒரு வருடத்திற்கு மேற்பட்ட கால எல்லையைக் கொண்டவைகள். திறைசேரி பில்கள் வருடமொன்றுக்கு குறைவான கால எல்லையைக் கொண்டதாகும். 

எக்ஸ் என்பவர் ஒரு இலட்சம் செலுத்தி பிணைமுறியொன்று கொள்வனவு செய்தார் எனக்கொள்வோம். காலம், ஒரு வருடம் எனின் ஒரு வருட முடிவுக்குள் கடனையும் வட்டியையும் திருப்பிக் கொடுப்பதற்கு மத்திய வங்கி சான்றிதழொன்று வழங்கும். அரசாங்கத்திற்கு பணம் வழங்கினால், அரசு பணம் அச்சிட்டாயினும் கடனை திருப்பிச் செலுத்துமென்ற நம்பிக்கை கடன் கொடுப்பவரிடம் இருக்கும். பிணைமுறியில் பணத்தை முதலீடு செய்வது சவாலற்ற முதலீட்டு வழி முறையாகும். இதனால், அதிகமானோர் பிணைமுறியில் முதலிடுகின்றனர்.

எக்ஸ் என்பவரிடம் ஒரு இலட்சம் பெறுமதியான பிணைமுறி சான்றிதழொன்று இருப்பதாக கொள்வோம். பிணைமுறிக்கு உள்ள கேள்வி மற்றும் வழங்கலுக்கேற்ப சந்தையில் பெறுமதி கூடவோ, குறையவோ முடியும். அதை நாம் இவ்வாறு நோக்குவோம். சாதாரண தேங்காயொன்று 50 ரூபாய்கள். அசாதாரண தேங்காயொன்றின் விலை 60 அல்லது 70 ரூபாய்களாக இருக்கலாம். அதேபோன்று, 30 அல்லது 40 ரூபாய்களாகவும் இருக்கலாம்.

மத்திய வங்கி பிணைமுறிகளை விற்பதையே ஏலத்தில் மேற்கொள்கின்றது. அது 100 வீதம் சுதந்திரமான ஏல விற்பனையாகும். அவற்றில் மத்திய வங்கி ஆளுநருக்கு கலந்துகொள்ள முடியாது. காரணம், எக்காலத்திலுமே மத்திய வங்கி ஆளுநர் என்பது அரசியல் நியமனமாகும். ஏலத்தை வழிநடத்துவது பிரதி ஆளுநர் ஒருவராகும். இது தவறின் நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும் என்பதால் பாதுகாப்பாகவே முன்னெடுக்கப்படுகின்றன. யாருக்கும் இவற்றில் விரல் நுழைக்க முடியாது.

இப்போதுதான் கதையின் சுவாரஷ்யமான பகுதி வருகின்றது. அர்ஜுன் மஹேந்திரன் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படுகின்றார். அவர் சிங்கப்பூர் பிரஜையொருவர். ஒரு நாட்டின் பணத்தாள்களில் கையொப்பமிடுவதும் நிதியமைச்சரும் ஆளுநருமேயாகும். இலங்கையின் பணத் தாள்களில் சிங்கப்பூர் பிரஜையொருவரே கையொப்பமிட்டுள்ளார். அப்பதவிக்கு பொருத்தமான இலங்கையர் ஒருவர் இருக்கவில்லையா? அது பெரும் பிரச்சினையாகும்.

மத்திய வங்கியின் ஆளுநர் ஒருவரின் குடும்பத்தவர்களுக்கு பிணைமுறி கொடுக்கல் வாங்கல் களுடன் தொடர்புபட்ட நிறுவனங்களை நடத்திச்செல்ல அனுமதியில்லை. எனினும், அர்ஜுன் மஹேந்திரனின் மகளைத் திருமணம் செய்த அர்ஜுன் அலோசியஸ் அவ்வாறானதொரு நிறுவனத்தை நடத்திச் சென்றார். அதுவே பெர்பெஷுவல் ட்ரெஷரீஸ். இங்கிருந்தே பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.

பிணைமுறி ஏலமென்பது சிக்கல்கள் நிறைந்த கதையாகும். அதனால் இந்த கதையை விற்பனை நிலையமொன்றாக ஒப்பிட்டு பார்ப்போம்.

அர்ஜுன் மஹேந்திரன் என்பவர் மத்திய வங்கி எனும் விற்பனை நிலையத்தின் தலைவராவார். விற்பனை நிலையத்தில் பிணைமுறி எனும் தேங்காய் விற்பனை நடைபெறுகின்றது எனக் கொள்வோம். அர்ஜுன் மஹேந்திரனின் மருமகன் தேங்காய் வியாபாரி. நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப்போன்று, தேங்காய்களின் விலை காலத்திற்கு காலம் கூடிக் குறையும். 

இந்த பிணைமுறி எனப்படும் தேங்காய்களின் விலை 100 ரூபாய்களாக இருந்து, 120 ரூபாய்கள் வரை விலை அதிகரித்த காலம் எனக் கொள்வோம். விற்பனை நிலையத்திற்கு நல்லவை எண்ணும் தலைவராயின் தேங்காய்களை 120 ரூபாய்களுக்கு விற்று இலாபமீட்டுவார். எனினும் அர்ஜுன் மஹேந்திரன் பிணைமுறி ஏலம் எனப்படும் தேங்காய் ஏலத்தில் 120 பெறுமதியான தேங்காயை தனது மருமகனுக்கு 80 ரூபாய்களுக்கு வழங்கும்படி பிரதி ஆளுநரை காட்டாயப்படுத்துகிறார். ஏலம் நடைபெறும் இடத்திற்கு செல்ல அனுமதியற்ற நிலையிலும், அங்கு சென்று காட்டாயப்படுத்தி, 120 பெறுமதியான தேங்காயை 80க்கு விற்பனை செய்கிறார். இதுபோன்று மில்லியன் கணக்கான தேங்காய்களை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தில் இருந்து மருமகனுக்கு விற்பனை செய்கிறார். அவற்றை அர்ஜுன் மஹேந்திரனின் மருமகன் 120 ரூபாய்களுக்கு விற்பனை செய்கின்றார். தேங்காயொன்றுக்கு 40 ரூபாய்கள் வரை இலாபமீட்டுகின்றார். மில்லியன் கணக்கான தேங்காய்கள் என்பதால் மருமகனின் இலாபம் பில்லியன் கணக்காகும் என்பதை நான் கூறித் தெரியவேண்டியதில்லை. இந்த இலாபமானது 4000 ஊழியர்களையும், 200 கிளைகளையும் கொண்ட கொமேர்ஷல் வங்கியின் மொத்த வருமானத்தையும் விடவும் அதிகமானதாகும். அவ்வளவு இலாபத்தையும் பெற்ற மருமகனின் நிறுவனம் 20க்கு 20 கட்டிடமொன்றையும் 20க்கு குறைந்த ஊழியர்களுடன் ஒரு கிளையையும் கொண்டதாகும்.
நீங்கள் தலைவராக இருக்கும் விற்பனை நிலையத்திலிருந்து 120 ரூபாய்கள் பெறுமதியான தேங்காயை உங்கள் உறவினறொருவருக்கு 80 ரூபாய்களுக்கு விற்பனை செய்தால், விற்பனை நிலையம் நட்டத்தை எதிர் கொள்ளுமா? இல்லையா? இப்போது நீங்கள் இலாபமீட்ட வேண்டுமெனின் அதற்கான மாற்று வழியென்ன? உங்களது விற்பனை நிலையத்தில் மீன் டின் ஒன்றை 150 ரூபாய்களுக்கு விற்பனை செய்தால், அதனை 200 ரூபாய்களுக்கு விற்பனை செய்தே, தேங்காய் விற்பனையில் ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்யலாம். அதேபோன்று, விற்பனை நிலையத்திற்கு மீன் டின் வழங்குபவரிடம் 130க்கு பெற்ற மீன் டின்னை இப்போது 110 ரூபாய்களுக்கு பெற்று, 200 ரூபாய்களுக்கு விற்பனை செய்தே தேங்காயில் இழந்த நட்டத்தை ஈடுசெய்யலாம்.
விற்பனை நிலையத்திற்கு மீன் டின் வழங்குபவரைப் போன்றே, பிணைமுறிகளுக்கு பணம் முதலிடுபவர்கள். மக்களும், வங்கிகளும் மேலதிக பணத்தை பிணைமுறியில் வைப்பிலிடுகின்றனர். அதற்காக திருப்பிச் செலுத்தும் தொகை குறைவடைகின்றது. 130ரூபாய்களின் மீன் டின்னுக்கு 110 வழங்குவது போன்று. அதேபோன்று, மத்திய வங்கியில் இருந்து ஏனைய வங்கிகளுக்கு கடன் வழங்கும்போது, திருப்பிப் பெறும் வட்டி வீதத்தை அதிகரித்தல். அது, 150 ரூபாய்கள் பெறுமதியான மீன் டின் ஒன்றை 200 ரூபாய்களுக்கு விற்பதைப் போன்று. நிதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள வங்கிகளுக்கு மத்திய வங்கி அதிக வட்டித் தொகைக்கு கடன் வழங்குகின்றது. அதிக வட்டித் தொகையை கொடுத்து கடன் பெறும் வங்கிகள், மக்களுக்கு அதிக வட்டிக்கு கடன் வழங்குகின்றது.
மத்திய வங்கியில் நடைபெற்ற ஊழலால், சாதாரண மக்கள் வங்கிகளில் பெறும் கடன்களுக்கான வட்டித் தொகையும் அதிகரித்துள்ளன. 150 ரூபாய்களின் மீன் டின்களை 200 ரூபாய்களுக்கு விற்பனை செய்வதைப் போன்று. பொது மக்கள் வங்கிகளில் பணத்தை வைப்பிலிட்டால் வழங்கப்படுகின்ற வட்டித் தொகையும் குறைவடைந்துள்ளது. அது, விற்பனை நிலையத்திற்கு 130 ரூபாய்களுக்கு மீன் டின் வழங்கியவருக்கு 110 ரூபாய்கள் கொடுப்பது போன்றாகும்.

இப்போது, விற்பனை நிலையத்திற்கு மீன் டின்களை வழங்கிய வியாபாரி நட்டமடைந்துள்ளார். ஏன்? 130 ரூபாய்களுக்கு விற்பனை செய்த மீனுக்கு, கிடைப்பது 110 ரூபாய்களே. இன்று அதுபோன்ற நிலைமையே ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மத்திய வங்கி வழங்கவேண்டிய தொகையைவிட குறைவாகவே வழங்குகின்றது. நாட்டின் மில்லியன் கணக்கான ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய வட்டி வீதம் குறைவாகவே வழங்கப்படுகின்றது. சிங்கப்பூர் பிரஜையொருவரின் மருமகன் இலாபமடைய முழு நாட்டு ஊழியர்களினதும் வட்டி வீதம் குறைவடைந்துள்ளது. அந்த நட்டத்தை சரிசெய்ய வங்கிகளில் கடன் பெற்றவர்களின் வட்டிவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இலகுவாக கூறுவதென்றால், அர்ஜுன் மஹேந்திரனின் மருமகன் பெற்ற இலாபத்தால் நட்டமடைந்த மத்திய வங்கியின் கணக்குகளை சீர்செய்ய பொதுமக்கள் முதுகுகளில் சுமையேற்றப்படுகின்றது. மத்திய வங்கி அடைந்த நட்டத்தை சீர்செய்ய இன்னும் 7 அல்லது 8 வருடங்கள் செல்லவேண்டியிருக்கின்றது.

பொய்க்கு உண்மையாயிருத்தல்

 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இத...