01/05/2018

ஆயுத மௌனிப்பும் கொடிய யுத்த ஆரம்பமும்





ஆயுத யுத்தம் 2009 உடம் மௌனித்ததும் பல யுத்தங்கள் தொடங்கின. ஆயுத யுத்தத்தில் வாழ்ந்த மக்கள் சந்தோசமாக வாழ்ந்தனர். இப்போது தொடங்கியிருக்கும் யுத்தங்களில் இருந்து பாதுகாப்பாக இருந்தனர்.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கூட இந்த கொடுரங்களில் இருந்து பாதுகாப்பாக இருந்தனர். 

ஆய்த யுத்தம் முடிந்ததும் கொள்ளை, லஞ்சம், ஊழல், செல்வாக்கு அவை எல்லாவற்றையும் விட போதை வஸ்து அமோக விற்பனை, விபச்சார இடங்கள் என்பன அதிகரித்தன.

ஆரம்பத்தில் இவற்றிற்கு ஆயுதம் மூலம் இனம் மத கலாச்சார வெறுபாடின்றி வழங்கிய தீர்ப்பு குறைய காரணம்.

ஆனால் தற்போது சலுகை செல்வாக்கு, அரசியல் பிரமுகர்கள் பணம் என அதிகார வர்க்கத்தினரிடம் இருப்பதால் இந்த யுத்தம் வளர்ச்சியில் யாரும் தடை போட முடியவில்லை.

கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் பிறாடோ, பென்ஸ் போன்ற உயர்ரக அதிகார வர்கத்தினரின் செல்வாக்கில் பயணிக்கும் போது எளியோர் பார்த்து பெருமூச்சு விடும் நிலை.

தட்டி கேட்போர் தட்டப்பட்டும், சிலருக்கு பொக்கெற் நிரப்பபடும், செல்லும் போது சட்டம் காக்கும் பொலிசார் இயால கொடுமையால் தாமும் வாங்குவதன்றி வேறு வழிதெரியாது தம் துறையயே கேவலப்படுத்தும் நிலை.

வளர்ந்திருக்கும் பதவி, அதிகார செல்வாக்கு யுத்தம் அழிக்கப்பட சிறந்த அரசியல் தலைவர்களின் வருகை முக்கியம்.

இங்கு இருக்கும் தலைவர்கல் பலர் அறிக்கை மட்டும் விடுவோராயும், தமது செல்வாக்கு அதிகாரத்தை மேம்படுத்துவோராயும், அதிகார போட்டி போடுவோராயும் இருக்கின்றனர்.

இப்போட்டி போட்டுகொள்ளும் இவர்கள் பொது இடத்தில் போதை பற்றியோ மக்கள் தேவைப்பாடு பற்றி பேசுவதன்றி தமது அதிகார பலத்தை காட்டி அடக்க நினைக்கின்றனர்.

இந்த போட்டிகள் யாவும் ஆயுத யுத்த மௌனிப்பை வரவேற்பதோடு அதனை விழா எடுத்து கொண்டாட தவறவுமில்லை.

ஆனால் ஏளை எளியோர் இதில் பங்கெடுத்து தமக்கு தாமே குழிதோண்டுவதுதான் அதிக வேதனை.

இந்த யுத்தங்கள் கொடுரமாக் இலங்கையே சிக்கி தடுமாறும் போது யாராலும் காப்பத்த முடியாது என்பதும் நிதர்சன உண்மை.

மக்கள் விழிப்பும் சரியான திட்டமிடலும் சிலவேளைகளின் சரியான தலைவர்களினை தேர்ந்தெடுத்து நல்ல பாதைக்கு வழிவகுக்கலாம்.

கலாச்சார அழிவும் கூட மீண்டும் ஆயுத யுத்ததால் மாத்திரமே காப்பார்றும் நிலை வரபோகுது.

எல்லாம் அவன் செயல்

No comments:

Post a Comment

நட்டமடையும் இலங்கை

  இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ போன்ற பிரதான அரச நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2025 இல் ஏன் இவ்வளவு ப...