14/12/2018

தமிழனின் மூளையில் இலங்கை.

சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த இலங்கை அரசியலில் மாற்றம் ஏற்பட்டு எல்லோருமே ஏங்கித்தவித்த போது அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பெருமை தமிழ்தேசிய கூட்டமைபிற்கே என்றால் மிகையாகது.

அதிலும் ஒவ்வொரு வளக்கிலும் முன்னின்று பேசி வெற்றி பாதையில் நடத்திய சுமந்திரன் பெருவெற்றி தலைவனேதான். 

இந்த வழக்கை தொடுக்க முடியும் என்றும் வெற்றியீட்ட முடியும் என்றும் ஆலோசனை வழங்கி வளி நடத்தவும் ஒரு சட்டவாளர் இருக்கார் என்றால் அதுவும் தமிழன் என்றால் தமிழிற்கு பெருமைதான்.

இந்த இடத்தில் ஒவ்வொரு தமிழனும் பெருமை படவேண்டியது. ஆனால் சேர் பொன் இராமநாதன் நடந்ததைப்போல் நடந்து கொள்ளாவிட்டால் தமிழின் பெருமை இன்னும் உச்சமே.

அதில் சுமந்திரனின் ஆளுமை தங்கியிருக்கிறது. மீண்டும் வரலாறு ஆக கூடாது

08/11/2018

கொழும்பு குழப்பம் யாருக்கு சாதகம்.

கொழும்பு குழப்பம் யாருக்கு சாதகம் என்று கேட்டால் நிட்சயமாக சிறு அரசியற்கட்சிகளுக்கும் சிறுபான்மை யினருக்குமே. இன்று நடக்கும் இந்த அதிகார போட்டி மிகவும் ஒரு கீழ்த்தரமான முடிவெடிக்க தெரியாத தலைமைகள் என்பையும் சுட்டி நிற்கிறது.

இந்த வேளை புலம்பெயரும் ஆசை கொண்டோரும் புலம்பெயர்ந்து நிரந்தர தீர்வின்றி இருப்போருக்கும் இது நெஞ்சில் பால் வார்த்திருக்கும்.

அதேவேளை #சீனா, ஈரான் பாகிஸ்தான் போன்ற நாடுகளிற்கும் இதில் மிகுந்த வெற்றியும் கூட.

இவ்வாறு இந்த நிலை சென்றால் இலங்கையில் தமிழரல்ல ஏழை பௌத்த சிங்கள மக்கள் கூட வாழமுடியாது போய் ஊமைகள் வாழும் நாடாக மாறும்.

இங்கு ஆட்சியாளர்களாக வருவோர் நாட்டின் அபிவிருத்தியை பார்பதை விடுத்து மன்னராட்சி போல் தம் சுயத்தை வளர்க்கிறார்கள்.

#வெளிநாடு செல்வோர் கனவு நிறைவேறட்டும். அங்காவது குடில் போட்டு தமிழன் வாழ்ட்டும். 

12/07/2018

தேர்தலின் போதா வருவார்கள்




தேர்தலின் போதா வருவார்கள். இவ்வளவு காலமும் எங்கே? நீங்கள் ஓய்வு எடுக்கிறீர்களா இல்லா உங்கள் பயணம் தேர்தல் காலத்திலா

இவ்வாறு கேட்க தோன்றுகிறது எமது அரசியல் வாதிகளை பார்த்து என பொது சனம் விசனம் கொள்கின்றனர். இந்த அரசியல் வாதிகள் காலம் காலமாக யாரவது ஒருவர் தலை தூக்கும் போது அதனை தட்டி வீழ்த்த முன்வருவது போல் ஊக்க படுத்த வருவதில்லை.

ஏனைய இலங்கை கட்சிகள் தமது இனம் மொழி மதம் சார் கொள்கையில் ஒன்றாக பயணிப்பர். ஆனால் எமது அரசியல் வாதிகளோ குழப்பி பிரிந்து செல்வார்கள்.

ஒற்றுமையாக வர இருக்கும் கட்சிகளை ஒட்டு குழு என்றும், அரச கூட்டணி என்றும் பிரித்து பேசி செல்வதில் உள்ள இவர்கள் சேர்பதில் ஒரு போதும் ஆர்வம் காட்டவில்லை.

இவர்களிற்கு நன்றாகவே #தெரியும் தாம் அரசியல் நடத்தவோ தம்மை அடையாள படுத்தவோ #புலம்பெயர் அமைப்புகளிடம் இருந்து பணம் பெற முடியாது என்றும் தெரியும்

அவர்களின் சுயனலத்திற்கு ஒட்டு மொத்த மக்களின் சுதந்திரத்தினையும் எல்லோருக்காக வீரகாவியமானோரும் கேலியாக போயிருக்கிறது. இதற்கு மக்கள் சேர்ந்து போவதே வீழ்ச்சிக்கும் காரணம். எல்லாம் காலம் பதில் தரும் என்பது முட்டாள்தனமானது....

12/06/2018

முரண்பட்ட குடும்பத்தில் புகுந்த தளபதி. கணவர்கள் புலம்பல்








கணவன் மனைவிக்கிடையில் குடும்ப தகராறு ஏற்பட்டால் மூன்றாம் நபர்கள் புகுந்துவிடுவது இலகு. அதன் பின் அந்த பெண்ணிற்கு அன்பு ஆதரவு பணம் இவை கிடைக்கும் போது முழுவதுமாக அப்பெண் மாறிவிடுவாள். இது பெரும்பாலும் குடிகார ஆண்களின் வீட்டில் இடம்பெறுவதுண்டு.

அவர்கள் குடித்து விட்டு தம்மை யாரும் புடுங்கமுடியாது, தானே அறிவாளி நேர்மை கௌரவம் என மதுவில் மார்தட்ட அவர் மனைவியின் நடவடிக்கை வேறு ஒருவருடன் உல்லாசமாக இருக்கும்.

இத்தவறிற்கு காரணம் அந்த ஆடவனே தவிர புகுந்த மற்றவனோ, அல்லது பெண்ணோ இல்லை. அப்பெண் வாழ்வதற்கு தேவையானை கிடைத்த இடம் எதுவோ அங்க அவள். பழமரம் தேடும் பறவைபோல்,

இன்று குடிகாரர் போல் இருக்கும் தமிழ் அரசியவாதிகள் நிலையும் மக்கள் நிலையும் இவ்வாறு இருக்க துரோகிகள் எதிரிகள் என்றோர் மக்களின் மனங்களில் புகுந்தனர். இது ஒரு சாதாரண உளவியல்தான்.

இதனை பயன்படுத்தி அன்பை சூறையாடிய இராணுவ தளபதிக்காக அழுவதும், தான் வீரனாக இருந்து தான் அழுவது தெரிய கூடாது என்று கறுப்பு கண்ணாடி வேறு அணிந்துள்ளார்.

ஒட்டு மொத்தத்தில் வாய்ச்சொல் வீர அரசியல் வாதிகளை விட மிக அன்னியோன்னியமாக வாழ்ந்திருக்கிறார்கள். இச்சம்பவம் விமர்ச்விக்கவோ அல்லது முகனூலில் லைக் கொமற் அதிகரிக்கவோ இல்லை.

சிந்திக்கவும் விட்ட தவறுகளை நிவர்த்திக்கவும் இழந்த அன்பை அதிகரிக்கவும் வேண்டும்.

தேர்தலில் வாக்கு எமக்கே என்று புலம்பும் உங்களுக்கு விவாகரத்து வழங்கி கள்ள கணவனுடன் போவது போல் போகும் போது புரியும். அதற்கு நேற்றய மழையில் முளைத்த மொட்டுக்கு ஆசனம் கிடைத்ததும் நினைவு கூரத்தக்கது.

எல்லாம் போனபின் அணை போட முடியாது. வாழத்துக்கள் அரசியல் வாதிகளின் முடிவிற்கும் தமிழ் மக்கள் மாற்று மொழியிலாளர்களோடு ஒன்றிணையவும் என கூறி முடிப்பதே சரியாய் இருக்கிறது.




29/05/2018

தனியார் வங்கி தலைவரை உருவாக்குமா???


தனியார் வங்கியின் விடயம் எல்லோரையும் உணர்ச்சி பொங்க வைத்ததாக இருந்தது. இந்த நடவடிக்கை பிறருக்கு பாடமாகுமா?? இல்லா சிரிப்பாக விளையாட்டாக மாறுமா??? இந்த சந்தேகம் ஆரம்பத்தில் இருக்க வாய்ப்பில்லை.

அவ்வளவிற்கு முகனூல் கலங்கி கலக்கிக்கொண்டிருந்தது. வங்கி கணக்கு மூடப்பட்டன. அதனை சிலரே செய்தனர். மிகுதி பேர் என்ன செய்வது என்ன நடக்கிறது என அறிய வாய்ப்பு குறைவாக இருந்தது.

எந்த பத்திரிகையும் கொட்டை எழுத்தில் பிரசுரிக்கவில்லை. வானொலிகளும் இதனை அதிகளவில் கூறவில்லை. அதற்கு மேல் கற்றோர் பலரும் இணைய உலவிகளாக இருக்கும் பலரும் இதனை கைக்கொண்டனரா என்றால் அதுவும் சந்தேகமே..

இத்தனைக்கும் மேல் இது ஒரு சிறந்த யுத்தமாக இருந்தாலும் இந்த யுத்தத்தை முன்னெடுத்து செல்ல யாரும் முன்வரவில்லை. அந்த முன்வருகை மிக முக்கியமானது.

இந்த நடவடிக்கை ஒரு தொடராக இடம்பெறவேண்டும். அப்போதுதான் இதன் தாக்கம் ஏனையோரையும் அதிகளவில் தாக்கும். இந்த நடவடிக்கையின் followup இல்லாமை ஏளனத்தையும் கேலியையும் ஏனையோருக்கு எதிராக உணர்ச்சி வசப்படும் போதும் ஏற்படுத்தும்.

அது ஒட்டுமொத்த இனத்தையுமே பாதிக்கும். எனவே ஒரு நடவடிகை எடுக்கும் போது அதனை தொடர்ந்து செய்யும் நோக்கில் எடுக்கவேண்டும். பிறர் பொறுப்பெடுப்பார்கள் என்று விடாது செயலில் இறங்க வேண்டும்.

அப்போது சிலவேளை ஒரு தலைவன் உருவாகலாம். அந்த அகிம்சை போராட்டாம் வெல்ல வாய்ப்பும் அதிகம் இருக்கும். அந்த தலைவன் ஒன்றின் தொடர் நடவடிக்கையாலேயே உருவாக முடியும்.

பொறுபதிலும் தொடர்வோம்.

14/05/2018

போரின் பின்னானா அரசியலில் மாணவர்கள்



இன்று மூத்த அரசியலிற்கான ஓய்வு மணிகள் அதிகளவு இளைஞர்களினால் அடிக்கப்படுகிறது. இது மூத்தவர்களிற்கு சரியாக விளங்குகிறது.

ஆனால் இந்த மூத்த அரசியல் வாதிகளின் அனுபவம் இலகுவாக முறியடித்துவிடுகிறது. அதில் இளைஞர்கள் இலகுவாக வீழ்ந்து விடுகின்றனர்.

இதில் பல்கலைகழக மாணவர்கள் ஏராளம். மாடு கேட்டு நிற்போர் கோழி கொடுத்ததும் அடங்கி விடுகின்றனர். இவர்களிற்கும் பிடிமானம் ஏதும் தேவைப்படுகிறது.

இவர்கள் கூட ஒரே தடவையில் எல்லாம் பெறவேண்டும் என்று நினைப்போராகினர். இன்றய மாநகர சபை உறுப்பினர் தர்சானந் கூட மூத்த அரசியல் வாதிகளின் அனுபவத்தில் அடங்கி போனவரே.

தற்போதைய மாணவர் ஒன்றிய தலைவர் கிருஸ்ணமேனனின் நடவடிகை சிறப்பாக இருக்கிறது. இது இவ்ர்களின் இன்றய தேவை. அது அரசியல் நோக்கியது அல்ல.

இதுவே இவர் அரசியலில் ஏதும் தாக்கம் செலுத்தலாம் என இவருக்கு ஏதும் எலும்புகள் நிறம் தீட்டி காட்டப்படலாம். அதில் வீழ்வதும் வீழாமல் ஒரு அதிரடியாக அனைவரையும் தம் பக்கம் வரவழைத்து மக்களிற்கு ஏதும் செய்யலாம்.

இவர்களின் வேகம் விவேகம் எலும்பு துண்டுகளால் உடைவதுதான் வேதனை. தற்போதைய தலைவருடன் விலைபோவது குறைவடைந்தால் நிட்சயம் நியாம் கேட்கும் சக்தி அதிகரிக்கும்.

பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

08/05/2018

யாருக்கும் வித்தியாசம் இல்லை.

அரசியல் இருப்பே முக்கியம் எனும் இவர்கள் யாருக்கும் வித்தியாசம் தெரியாது தவிக்கும் மக்கள் ஏமாளிகளே.

எப்போது சிறு கூட்டம் பெருங்கூட்டத்தை ஏமாற்றும். இங்கு இந்த வீடியோ காட்சி அவரை மட்டுமில்லை. பலருக்கு காரணமாகும்.

பேரின வாதிகளின் கூட்டு இன்றி எதனை செய்ய முடியும்

பொய்க்கு உண்மையாயிருத்தல்

 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இத...