28/06/2021

Living together ஒன்றாக வாழ்தல்

 Living together. )ஒன்றாக வாழ்தல்)


இந்த சொல் நடைமுறை நமக்கு அதிக தூரம். இந்த முறை வெளி நாடுகள் சிலவற்றில் ஏற்று கொள்ள பட்டாலும் பல நாடுகள் கண்டும் காணாது விட்டிருக்கின்றனன.


இந்த வாழ்தல் முறை என்பது மனமொத்த இருவர் ஒரே வீட்டில் அல்லது ஒரு அறையில் ஒன்றாக வாழ்தல். இதில் திருமணம் என்பது இருக்காது. ஆனால் புரிந்துணர்வின் அடிப்படையில் பின்னர் நடக்கலாம்.


ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடி அவர்கள் இருவரும் ஒன்றாக வாழ முடிவெடுப்பதாகும்.. பாலியல் வரை பகிர்ந்து கொள்ளப்படும் இந்த வாழ்க்கை முரையில்.


இதனை வெளி நாடு செல்லும் பலரும் மேற்கொள்கின்றனர். அது உழைப்பு, வருமானம், ஒரே வேலைத்தளம், குடும்ப நிலை போன்றன தீர்மானிக்கின்றன.


ஒரு மாத வாடகையினை பங்கு போடவும், துணை ஒன்று தேவை என்பதற்காகவும், பாலியல் தேவைக்காகவும் இந்த நடைமுறை பயன்படுத்தப்படுகிறது.


இங்கு இவர்களுக்கு திருமணம் முடித்த குடும்பம் பிள்ளைகள் சொந்த நாட்டில் இருப்போர் கூட இதனை கைகொள்வதனை காணக்கூடியதாக இருக்கிறது. 


இதனால் நன்மை தீமைகளும் உண்டு.


குழந்தை பேறு என்பது இல்லாது போகலாம், இங்கு இந்த வாழ்க்கை சில மாதங்கள் போக வேறொருவருடனும் தொடரலாம்..

விவாகராத்து என்பது இடம்பெற வாய்பில்லை.

விபச்சாரிகளின் உருவாக்கம் குறைவடையும் ஆனால் இந்த வாழ்க்கை கூட அவ்வாறே அமையும்.


 வாழ்க்கை செலவு குறைவடையும்.  வெளி நாட்டில் வாடகை செலவு அதிகம். இதனால் இப்படி கதைத்து பேசி முடிவெடுப்பார்கள்.


குழந்தை பேறு குறைவடைவதால் இனத்தின் நிலை கவலைக்கிடமாகும்

 இந்த நிலை காதல் எனும் போர்வையில் தற்போது தொடர்கிறது. ஏதோ அவரவர் மன நிலையில் இந்த வாழ்க்கை முறைதொடர்கிறது.


இதுவும் ஒரு கள்ள வாழ்க்கை. இந்த வாழ்க்கை முறை ஒருவரை 50 வயதிற்கு பின் அதிகமாக மன உழைச்சலை கொடுக்கும். அப்போது மனவிரக்தியால் வாழவே பெரும் அவதிப்பட நேரிடும்.


இழமையில்சிரிச்சவன் முதுமையில் அழுவான். 




04/06/2021

வீசா கனவுக்கு நாட்டை அழிப்போம்

 இலங்கை வாழ் மக்கள் இன்று பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். இந்த நிலை ஆபிரிக்க நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சமனாகும். 


ஆபிரிக்க நாடுகளில் தொற்று நோய்தாகம், அரசியல் அராஜகம், ஆட்சியாளர் பெயர்களில் அனைத்து அரச நிறுவனங்களும், இராணுவ, பொலிஸ் அதிகார கையாளல், என நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் காணப்படுகின்றன.


இதனை போலவே இலங்கையும் மிகவிரைவில் மாற்றம் அடையலாம். அடைந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் ஆபிரிக்க நாட்டிற்கு சமனாக பல விடயங்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதை காணக்கூடியதாயிருக்கிறது.


தமது ஆட்சியில் நடைபெறும் ஊழலை மோசடியை வெளியில் வருவதை தவிர்க்க ஒரு அரசாங்காம் என்ன என்னெல்லாம் செய்யலாமோ அத்தையும் செய்துகொண்டிருக்கிறது.


இதில் மத தலைவர்கள், எதிர்கட்சிகள், எழுத்தாளர்களிற்கு உயிர் அச்சுறுத்தலும், பாச உயிர் பறித்தலும் இலகுவாக அவர்களை அடக்கிவிட முடிகிறது.


இதில் அப்பாவி மக்கள் மீது அதிகார துஸ்பிரயோகமும் கொள்ளை அடிக்க பயன்படும் வழியில் மகக்ளுக்கு சிறு தூவலும் இலகுவாக இருக்கிறது.


தம் பெயரில் தம் பரம்பரை எனும் ஒரு குறுகிய வெறி கடன்களையும் சுமைகளையும் ஏற்றி விட இத்தனையும் ஒரு விதமாக மாற்றி விட தம்மிடம் இருக்கும் அரசியல் ஆளணியினால் சட்டமாகக் படு பிரயத்தனம் நடைபெறும் போது ஏதாவது இலகுவக கையாழக்கூடிய பிரச்சினை ஒன்றை வெள்ளியிடவேண்டும். 


அந்த பிரச்சினையாக கொவிட் 19 இருக்கும் போது திரைமறைவு உச்சம் அடைந்து கனியாகிவிடும். 


என்ன ஒரு இலாபத்தை அடைய முடியும் வெளி நாட்டு வாழ்க்கையில் இலகுவாக சொந்த பந்தங்களில் காலில் விழுந்து சென்றுவிடலாம். 


எமெக்கென்ன வெளி நாடு முக்கியம். வீசா முக்கியம். 


அப்போ நாமும் பிரார்தனை பண்ணுவோம் நாடு எக்கேடு என்றாலும் படட்டும் என்று. 

 



15/05/2021

மறைக்கப்பட்ட துடுப்பாட்ட வரலாற்றில் தமிழ் பெண்.

 1950 இற்கு முன்பு கொழும்பு p. சரவணமுத்து விளையாட்டு மைதானத்தின் மைதான அமைப்பாளராக கடமை புரிந்தவர் " அருள் மேரி " என்றழைக்கப்படும் இந்த தமிழ் பெண் , சுமார் 40 ஆண்டுகள் இந்த கடமையில் இருந்துள்ளார் 



இவ்வாறான ஒரு பனியில் ஈடுபட்ட முதலும் muduvumaana பெண் இதுவரை இவர் மட்டுமே 


கிரிக்கட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சார் டொனால்ட் பிரட்மான் ஆசியாவில் விளையாடிய ஒரே ஒரு திடல் தமிழ் யூனியனுக்கு சொந்தமான இந்த சரவணமுத்து திடல் 


அவர் விளையாடிய போட்டிக்காக  மைதானத்தை பொறுப்புடன்  தயார் செய்தது இவரே 


இன்று தமிழ் யூனியன் கழகத்துக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை,  சரவணமுத்து மைதானம் load's  ஆஃ ஸ்ரீலங்கா என்று அழைக்கப்பட்டது தற்போது p.Sara stadium ஆகிவிட்டது 


அருள் மேரி அம்மணியை யாருக்கும் தெரியாது 


உலகத்தின் அதிசயமாக இருக்க வேண்டிய இந்த தேசம் வக்கிர இனவாதத்தால் நக்குற தேசம் ஆகிவிட்டது 😥😥😥


கிருஷ்ணா

Dharmalingam Krishna

வெளிமாவட்ட அரச உத்தியோகம்.

 



அரசாங்க வேலையென்றால் ஆடும் மேய்க்கலாம் என்றார்கள் 

அவ்வளவாக படிக்காவிட்டாலும் அதட்கேற்ற வேலை கிடைத்தது.


அதிகம் பேசுவதில்லை அடக்கமாய் பணிபுரிந்தேன் 

அதனால் என்னவோ அடுத்த மாதம் இடமாற்றம் என்றார்கள் 


ஆறு மாதம் தான் கடமைக்கு வந்து  அதற்குள் இடமாற்றமா...? என்றேன்

அது அப்படிதான் ஐந்து வருடம் வெளிமாவட்டத்தில் பணிபுரிய வேண்டும் என்றார்கள் 


வெளி மாவட்டத்தில் பணிக்கு சென்றால் செலவுக்கு பணம் பத்தாது பலரிடம் யோசனை கேட்டேன் 

பரவாயில்லை கொஞ்சம் சமாளி

அரசாங் வேலை அநியாயமாக்கிடாதே  என்றார்கள் 


அதுவும் சரியென்று அடுத்தநாள்  பயணமானேன் 

மனைவி கொஞ்சம் சிக்கனக்காரி ஏதோ கிடைத்த பணத்தில்    சிக்கனமாக குடும்பம் நடத்தினாள்

 

ஆண்டு ஐந்து ஓடியது மீண்டும் சொந்த ஊருக்கு இடமாற்றம் 

பஸ்சால் இறங்கி  சைக்கிளை நோக்கி நடந்தேன் அதுவும் காற்றுபோய் நின்றது வீடோ ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் 


காற்று போன சைக்கிளோடு கால்கடுக்க நடந்து வந்தேன் 

கூடிவாழ்ந்த நண்பன் ஒருவன் கோல் எடுத்தான் அப்போது  

கார் ஒன்று வாங்கியிருக்கன் காலையில வாரன் வீட்ட நில் என்றான் சரிடா என்று போனை வைத்து  வீடு வந்து சேர்ந்தேன் 


புன்னகையோடு வாசலில் மனைவி 

வந்த கலைப்பில் திண்ணையில் அமர்ந்தேன்

போன் அலரியது  ஊரில் உள்ள நண்பன் ஒருவன்  மூன்று மாடி வீடு கட்டி முப்பதாம் திகதி திறப்பு விழா கட்டாயம் வந்திடு என்றான்

மழைபெய்ய ஆரம்பிக்க  மனைவி ஓடினால் வீட்டு ஒழுக்குக்கு பாத்திரம் தேடி..... 

நானொரு அரச உத்தியோகத்தன்.....

03/05/2021

ஊடக சுதந்திரம் பற்றி அர்சாங்கம்

 

Jalreview.


எமது நாட்டில் ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதில் எமது அரசாங்கம் உறுதிப்பாட்டோடு உள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.  www.tamilnews1.com 

அனைத்துலக ஊடக சுதந்திர தினமான இன்றைய தினத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  www.tamilnews1.com 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,  www.tamilnews1.com 

உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பது மட்டுமே ஊடகங்களின் பணி அல்ல; உண்மையற்ற செய்திகள் மக்களுக்குள் பரவி குழப்ப நிலைகளை ஏற்படுத்துவதையும் ஊடகங்களே பொறுப்புடன் தடுக்க வேண்டும். www.tamilnews1.com 

இன்று நாடு சந்தித்து நிற்கும் பெரும் சுகாதார நெருக்கடியான ஒரு காலகட்டத்தில், அவ்வாறு செயற்படுவதே  ஊடகங்களின் பெரும் பொறுப்பாகவும் இருக்க முடியும். www.tamilnews1.com 

நிறைவுகள் தொடர்பாகப் பேசுவதைத் தவிர்த்து, குறைகளை மட்டுமே கேள்விக்கு உட்படுத்தி - ஒரு நாட்டையும் அதன் மக்களையும் திறம்பட நிர்வகித்துச் செல்வதில் ஓர் அரசாங்கம் சந்திக்கும் சவால்களை விமர்சிப்பது அல்லாமல், மக்களை நல்வழிப்படுத்திச் செல்வதில் அரசாங்கத்திற்கு ஆக்கபூர்வமான உறுதுணையாகவும் ஊடகங்களே திகழ வேண்டும். அவையே, ஊடக சுதந்திரம் என்பதன் உள்ளார்ந்த அர்த்தம் ஆகும்.

எமது நாட்டில் ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதில் எமது அரசாங்கம் உறுதிப்பாட்டோடு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

01/05/2021

இலங்கையின் வளர்சி எங்கு தடைப்படுகிறது

 இலங்கையின் பொருளாதார வீழ்சியும் வளர்ச்சியும் தங்கியிருப்பது எங்கு என்று பார்த்தால் சின்ன ஒரு இடம்தான். 


இலங்கையின் அனைத்து விடயமும் தங்கியிருத்தல் என்பதன் ஊடாக பல விடயங்களை வளர்க்க வேண்டிய தேவையில்தான் இலங்கை அரசாங்கங்கள் மாறி மாறி செயற்படுகின்றன.


அரசியல் கட்சி சார் அரசாங்கத்தில் மட்டுமே இலங்கையின் பொருளாதாரம், வளர்ச்சி மனித உரிமை, போன்ற அனைத்தும் தங்கியிருப்பது மக்களின் சாபக்கேட்டில் ஒன்றாகும்.


இதனால் கட்சிசார் அரசாங்கம் ஊழல், மோசடி, திறனற்றோரை அரச வேலைக்கு அமர்த்துதல், அரச நிதி மோசமான காரியங்களுக்கு பயன்படுத்தப்படுதல், அரச நடைமுறைகள் கட்சி சார் அரசாங்கத்திற்கு சார்பாக மாற்றப்படுதல், இவ்வாறான செயற்பாடுகளால் வறுமை உள்ளோர் வறுமையிலும், சில முதலாளிகள் மட்டும் வாழ்க்கூடிய சூழலும் உருவாகிக்கொண்டிருக்கின்றன. 


இந்த முறையை மாற்ற கட்சிகள் கூட்டிணைந்த தனி ஒரு கட்சி மட்டும் ஏனையவற்றை ஆளும் தன்மையற்ற ஒரு அரசாங்கம் அமையுமாக இருந்தால் ஒரு நாட்டில் வளர்ச்சி அதிகரித்து செல்லும்.


வளர்ந்த நாடுகளின் திட்டங்களை இந்த ஒன்றிணைந்த கட்சிகளின் அரசாங்கம் ஓரளாவது கட்டுப்படுத்தும். இதனால் ஓரளவு நனமையை மக்கள் அடையக்கூடியதாய் இருக்கும்.


இந்த ஆட்சி முறையில் வாழ்த மக்களும், தம் உழைப்பிற்கு பங்கமாக இருப்பதாக உணர்ந்த வளர்முக நாடுகள் மற்றும் பணமுதலைகளும் எவ்வளவு பணம் செலவழித்தவது அல்லது எவ்வளவு மகக்ளை கொன்றாவது இதனை மாற்ற முயற்சிப்பார்கள். 


இந்த நடவடிகையாலும் மக்கள்தான் அதிகம் பாதிப்படைவார்கள். இந்த பாதிப்பு எதிர்கால சந்ததியையும் கூடவே பாதிக்கும் என்பதை யாரும் உணர்ந்து கொள்வதாக தெரியவில்லை. 


சில விடயங்களை மாற்றினாலே நாட்டில் இருந்து வெளியேறும் நபர்கள் நாட்டை நோக்கி படையெடுப்பார்கள். இதனை உருவாகக் நல்ல ஆட்சியாளர்களின் வருகையே மிக முக்கியமாகும். 


எவ்வாறெனினும் ஒவ்வொரு வரும் இவ்வாறு கட்டுரைகளும், துண்டு பிரசுரங்களும், கவிதை, போன்றனவும் மட்டுமே வெளியிட முடியும். இறுதியாக மக்கள் தம் வாக்கை சரியாக பேணாதவிடத்து இதன் பலனை யாரும் அனுபவித்துவிட முடியாது.


29/04/2021

அரசியல் வீழ்ச்சியும் கொரொனாவும்

 

அரசியலில் தம் இருப்பை தக்கை வைக்கவும்,

படம் 1

தமக்குள் உள்ள பிளவுகளை மறைக்கவும் ஒரு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுக்த்திருக்கும்.

அந்த நடவடிக்கைகள் யுத்தம், குண்டுவெடிப்பு, கடத்தல், உள்நாட்டு யுத்த குழு உருவாக்கம், சட்ட விரோத செயற்பாட்டை ஊக்குவித்தல், இப்படி விரோத நடவடிக்கைகளை அதிகமாக மேற்கொள்ளும்.

இந்த கால கட்டத்தில் குறித்த அரசாங்கம் தன் கட்சியை தன் தனி நபர்களை அதிகமாக வளர்த்துக்கொண்டிருக்கும். இந்த நடவடிக்கைகள் தம் பிளவுகளை மறைப்பதற்காக தோல்விகளை ஒழிப்பதற்காகவே காணப்படும்.

இதன் போது மகக்ளின் மன நிலைகள் மாற்றப்படும். திரைமறைவில் பல விடயங்கள் நடத்தேறும். மகக்ளுக்கு தீமையாகவே அவை இருக்கும்.

எதிர்காலம் என்று பார்த்தால் அடுத்து வரும் அராசங்கம் வெறும் பாத்திரத்தை வைத்து ஏங்கி தவிக்கும் மீண்டும் தம் நாட்டின் மீதும் மக்கள் மீதும் கொண்ட விருப்பின் பெயரில் நல்ல விடயங்களை அறிமுகம் செய்து வளர்தெடுக்கும் போது மக்கள் அந்த நடவடிக்கைகள் பழக்க்ப்படாதால் அது கொடுமையாக உணர்ந்து மீண்டும் வங்குரோத்து அரசாங்க ஆட்சியாளரிடம் கையளிப்பர்.

இந்த அரசாங்க மாற்றம்தான் கீழைத்தேய நாடுகளில் அதிக பிரச்சினைகளை உருவாக்குகிறது.

இப்போ இந்த அரசாங்ங்கள் தம் பிழை, தோல்விகளை மறைக்க அதிகம் கொரொனாவை கொண்டு சுகதார துறையூடாக நிவர்த்தி செய்து வருகிறது.
இதன் கட்டமாக கொரொனாவும் உச்ச கட்டத்தையும் மக்கள் வாழ்வியல் கீழ் நோக்கியும் நகருகிறது.

மேலைத்தேயத்தில் வேறுவித நடவடிக்கைகள். அங்கே நல்ல விடயத்திற்கக அரசாங்கங்கள் கட்சிகள் ஒன்றுகூடும். அப்படி சட்டத்தை இயற்றி வைத்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரையில் அதைப்பற்றி பார்ப்போம்.

படம் 2

பொய்க்கு உண்மையாயிருத்தல்

 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இத...