26/03/2024

பொய்க்கு உண்மையாயிருத்தல்

 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை.



இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இதனால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்றால் காட்டில் அல்லது நீர் நிலையில் வாழும் உயிரினங்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கை சவாலை போல மாறிவிடலாம்.

வலியார் வாழ எளியார் பலியாகும் நிலைக்கு தள்ளப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது இன்று பணம், பதவி, செல்வாக்கு போன்றவற்றால் நடைபெறுகின்றன. நீர் நிலை ஒன்றில் வாழும் ஒரு மீன் பெரியமீன்களிடமும் பாதுகாப்பை தேட வேண்டும், மனிதனிதனிடம் தேட வேண்டும், உணவுக்கு போராட வேண்டும், அதே வேளை மீன் கொத்தி கழுகு போன்றவற்றிடம் இருந்தும் பாதுகாப்பை தேட வேண்டும். அவை மீன்கள் 3 அறிவு கொண்டவை. அதனால் அவற்றின் வாழ்க்கை ஒன்றிணைய எதிர் கொள்ள அறிவி போதாது.


தற்போது இந்த சிந்தனையில் பலர் மிக மோசமனா நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இதனை சமூகம் இணைந்து எதிர்க்கவேண்டும், மாறாக எல்லோரும் பயப்பிடுகிறார்கள், பயப்பிடாத துறை என யாருமில்லை. அதைவிடவும் அதிகமாக இரக்கமும் பார்க்கிறார்கள். இதனை வைத்து பிழைப்போர் சமூகத்தை தறிகெட்ட நிலைக்கு தள்ளிவிடுகிறார்கள்.


எந்த ஒரு நிலையிலும் தம் இரக்கம் இழக்கதா சிலர் எவ்வளவு மோசமான துன்பத்தை அனுபவித்தாலும் பிறழ்வானோருக்கு ஆதராவக இருப்பது அதன் தாற்பரியம் புரியவில்லை. 


இதை எல்லாம் தாண்டி வாக்கு அரசியல் செய்யும் பலர் சட்டத்தரணிகாளாக இருந்து இந்த சமூக விரோத செயற்பாட்டை ஊக்குவிக்கிறார்கள். இதனால் வருமானமும் அவர்களுக்கு ஒரு செல்வாக்கும் அரசியாலில் தோல்வியுற்றால் அதனை விசுவாசத்தின் அடிப்படையில் ஒன்றுமே செய்ய முடியாத ஆனால் செய்வார்கள் எனும் நிலைபபட்டில் மேற்கொள்கிறார்கள்.


இங்கே பிரசுரிக்கும் படம் சொல்லும் செய்தி இதுதான். நாம் சிலவற்றை தடுக்கா விட்டால் எதிர்காலத்தில் மிகமோசாமான ஒரு நிலையில் வாழ எம் சமூகத்தை தள்ளியே தீருவோம்.


விழிப்படைந்து விட்டால் எங்கள் வீடு எங்கள் ஊர் என்பவற்றை சீர் தூக்கி பார்த்தா போதும் அதற்காக தவறுகை வெளிக்கொண்டு வந்தாலே போதும். அதை செய்ய கூட யாரும் முன்வரவில்லை. 


எப்படி வெளிப்படுத்தலாம் எனும் போது சின்ன கடிதம் போதும். பெயர் விபரம் எழுதி பொலிஸ்மா அதிபர்களுக்கு, சுப்பிரிண்டன் பொலிசார்களுக்கு அனுப்பினால் போதும் நடவடிக்கைகள மிகவும் தீவிராமாக எடுபடும். 

https://youtu.be/cSh9zrK9ki0?si=iuAWWqFYkhBqoy6A

#சமூகம். #தீவிரம் # 

canada​ #trending​ #jaffna​ #jaffnayoutubers​ #visitorvisa #candavisa #workvisa #candajob #canadaworkvisa #shortsfeed​ #akkuddi​ #pichumani​ #comedy​ #shortvideo​ #akkuddipichumani​ #வெளிநாட்டுக்கு​ #trending​ #canada​ #canadanews​ #canadian​ #viralshorts​ #canadavisa​ #canadalife​ #london​ #francelifestyle​ #londonlifestyle​ #canadalife​ #jaffna​ #jaffnayoutubers​ #jaffnalifestyle​ #canada​ #shortsfeed​ #akkuddi​ #pichumani​ #வெளிநாட்டிலிருந்து​ #akkuddi​ #pichumani​ #பகிடி​ #பிச்சுமணி​ #அக்குட்டி​ #shorts​ #trending​ #trendingvideo​ #jaffna​ #kajan​ #sulax​ #நகைச்சுவை​ #Comedy​ #clown​ #clowns​ #humor​ #tamil​ #srilanka​ #tamilcomedy​ #actor​ #actress​ #acting​ #drama​ #srilankanews​ #tamilnews​ #pichu​ #comedy​ #அக்குட்டி​ #பிச்சுமணி​ #comedy​ #pichumani​ #jaffna​ #trending​ #drama​ #akkuddi​ #shorts​ #Ashani​ #shortsfeed​ #valvaisulax​ #jaffnalifestyle​ #canda​ #london​ #ashani​ #canada​ #canda​ #canadanews​ #நல்லூர்​ #trending​ #shortvid,,,,, eo​ #jaffna​ #valvaisulax​ #jaffnalifestyle​ #jaffnayoutubers​ #canada​ #shortsfeed​ #srilankanewstamiltoday​ #வல்வெட்டித்துறை​ #valvettithurai​ #valvaisulax​ #jaffna​ #trending​ #valvaisulax​ #shortvideo​ #jaffnayoutubers​ #srilanka​ #vvt​ #valvettithurai​ #trending​ #valvaisulax​ #jaffnayoutubers​ #shortvideo​ #jaffna​ #canada​ #srilankanewstamiltoday​ #canadanews​ #travel​ #shortsfeed​ #traditional​ #shorts​ #யாழ்ப்பாணம்​ #யாழ்​ #யாழ்செய்திகள்​ #kajan​ #canada​ #Foreignlife​ #qatarlife​ #viral​ #tamil​ #foreignlife​

’#பவுன்சர்கள்புடைசூழ #மகனுடன்  #தனுஷ்.. #மனைவி #ஜெயம்ரவி..’ #தலதோனியை #பாக்க #சேப்பாக்கத்தில் #அடுத்தடுத்து #திரளும் #திரை #பிரபலங்கள்..!

#IPLLiveUpdates | #Chennai | #CSK | #RCB | #CSKvsRCB | #IPL2024 | #IPLUpdates | #MSD | #MSDhoni | #ViratKohli | #RuturajGaikwat | #FafduPlessis | #Chepauk | #ChepaukStadium | #IPLOpeningCeremony | #PolimerNews
இதுவே #சினிமா #நடிகை #நடிகர்களா #இருந்தால் #லட்சகணக்கில் #லைக்  #நாட்டு #மக்களுக்காக #சேவை செய்யும் #எங்களுக்கு
.
.
.
#tamil #tamilreels #tamilcinema #tamilcomedy #tamiltrending #tamilsong #trend #fbreelsvideo #fbreels #fbf #fbreels23 #trendingreels #instagood #FacebookPage #facebookpost #instagram #instadaily #fbreelsvideoreels #trend #trendingreels #trendingnowadays

18/09/2021

சமூக வலைத்தளத்தினை நகர்த்துவதில் உள்ள சிக்கல்கள்


சமூக வலைத்தளங்களை கொண்டு செல்லும் போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டும். அவை மிக பிரதானமான சிக்கல். இந்த சிக்கல்களை அறிந்து வைத்திருப்பது மிக முக்கியமாகும். அவற்றை வரும்போது பார்ப்போம் என்று இறங்கினால் வெளியேறும் போது ஒன்றுமே இருக்காது.


யூரியுப், ரிக்ரோக், பிளக்கார் போன்றவற்றை நிர்வகிப்பு செய்வோர் இந்த பிரச்சினைகளை அதிகம் எதிர் நோக்கவேண்டி ஏற்படும். இந்த தலங்களில் எதுவும் பதிவிடலாம் எனும் நோக்கில் பதிவு செய்ய முடியாது அவ்வாறு பதிவு செய்தால் தளங்களை தடையும் செய்வார்கள்.


முதலில் தற்காலிக தடை என்பார்கள்

சமூககத்திற்கு ஏற்ற பதிவு இல்லை என்பார்கள்.

(Community sensitive)  என்று காட்டி தடையும், முழுமையான தடையும் ஏற்படலாம்.


பாலியல் சார் பதிவுகள், தனிநபர் சார் பதிவுகள், நாட்டின் இறமை, அரசியல், தீவிரவாத கருத்து சார் படங்கள் என இவர்கள் சொல்லாமலும் பலதிற்கு தடை போடுகிறார்கள்.


நகைச்சுவை சார் சொந்த பதிவுகளை அதிகமாக பகிருங்கள். சொந்த படங்களை அதாவது நீங்களே உங்கள் கமெராவில் பதிவு செய்த படங்களை பதிவேற்றுங்கள்.


இல்லை எனில் உங்கள் தளங்களை நீங்களே அழிப்பதாகிவிடும். இந்த பிரச்சினைகளில் விளையாட்டு துப்பாக்கிக்கு கூட பல தளங்களில் தடைதான் இருக்கிறது. 





இதை எல்லாம் தாண்டி சமூக வலைத்தளங்களில் உழைப்பதென்பது கடினமான விடயம்தான். 


ஒரு இடத்திற்குள் செல்லும் போதுதான் அதன் விபரங்கள் புரிகிறது

12/09/2021

623 பொருகளின் இறக்குமதியின் பின்னணி

 


சில நாட்களாகா ஓடிக்கொண்டிருக்கும் பிரச்சினை உள்ளாடைகளுக்கான தடை என்றும்  அது தொடர்பான புகைப்படங்கள், கேலிசித்திரங்களும் சமூகவலைத்தளங்களை ஆக்கிரமிக்கின்றன. 

623 பொருட்களின் இறக்குமதி தொடர்பான பின்னணி செயற்பாடுகள் பற்றிய சுருக்க பார்வை.



பொருட்களுக்கு தடைவிதிக்கும் நோக்கம் என்றும் எடுத்துகொள்ளலாம், அதேவேளை உள்னாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல் என்றும் எடுத்து கொள்ளலாம். இதில் வரிவிதிப்பு என்று இல்லை.


இவ்வளவு காலமும் வங்கியில் உள்ள பணத்திற்கு மேலாக over draft மூலம் வியாபாரம் செய்தவர்கள், வங்கியினை அடிப்படையாக கொண்டு வியாபரத்தினை மேற்கொண்டோர்கள் இனிமேல் அந்த வியாபரத்தினை தமது சொந்த பணத்தில் மேற்கொள்ள வேண்டும் என்பதே அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள்.


ஆடைகள் தொடர்பான வியாபரத்திற்கு வங்கியில் 102 % தமது பணத்தினை வைப்பிலிட்டு வியாபரத்தினை மேற்கொள்ள வேண்டும். அதே போல் தொலைபேசி சார் பொருட்களுக்கு 250% வீதம் வங்கியில் வைப்பிலிட்டு அல்லது அந்த தொகையினை வங்கியில் வங்கி உத்தரவாதமகா கட்டவேண்டும். 



இதுதான் தற்போதைய இந்த உள்ளாடை விவகாரமாகும். இந்த விவகாரம் பொருட்களிற்கு விலை அதிக்கப்படலாம் என்ற எண்ணம் உருவாகும். இவ்வளவு பணத்தை கொண்டு ஒருவர் இறக்குமதிக்கு முன்வரப்போவதில்லை. 


இந்த நடவடிக்கைகள் பணமுதலைகளின் பதுக்கல் பணத்தை வெளிக்கொணர்வதாக கூட இருக்கலாம். எப்படியோ இந்த பணங்கள் வெளிவரும் பட்ட்சத்தில் பணவீக்கம் குறையலாம் என அரசாங்கம் நினைக்க்லாம். அரசின் திட்டம் இப்படி இருக்கும் பட்சத்தில் இந்த அராசாங்கம் பற்றியும் யோசிக்கவேண்டும்.


இப்போது இருக்கும் அரசாங்காம் தம்மை விட பணக்காரர் இருக்க கூடாது என்றும் எதிர்காலத்தில் அரசாங்க நடவடிக்கைகள் பங்குகள் தம்முடையதாக இருக்கவேண்டும் என்பதிலும் அவர்கள் போக்கு சரியாக இருக்கிறது.


இந்த நடவடிக்கைகள் கடந்த கால செயற்பாடுகளில் அதிகமகா பார்த்திருப்பீர்கள்.  ஆனாலும் பணத்தை வெளிவிட வியாபரிகள் முன்வராத போது அவர்களின் திட்டம் தொல்வொயில் முடியலாம், அவர்களை நம்பி முதலீடு செய்தால் இறுதியில் உள்ளாடையுடன் அந்த முதலாளிகள் தெருவில் அலையலாம். 


இதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

08/09/2021

டொலரும் இலங்கை ரூபாவின் வீழ்சியும். பொருளாதார கட்டுரை

 


“இலங்கை ரூபா அமேரிக்க டொலருக்கு நிகராக கூடி குறையும் முறை”

முழுமையாக வாசித்தால்  சிறந்த விளக்கம் கிடைக்கும்.

குறிப்பு :- தங்கம் என குறிப்பிடப்படுவது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ( மொத்த சொத்து)

இலங்கை ரூபாய்க்கும் அமெரிக்க டாலருக்கும் ஏன் இந்த வித்தியாசம்...?

ஒரு எளிமையான ஆய்வு கட்டுரை.பொறுமையாக கடைசி வரை படியுங்கள்.உண்மை உங்களுக்கு எளிதாக புரியும்.

ரூபாய் (அல்லது எந்த கரன்சியாயினும்) நோட்டுக்களை அச்சடித்து புழங்கவிடுவதை, IMF எனும் சர்வதேச நாணய நிதியம், கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருக்கும்.!

எந்த ஒரு நாட்டின் அரசும் சும்மா இஷ்டம் போல நோட்டுக்களை அடித்து புழக்கத்தில் விட முடியாது! அதற்கு இந்த IMF ஒப்புதல் தரவேண்டும்.!

ஆனால், எந்த மதிப்புக் கரன்ஸியை வேண்டுமானாலும் (1, 5, 10, 20, 50, 100, 500, 1000…. என !) அடிக்கலாம்...

என்ன,அடித்து புழக்கத்தில் இருக்கும் நோட்டுக்களுக்கு சமமான மதிப்பில் (எடையில்) தங்கம் கையிருப்பு அரசிடம் இருக்க வேண்டும்.



சரி. இப்பொழுது, நம் நாட்டோடு இன்னொரு நாட்டை ஒப்பிடலாம் .

அமெரிக்காவையும் இலங்கையையும்!

அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்ததற்குக்   காரணம்,நாம் எப்பொழுதுமே அமெரிக்காவையே உதாரணமாகக்  கொண்டு பழகியுள்ளோம்!

கணக்கிடுவதற்காக, சில கற்பனை உதாரண மதிப்புக்களை / எண்களை  எடுத்துக்கொள்வோம்:

துவக்கத்தில், அமெரிக்காவிடமும் இலங்கையிடமும்  சமமாக, 1 கிலோ (1000 கிராம்) தங்கம், கையிருப்புள்ளதாக வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது:
அமெரிக்கா, மொத்தம் ஆயிரம் டாலர் மதிப்புக்கு, 1 டாலர் நோட்டுக்கள் 1000 அச்சடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

அதாவது (தங்கம் இருப்பைக் கணக்கில் கொண்டால்), 1 கிராம் தங்கம் 1 டாலருக்கு சமம்! சரியா!

இலங்கையும், அதே போல், ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு இணையாக 1000 ஒரு ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கிறது.! அதாவது ஒரு கிராம் தங்கத்துக்கு, ஒரு ரூபாய் மதிப்பு!

இப்பொழுது பார்த்தீர்களானால், ஒரு அமெரிக்க டாலரும் கூட, ஒரு இலங்கை ரூபாய்க்கு சரி நிகர் மதிப்பே! ஒரு அமெரிக்க டாலர் = ஒரு இலங்கை ரூபாய் மட்டுமே!

இப்பொழுது,

அமெரிக்க அரசாங்கம் ஆயிரம் ஒரு டாலர் நோட்டுக்களை புழக்கத்தில் இறக்கி, அதிலிருந்து, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு, 20 சதவீதம் வரியாக இலக்கு வைக்கிறது. அதன் மூலமாக, 200 டாலர்கள் வரியாக திரும்பப் பெறுகிறது.

இந்த 200 டாலர்களை வைத்து, இன்னமும் ஒரு 200 கிராம்கள் தங்கத்தை வாங்கி, அதற்கு இணையாக இன்னமும் ஒரு 200 ஒரு டாலர் நோட்டுக்களை அச்சடித்து, புழக்கத்தில் விடுகிறது! ஆக மொத்தம், தற்போது, அமெரிக்க அரசாங்கத்திடம் 1200 கிராம் தங்கமும், அமெரிக்க சந்தையில் அந்தத் தங்கத்துக்கு இணையாக 1200 டாலர் நோட்டுக்களும் புழக்கத்தில் உள்ளன! ஆயினும், ஒரு கிராம் தங்கம் = ஒரு டாலர் மட்டுமே!

இந்த பொருளாதாரம், இதே போன்று விரிவடைந்து, மேலும் தங்கம்-மேலும் டாலர் நோட்டுக்கள், என, எவ்வளவு வளரும் பொழுதும், ஒரு கிராம் தங்கம் ஒரு டாலருக்கு நிகராகவே இருக்கும் - இலக்கு வைத்த வரிவிகிதம் முழுமையாக வசூலாகும்வரை!.

இப்பொழுது, இலங்கைக்கு வருவோம்.!

இலங்கை அரசும் அமெரிக்கா போலவே 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டு, அதிலிருந்து 20% வரியாக வசூலாக இலக்கு வைக்கும்.

ஆனால், அசல் வரிவசூலோ,..  வெறும் 50 ரூபாய்கள் மட்டுமே (என்று வைத்துக்கொள்வோம்!).!!

அதாவது, புழக்கத்தில் விட்ட 2000 ரூபாய்களில், வெறும் 250 ரூபாய்கள் மட்டுமே அதிகாரபூர்வமாக, பரிவர்த்தனை செய்யப்பட்டது!

மிச்சம் 750 ரூபாய்கள், வரி செலுத்த விருப்பம் இல்லாதவர்களால், கணக்கில் வராமல் புழங்கத் தொடங்கி விட்டது! இதுதான் கருப்புப்பணம்.!

இந்த 750 ரூபாய்கள், சந்தையில் புழக்கத்தில் இருந்தாலும் கூட, இது அரசின் வரவு செலவுக் கணக்குகளில் பதிவாவதில்லை.!

ஆக, அரசுக் கணக்குப்படி, நாட்டில் புழக்கத்தில் வெறும் 250 ரூபாய்கள் மட்டுமே இருப்பதாக கணக்கில் கொள்ளப்படும் (சந்தையில் மிச்சம் 750 ரூபாய்கள் நிஜத்தில் இருந்தாலும் கூட!).!

இந்த கணக்கில் வராத 750 ரூபாய்கள் மூலம் நடக்கும் பரிவர்த்தனைதான், அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத, இணைப் பொருளாதாரம் என்பது!

சரி. இப்பொழுது, அரசு, தனக்கு கிடைத்த வரிப்பணம் 50 ரூபாய்களை வைத்து, மேலும் ஒரு 50 கிராம் தங்கம் மட்டுமே வாங்கி கையிருப்பை உயர்த்த முடியும்!

தவிர, அதற்கு இணையாக இன்னமும் ஒரு 50 ஒரு ரூபாய் நோட்டுக்களை மட்டும் அச்சடித்து வெளிவிட முடியும்!

இப்பொழுது சந்தையில் (அதிகாரபூர்வமாக) உள்ள இலங்கை ரூபாய்கள் வெறும் 300 ரூபாய்கள் மட்டுமே! (ரூ.250 + ரூ.50).

ஆனால், அசலாக அரசு அச்சடித்து வெளியிட்ட 1000 + 50 சேர்ந்து, மொத்தம் 1050  ரூபாய்கள் கணக்கில் இருந்திருக்க வேண்டும்!

எது எப்படி இருந்தாலும், அரசு, மேலும் நோட்டுக்களை அச்சடித்து சந்தையில்  வெளியிட்டே ஆகவேண்டும்.

காரணம், ஏற்கெனவே வெளியிட்ட 750 ரூபாய்கள் அதிகாரபூர்வமாக கணக்கில் வராமல்  "காணாமல் போய்விட்டதல்லவா"?

எனவே, அரசு அந்த விடுபட்ட 750 ரூபாய்களை அச்சடித்து வெளிவிட முடிவெடுக்கிறது!

இப்பொழுது வருகிறார் கண்கொத்திப்பாம்பு IMF !

"நீங்க அதுமாதிரி எல்லாம் இஷ்டத்துக்கு அச்சடிக்க முடியாது.!

உங்க தங்கம் கையிருப்புக்கு இணையாகத்தான் நோட்டுக்கள் வெளிவிடமுடியும்!" என்கிறார் அவர்!

ஆனால், இலங்கை அரசோ, நோட்டு அச்சடித்தே தீரவேண்டும் என்று ஆடம் பிடிக்கும் பொழுது, IMF சொல்லும்: "உன் ரூபாயின் மதிப்பை, நிகராக நீயே குறைத்துவிட்டு, மேலும் நோட்டுக்களை அச்சடித்துக்கொள்!", என்று!

அரசுக்கு வேறு வழி கிடையாது!

காரணம், அது, வெளியிட்ட நோட்டுக்களுக்கு, இலக்கு வைத்த வரி 100% வசூலாகவில்லை! அதனால், மேலும் (அமெரிக்கா போல) தங்கம் வாங்கி கையிருப்பை உயர்த்த முடியவில்லை!

அதனால், கணக்குப் போட்டு, ரூபாயின் மதிப்பை தானே குறைத்து அறிவித்துவிட்டு, மேலும் 750 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுகிறது, இலங்கை அரசு!

இப்பொழுது, மொத்தம் 1800 ரூபாய்கள் அச்சடித்து புழக்கத்தில் உள்ளது 1000 + 50 + 750) - ஆனால், அரசின் வசம், வெறும் 1050 கிராம் தங்கம் மட்டுமே கையிருப்பு உள்ளது!

ஆக,.. இப்பொழுது, இலங்கை ரூபாயின் மதிப்பு, ரூ.1 இல் இருந்து, ரூ.1.71 என ஆகி விட்டது! (1800 ஐ 1050ஆல் வகுத்தால்  = 1.71)

அதாவது, மேற்சொன்ன அமெரிக்க டாலரை ஒப்பிடும் பொழுது, 1 டாலருக்கு சமமாக இருந்த இலங்கை ரூபாய், இப்பொழுது ரூ.1.71 என வீழ்ச்சி அடைந்துவிட்டது!  $1 = Rs.1.71 !

இதேபோல், நோட்டுக்களை, சந்தைத் தேவைக்கு ஏற்றாற்போல்  அடித்து வெளிவிட வெளிவிட, ரூபாயின் மதிப்பு ஒவ்வொரு முறையும் குறைந்துகொண்டே வருகிறது!

ஆனால், கையிருப்பு தங்கம் மட்டும், வெளிவந்த நோட்டுக்களுக்கு சமமாக கூடுவதே இல்லை!

இதனால்தான், ... இன்று, ஒரு அமெரிக்க டாலர் = Rs. 200.00 என வந்து நிற்கிறது!

இலங்கை அரசும் 100 % இலக்கு வைத்த வரிகளை வசூலித்திருக்குமானால், நம் இலங்கை ரூபாயின் மதிப்பு இவ்வளவு கேவலமாக சரிந்திருக்கவே சரிந்திருக்காது!

இப்பொழுது, உங்களுக்கு வரிகளின் முக்கியத்துவமும், பொதுமக்களுக்கு அதனால் (மறைமுகமாக) கிடைக்கும் பலன்களும் ஓரளவு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்!

நிலையான வலுவான ரூபாயில், வீடு, நிலம், பொருட்களின் விலை மிகவும் குறைவாகவே இருக்கும்!

இந்த ஒற்றைக் காரணத்தால், அமெரிக்கா, உலகின் மிகப் பணக்கார நாடாக அறியப்படுகிறது!

காரணம், அங்கு கிட்டத்தட்ட 95% குடிமக்கள் வரி செலுத்துகின்றனர்!

ஆனால், இலங்கையில்?

யாராலாவது, ஊகிக்க முடியுமா?

percentage of taxpayers in Sri Lanka என்று கூகிள் செய்து தேடிப்பாருங்கள்!

நல்ல இலங்கை  குடிமகன் தலையை வெட்கத்தில் தொங்கவிட்டுக் கொள்வான்!

ஆம்.! வெறும் 1% க்கும் குறைவானவர்களே இலங்கையில் வரி செலுத்துபவர்கள்!

நாம், நம் நாட்டில் அமெரிக்காவுக்கு இணையான சமூகப் பாதுகாப்பு, கட்டமைப்பு வசதிகள், சுத்தம், சுகாதாரம், வெட்டில்லாத மின்சாரம், பகல்போல ஒளிமயமான இரவு, உயர்தர வாழ்க்கை என எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறோம்!

அங்கு இருக்கும் அவற்றை சிலாகித்து புகழ்ந்து பெருமூச்சு விடுகிறோம். ஆனால்,...

அவர்கள் போல, ஒட்டுமொத்த சமூகமாக வரி செலுத்துகிறோமா?

கள்ள/கறுப்புப் பணத்தை புறம் தள்ளுகிறோமா?

நாடு முன்னேற, நம்மாலான பங்களிப்பை, வரிகள் வாயிலாக செய்கிறோமா?
என்று யோசித்தால்,... கசப்பான விடை, "இல்லை" என்பதே ஆகும்!

கறுப்புப் பணம், எப்படி உருவாகி, ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கின்றது என்று எடுத்துக் காட்டவே இந்த ஆய்வுக் கட்டுரை. Copy

04/09/2021

தலிபான்களின் அதிரடி சட்டம்

 ஆக மொத்தத்தில பெண்களை மெசினாத்தான் பாக்கிறாங்க போல.....


தாலிபான்கள் தற்போது விதித்துள்ள தடைகள்:

************

football தடை !

காற்றாடி விட தடை !

பெண்கள் தனியாக வெளியே போகதடை !

பெண்கள் கல்வி கற்க தடை !

பெண்கள் வேலை பார்க்க தடை !

ஆண்கள், பெண்கள் ஜீன்ஸ் உடை அணிய தடை !

பெண்கள் சைக்கிள்,பைக் ஓட்ட தடை !

தனியே பெண்கள் டாக்ஸியில் போக தடை  !

ஆண்கள்,பெண்கள் ஒரே பேருந்தில் பயணம் தடை !

டிவிதடை ! வீடியோ தடை !

ஆண்கள் சவரம் செய்ய தடை !

பறவை நாய் வளர்ப்பு தடை !

இலக்கிய நூல் தடை !

கடைகளில் ஆண்கள் இருந்தால் பெண்களுக்கு பேச தடை !

ஆண் டாக்டர்கள் பெண்களுக்கு சிகிச்சையளிக்க தடை . !

பெண்களின் பள்ளிகள், கல்லூரிகள் மத கருத்தரங்கு கூடமாக மாற்றப்படும் !


பெண்களுக்கு நெயில்பாலிஷ்,முகபூச்சு இருந்தால் விரல்கள் வெட்டப்படும் ! 

பெண் சத்தமாக சிரித்தால் பிரம்படி !

ஹைஹீல்ஸ் போட பெண்களுக்கு தடை !

பெண் நடக்கும் போது செருப்பு சத்தம் வந்தால் பிரம்படி !

பெண்கள் ரேடியோ டிவியில் பேச தடை !

பெண்கள் விளையாட்டு  விளையாட தடை !

பெண்கள் வீட்டு பால்கனியில் 

நிற்க தடை !

வீட்டு ஜன்னல் கண்ணாடிகளில் 

கட்டாய பெயின்ட் !

பெண்களுக்கு ஆடை அளவோ , 

ஆடை தைத்து தரவோ 

ஆண்களுக்கு தடை !

பெண்களை படம் பிடிக்க தடை !

பத்திரிகைகளில் பெண்கள் படம் 

வர தடை ! 

வீடு, கடைகளில் பெண்கள் 

படம் மாட்ட தடை !

இசை,சினிமா, பாடல் 

என அனைத்துக்கும் தடை !

2021 "31 செப்டம்பருக்கு பிறகு இஸ்லாமிய பெயர் வைக்காதவர்க்கு தண்டனை !

ஆண்கள் முடிவெட்ட தடை !

ஆண்கள் தாடி,தொப்பி ,ஆப்கான் உடை கட்டாயம் .!

இஸ்லாமிலிருந்து வேறுமதம் மாறுவோருக்கு மரண தண்டனை !

2021" செப்டம்பர் -30 க்கு பிறகு இன்டர்நெட் தடை !

பெண்கள் செண்ட் பூச தடை !

பெண்களின் கொலுசு சத்தம் எழ தடை !

பெண்கள் பிற ஆணுடன் பேசதடை !


இதெல்லாம் " நேற்று           வெளியிட்டுள்ள சட்டம் !


03/09/2021

சுதேச மருத்துவ ஆலோசனைக்கான மருத்துவர்கள்

 


நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து செல்லும் வேளையில் மக்களுக்கு ஒரு விசேட தகவல்


அதாவது கொரோனா தொற்று தொடர்பான சுதேச வைத்திய ஆலோசனைகளையும் நோய் தொடர்பான சுதேச மருத்துவம் சார்பான விழிப்புணர்வுகளையும் நோய் எதிர்ப்பு குடிநீர் பானங்களையும் பெற்றுக்கொள்ளும் முகமாக அனைத்து பிரதேச செயலர் பிரிவுகளுக்கான சமூக மருத்துவ உத்தியோகத்தர்களின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்வதற்க்கான தொலைபேசி இலக்கங்கள் வெளியாகியுள்ளன.


அத்தோடு வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள சமூக மருத்துவ உத்தியோகத்தர்களின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்வதற்க்கான தொலைபேசி இலக்கங்களே வெளியாகியுள்ளன. 


மேலும் இதனை சுதேச மருத்துவ திணைக்களம் வெளியட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Details of Community Medical Officers – 

Jaffna District


Delft Division – Dr.Beron – 0771856665

Kayts Division – Dr.S.Sabesan – 0772615765

Velanai Division – Dr.P.Kajitha – 0779227511

Jaffna Division – Dr.G Mithuraja – 0774660657

Nallur Division – Dr..J.Edna – 0774400295

Nallur Division – Dr.S.Keerthana – 0778690086

Uduvil Division – Dr..J.Ratnalagi – 0779199359

Uduvil Division – Dr.S.Gayathiri – 0776383673

Sandilipay Division- Dr.S.Uthayagowry – 0773410352

Chankanai Division – Dr.R.Kirija – 0770566790

Chankanai ivision – Dr. S.Mayura – 0770690849

Tellipalai Division – Dr.Y.Sasikala – 0779836099

Tellipalai Division – Dr.S.Rega – 0767516435

Vali east division – Dr.K.Thakshajini – 0772269811

Vali east division – Dr.N.Varani – 0775354717

Karaveddy Division – Dr.T.Kavitha – 0778448196

Pointpedro Division – Dr.K.Soorya – 0774911795

Chavakachcheri division – Dr.K.Rajitha – 0773662730

Chavakachcheri division – Dr.T.Jenany – 0779548129

Karainagar division – Dr.K.Nanthagobi – 0777110695

Karainagar division – Dr.R.Sinthu – 0778649620

02/09/2021

நுகர்வோர் அதிகார சபையின் இலக்கங்கள்.



 நாட்டில் பொருட்களை பதுக்கி அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு ஆப்பு 📱📲📱☎️📞

வைக்க நீங்க ரெடியா...? கீழ்காணும் நம்பருக்கு அடியுங்க அள்ளித்து போவானுகள்!


அரசாங்க விலைக்கு மேலான விலையில் விற்பனை செய்யும் வியாபாரிகளை முறையிட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட தொடர்பு இலக்கங்கள் கீழே:- 


கம்பஹா பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

கம்பஹா +94 33 7755455


களுத்துறை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

களுத்துறை +94 34 7755455


கண்டி பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

கண்டி +94 81 7755455


மாத்தளை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

மாத்தளை +94 66 7755455


நுவரெலியா பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

நுவரெலியா +94 52 7755455


அனுராதபுரம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

அனுராதபுரம் +94 25 7755455


பொலன்னறுவை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

போலோமருவா +94 27 7755455


இரத்தினபுரி பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

இரத்தினபுரி +94 45 7755455


கேகாலை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

கேகாலை +94 35 7755455


குருநாகல் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

குருநாகல் +94 37 7755455


புத்தளம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

புத்தளம் +94 32 7755455


காலி பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

காலி +94 91 7755455


மாத்தறை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

மாத்தறை +94 41 7755455


ஹம்பாந்தோட்டை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

ஹம்பாந்தோட்டை +94 47 7755455


மொனராகலை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

மொனராகலை +94 55 7755460


பதுளை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

பதுளை +94 55 7755455


திருகோணமலை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

திருகோணமலை +94 26 7755455


மட்டக்களப்பு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

மட்டக்களப்பு +94 65 7755455


அம்பாறை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

அம்பாறை +94 63 7755455


யாழ் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

யாழ் +94 21 7755455


வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பிரிவு 

மாவட்ட செயலகம்

வவுனியா +94 24 7755455

01/09/2021

பெருங்காயம் செய்கை.

 



பெருங்காயம் ஃபெருலா அசஃபொட்டிடா ( Ferula asafoetida )  என்ற செடியின் வேர், தண்டிலிருந்து சுரக்கும்  ஒருவித பசையிலிருந்து  கிடைக்கிறது . 


இயற்கையாக கிடைக்கும் பெருங்காயம் துர்நாற்றம் கொண்டதாக இருப்பதால் இதை ஆரம்ப காலத்தில் 'சைத்தானின் கழிவு' என்று பெயரிட்டு அழைத்தார்கள். 

ஆனால் 

இது பல வைரஸ்களை அழிக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது என்று 

ஒரு காலத்தில் நிரூபணம் ஆனதும் 'கடவுளின் அமிர்தம் ' என்று கொண்டாடப்பட்டது. 


இது பெர்சியாவை பிறப்பிடமாகக் கொண்டது என்றாலும் துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. 


பெருங்காயச் செடி சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும் வேரையும் கீறிவிட்டு அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால் 

அதுதான் பெருங்காயம்.

 இதில் வெள்ளை பெருங்காயம் சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது.

கலப்படம் இல்லாத பெருங்காயம் எளிதில் தீப்பற்றிக் கொண்டு எரியும் 

தன்மை கொண்டது. பெருங்காய வாசனை காற்றில் கரையக் கூடியது என்பதால் 

அதை திறந்து வைக்கக்கூடாது. திறந்து வைத்தால் அது வெறும்

பெருங்காய டப்பா.


பெருங்காயத்தைப் பற்றி  இந்த தகவல் போதுமா....

இன்னும் கொஞ்சம் 

வேணுமா?


படத்தில் பெருங்காய செடி.

24/08/2021

காய் நகர்த்திய மக்களசமரவீர

 







மங்களவின் மரணமும், ராஜபக்ஸர்களின் அதிஸ்டமும், மாற்று அரசியலின் வெற்றிடமும்...


இலங்கையின் எதிர்காலம் குறித்து கவலை கொண்டிருந்த, அரசியல் வாதியும், சிந்தனையாளருமான மங்கள சமரவீரவையும் கொரோனா காவுகொண்டது. 


”குழந்தைகளே, உங்கள் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் வணங்குங்கள். ஆனால், அரசியல்வாதிகளை வணங்காதீர்கள். அவர்களை நீங்கள்  வழிபட தேவையில்லை.”  Children, Worship your parents and teachers. But, do not worship politicians. You do not need to worship them. கூறிய மங்கள சமரவீரவும் இல்லாதவர்களின் பட்டியலில் இணைந்துகொண்டார்.


மங்களசமரவீரவுடனான அனுபவப் பகிர்வுகளும், அவரது அரசியல் செயற்பாடுகளுமே இன்றைய ஊடகபரப்பை, சமூக வலைத்தளப் பதிவுகளை ஆக்கிரமித்துள்ளன.


2005 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 786 என்ற குறுகிய வாக்கு வித்தியாசத்தில் அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஸ,  ஜனாதிபதியாக அரியாசனம்  ஏறுவதற்கு காரணமாணவர்களில் முன்னாள் அமைச்சர்  மங்கள சமரவீரவும் விபரீத விபத்தில் மரணித்த சிறீபதி சூரியாராட்சியும் முதன்மையானவர்கள். 


நான் நினைக்கிறேன்  ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக 2005ன் நவம்பர் மாதத்தில் ஒருநாள்,  இலங்கை முழுவதுமாக இருந்த  ஊடகவியலாளர்கள் அனைவரும் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டனர். அனைத்து  பிராந்தியங்களில் இருந்தும் வந்திருந்த  நூற்றுக்கணக்காண ஊடகவியலாளர்கள் அலரி மாளிகையை முற்றுகையிட்டனர். அந்த அழைப்பின் ஊடான முற்றுகையில் நானும் கலந்துகொண்டேன். 

 

அப்போ  இருவர் நெற்றியில் வியர்வை சிந்த ரீசேட்டுகளுடன் மிகச் சாதாரண மனிதர்களாக பெரும் ”கிடாரங்களில்” உணவு வகைகளை கொண்டு வந்து இறக்கிக்கொண்டிருந்தனர். அலரிமாளிகையின் பணியாளர்களாக, வரவேற்பாளர்களாக, உணவு பரிமாறுபவர்களாக என பலவாகி,   ஊடகவியலாளர்கள்  அனைவரையும் ஆட்கொண்டவர்களாக மங்கள சமரவீரவும், சிறீபதி சூரியாராட்சி சுழன்று கொண்டிருந்தனர்.   


இந்த நிகழ்வு பற்றி  விமர்சித்த அன்றைய ஊடகங்கள் பல, அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களுக்கு  “தன்சல” தானம் வழங்குகிறார்கள் என  குறிப்பிட்டு இருந்தன.  


அந்த வகையில் அப்போதைய பிரதமர் மகிந்த ராசபக்சவின் ஜனாதிபதி  வேட்பாளருக்கான பிரச்சார மேலாளர்களாக மங்கள சமரவீரவும், சிறீபதி சூரியாராட்சியும்  பணியாற்றி இருந்தனர். 2005 நவம்பரில் மகிந்த ராசபக்ச தேர்தலில் வெற்றியடைந்ததை அடுத்து, அவரது அமைச்சரவையில் மங்கள சமரவீர வெளியுறவுத்துறை அமைச்சராகவும், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக சிறீபதி சூரியாராட்சியும் நியமிக்கப்பட்டனர்.


2007 ஜனவரியில் வெளியுறவுத்துறை அமைச்சுப் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட போதும், துறைமுக, வான் போக்குவரத்து அமைச்சராகத் தொடர்ந்து பதவியில் இருந்தார். 


2007 பெப்ரவரி 9 இல், மகிந்த ராஜபக்ஸவுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, அமைச்சர்கள் அனுரா பண்டாரநாயக்கா, சிறீபதி சூரியாராச்சி ஆகியோருடன், மங்கள சமரவீரவும் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.  இதனை அடுத்து சுந்தந்திரக் கட்சி (மகாசன) என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். 


இதன்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும், அவரது சகோதரர்களுக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர்களில் ஒருவரான சிறீபதி சூரியாராட்சி 2008ல் நடந்த விபரீத விபத்தில் பலியானார். 


குறிப்பாக  2005 ஜனாதிபதி தேர்தலில் தான் பிரச்சாரப் பிரிவுத் தலைவராத் தொழிற்பட்ட போது, மகிந்த ராஜப்பக்ச இத்தேர்தல் வெற்றிக்காக, விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தார். அதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வடக்குக் கிழக்கில் தமிழர்கள் வாக்களிக்காமல்  செய்தார் என  இவர்கள் இருவரும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்கள்.


இனி சற்று பின்னோக்கய வரலாற்றுக்கு செல்வோம் ஆயின், சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த மகாநாம சமரவீர, முன்னாள் மாத்தறை நகரசபை உறுப்பினர் கேமா பத்மாவதி அமரவீர ஆகியோரின் மகனான மங்கள சமரவீர 1983ஆம் அண்டு மாத்தறை மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக அரசியலில் நுழைந்தார். பின்னர் கட்சியின் துணைச் செயலாளர், ஒருங்கிணைப்புச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்திருந்தார்.


1989களின் பின் ரணசிங்க பிரேமதாசா ஜனாதிபதியாக இருந்த போது, தற்போதைய பிரதமரும் அவரது நண்பருமான மகிந்த ராஜபக்ஸவுடன் இணைந்துமனித உரிமை செயற்பாட்டாளராகவும் செயல்பட்டவர்.


1989 தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்ற அவர்,  1994 இல் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அமைச்சரவையில் அஞ்சல், தொலைத்தொடர்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.  அதே அமைச்சரவையில், பின்னர் நகர அபிவிருத்தி அமைச்சராகவும், பின்னர் துணை நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.


2001 இல் கட்சி  SLFP தோல்வியடைந்ததை அடுத்து, சுதந்திரக் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். 2004 இல் சந்திரிக்காவின் அமைச்சரவையில் துறைமுக, வான் போக்குவரத்து, மற்றும் ஊடகத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.


எனினும் 2005 யூன் மாதம், ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவுடன்  ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, ஊடக அமைச்சுப் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது, ஆனாலும் அவர் துறைமுக, வான் போக்குவரத்து அமைச்சராகத் தொடர்ந்து பதவியில் இருந்தார்.


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுடன் முரண்பட்ட இவர் சந்திரிக்கா 2006வரை ஜனாதிபதியாக தொடரமுடியாது 2005டன் அவரது பதவிக் காலம் முடிவடைகிறது என வாதிட்ட  மகிந்த தரப்பினரை ஆதரித்தவர். அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றின் ஆலோசனையை பெற்று 2005டன் சந்திரிக்காவை வீட்டுக்கு அனுப்பியவர்களில் மங்களவும் முதன்மையானவர்.


ஓர் அரசியல்வாதி என்ற முறையில் ஆரம்பத்தில் மங்கள சமரவீரவும் இலங்கையின் ஏனைய சராசரி அரசியல்வாதிகள் போன்றே ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகவே இருந்தார். 


பலம் வாய்ந்த ஓர் அமைச்சராக செயற்பட்ட காலத்தில் அவரால் நிகழ்த்தப்பட்ட அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் அடாவடித்தனங்கள் பற்றியும், இரகசிய அரசியல் பேரங்களை நடாத்தி, மிரட்டி, ஆசை காட்டி, எதிரானவர்களை தமது வழிக்கு கொண்டு வருவதில் வல்லவர் எனவும் விமர்சனங்கள் உண்டு.


ஊடகத் துறை அமைச்சராக இருந்த போது  ஊடக நெறிமுறைகளை மீறினார், ஊடக நிறுவனங்களுக்கு அழுத்தங்களை பிரயோகித்தார் என்ற குற்றச்சாட்டுகளும் நிலவியிருந்தன.  


குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெ்ற கொடூர யுத்தத்தின் போது ஊடக தணிக்கைகளை கடுமையாக பிரயோகித்தவர் என்பதோடு, அப்போதைய யுத்தத்திற்கு கூட்டு பொறுப்பேற்க வேண்டியவராகவும் இருந்தார்.


2010 இல் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். 2015 ஜனாதிபதி   தேர்தலில், எதிர்க்கட்சிக் கூட்டணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பேச்சாளராக இருந்து அவரின் வெற்றிக்குப் பெரும் உறுதுணையாக இருந்தார்.  2015 ஜனவரி 12 இல், மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் மங்கள வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.


2019 ஜனாதிபதி  தேர்தலை அடுத்து, மங்கள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிதாக உருவான ஐக்கிய மக்கள் சக்தியில் சேர்ந்தார்.


எனினும் 2020 நாடாளுமன்றத் தேர்தல் பட்டியலில் இடம்பெற்ற பின்பும்,  தான் போட்டியிடப் போவதில்லை எனவும்,   நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகுவதாகவும்  அறிவித்தார்.


ஒரு லிபரல்வாதியான மங்கள தப்பான இடத்தில் நின்று அதனை சரியென நிறுவும் வல்லமை கொண்டவர்.  தான் ஒரு மாற்றுப் பாலின ஈர்ப்பாளர் என்ற விடயத்தை எவ்வித மனத் தடைகளும் இல்லாமல் பகிரங்கமாக கூறிக் கொள்ளும் துணிச்சல் மிக்கவர். 


2007ன் முன்  மங்களவின் அரசியல் என்பது இனவாத தளத்தில் நின்று அதனை எதிர்க்காது, சராசரி அரசியல்வாதியாக தொடர்ந்தாலும், 2007ன் பின்னரான அரசியல் இனவாத தளத்தில் நின்று அதனை துணிவுடன் எதிர்க்கும் அரசியலாக மாற்றம் கண்டது. அதன் தொடர்ச்சியே சஜித் பிரேமதாஸாவுடனான  அரசியல் தொடர்சியை முடிவுக்கு கொண்டு வந்து, பிழைப்புவாத அரசியலுக்கு நேர் எதிர் திசையில் தன் பயணத்தை மங்கள தொடர்ந்தார்.


விசேடமாக இலங்கை அரசியல் சமூகத்தில், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எனக் கருதப்பட்டு வருபவர்களுக்கு – எதிராக   தனது ஜதார்த்தமான கருத்துக்களை பதிவு செய்து வந்தார். 


அத்துரலியே ரத்ன தேரர் போன்ற இனவாத செயற்பாட்டாளர்கள்,  கார்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை,  அஸ்கிரிய, மல்வத்த பீடத்தினர்  உள்ளிட்ட முக்கியஸ்த்தர்களுக்கு எதிராக, கருத்துகளை துணிவுடன் தெரிவித்து வந்தவர். 


மங்கள சமரவீரவின் குடும்பத்திற்கு வல்வெட்டித்துறையுடனும் தொடர்பு இருக்கிறது.  பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த 'ஆழிக் குமரன்' ஆனந்தன் மங்களவுக்கு மாமா முறை அதாவது மங்களவின் அத்தையின் கணவர் என கூறப்படுகிறது.

தனது தந்தையின் சகோதரி மானெல் வல்வட்டித்துறை தமிழரான வழக்கறிஞர் குமார் ஆனந்தனை மணம் புரிந்தார். அவர் உலகப் புகழ் பெற்ற நீச்சல் வீரர்... அந்தப் புதிய தம்பதிக்கு முதலில் தங்கள் குடும்பத்தில் இரு கரம் நீட்டி வரவேற்பளித்தவர் தனது அம்மா எனவும், தன்னுடைய பல நற்பண்புகளை அவரிடமிருந்தே பெற்றுக்கொண்டதாக  மங்கள குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கியாமானதொரு வகிபாகத்தைக் கொண்டிருந்த  மங்கள சமரவீர சந்திரிக்கா - மகிந்த – மைத்திரி, ரணில் ஆட்சி காலங்களில் இலங்கையின் பிரதான கட்சிகளில், அரசியல் காய் நகர்த்தல்களில்   முக்கிய பங்கு வகித்தவர். 


தனது இறுதிக்காலத்தில் அனைவரையும் அரவணைத்து  ஐக்கிய இலங்கையை உருவாக்க வேண்டும் எனக்  கனவு கண்டவர்.


இலங்கையின் இரண்டு பிரதான ஆட்சி மாற்றங்களின் சூத்திரதாரிகளில் ஒருவராக விளங்கிய மங்கள சமரவீர 2024ல் அல்லது அதற்கு முன்னதாக மீண்டும் ஒரு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தவர்.  அரசியல் காய் நகர்த்தல்களை மேகொண்டவர். ராஜபக்ஸர்களுக்கு எதிரான இன மத பேதமற்ற ஒரு பரந்துபட்ட  தேசிய ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்கான உரையாடல்களில் ஈடுபட்டவர்.  இருந்த போதும் ராஜபக்ஸர்களின் அதிஸ்ட்டம் மங்களவின் துர் அதிஸ்டமாகிப் போனது.


சமகால அரசியலில் மங்கள சமரவீரவின் வெற்றிடம் மிகப்பெரிய அரசியல் வெற்றிடமே!

23/08/2021

முடக்கலில் அனுமதித்த தொழில்கள் காரணம்?


 இந்த முறை நாடு முடக்கப்பட்டுள்ளபோது ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் உல்லாசப் பயணத்துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. இந்த இரண்டு துறைகளும் எமது நாட்டுக்கு பாரிய வருமானத்தை ஈட்டித் தரும் துறைகளாகும். நோய்த் தொற்றினால் மக்கள் மரணிக்கிறார்களோ, இல்லையோ இந்த துறைகளை தற்காலிகமாகவேனும் முடக்க நேர்ந்தால் அரசாங்கத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விடும். அதனால் அரசுக்கும் வேறு வழி இல்லை.


ஜனாதிபதி தனது விசேட உரையின்போது ஆடை ஏற்றுமதித் துறையானது நாட்டிற்கு ஆண்டொன்றிற்கு 5 பில்லியன் டொலர்கள் அந்நியச் செலாவணியையும், உல்லாசப் பயணத் துறை 4.5 பில்லியன் அந்நியச் செலாவணியையும் ஈட்டித் தருவதாக தெரிவித்துள்ளார். அரசு உள்நாட்டில் ஏற்படும் செலவீனங்களை பணத்தினை அச்சிட்டு தற்காலிகமாக சமாளித்து வருகிறது. அதனால் ஏற்படும் பணவீக்கம் என்பது இரண்டாம் பட்சம். ஆனால் வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்களில் இந்த முறை பயனற்றது. ஏனென்றால் அரசினால் டொலர்களை அச்சிட முடியாது. எனவே அரசு புதிதாக அந்நியச் செலாவணியை ஈட்ட வேண்டும். அத்துடன் தேவையற்ற அந்நியச் செலாவணியின் செலவுகளையும் தடுக்க வேண்டும். 


ஆடைகள் ஏற்றுமதிக்கு இலங்கைக்கு பெருமளவில் உறுதுணையாக இருப்பது ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுள்ள GSP Plus சலுகையாகும். 2020 ஆம் ஆண்டில் ஆடைகள் ஏற்றுமதியானது ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 1,021 மில்லியன் டொலர்களாகவும், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா போன்ற நாடுகளுக்கு 2,329 மில்லியன் டொலர்களாகவும் இருந்தது. ஆனால் சீனாவிற்கான ஏற்றுமதியோ வெறும் 62 மில்லியன் டொலர்களே. எனவே மேற்கு நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவின் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி வருமானம் மிகவும் குறைவானதே.


அது போன்று இலங்கையின் மொத்த ஏற்றுமதி வர்த்தகத்தை கருத்தில் கொண்டாலும், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, மெக்சிகோ போன்ற நாடுகள் 36% இனையும், ஐரோப்பிய யூனியன் 26% இனையும், இந்தியா 8.3% இனையும் வகிக்கின்றது. இங்கும் சீனாவுக்கான ஏற்றுமதி வெறும் 3.3% தான்.


2019 ஆம் ஆண்டு உல்லாசப் பயணிகளின் வருகையில் ஐரோப்பிய யூனியன் 50% இனையும், அமெரிக்கா 15% இனையும், ஆசிய பசிபிக் நாடுகள் 25% இனையும் கொண்டிருந்தன. சீனா ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளினுள் 8.8% இனையே கொண்டிருந்தது.


மேலும் இலங்கையின் கடன்களை எடுத்துக் கொண்டால், அவற்றின் மொத்தப் பெறுமதி ஏறக்குறைய 50 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆக இருக்கும் நிலையில், இவற்றில் ஏறக்குறைய அரைவாசி சந்தையில் திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மூலமே பெறப்பட்டுள்ளன. இதற்கு அடுத்ததாக ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து 13% கடன்கள் பெறப்பட்டுள்ளன. யப்பான், சீனா நாடுகள் முறையே மொத்தக் கடன்களில் தலா 10% இனை வழங்கியுள்ளன. மிகுதியான கடன்களே உலக வங்கி, இந்தியா, மற்றும் ஏனைய இடங்களில் பெறப்பட்டுள்ளன.


இப்படி எந்த ஒரு அம்சத்தை எடுத்துக் கொண்டாலும், எமது நாடு அதிகம் நன்மைகளை மேற்கு நாடுகளின் மூலமே அடைந்து கொள்கிறது. ஆனால் இலங்கை மேற்குலகு சார்ந்து எப்போதும் தனது பொருளாதார கொள்கைகளை வகுப்பதில்லை. ஏனென்றால் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் உள்நாட்டில் கட்டியெழுப்பியுள்ள அரசியல் அவ்வாறானது. மேற்குலகை எதிராளியாகவும், சீனாவை நண்பனாகவும் காட்டி அரசியல் செய்யும் எந்தவொரு அரசியல்வாதியும் சீனாவில் தமது இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்கவில்லை என்பது ஒரு முரண்பாடுதான். அவர்கள் எல்லோரும் மேற்கு நாடுகளிலேயே தங்கள் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்க விரும்புகிறார்கள்.


மேற்கு நாடுகளுடன் வர்த்தகத்தினை பேணிக் கொள்வது அப்படி ஒன்றும் இலகுவான காரியமுமல்ல. மேற்கு நாடுகள் வேறு நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபடும்பொழுது சில விடயங்களை எதிர்பார்க்கிறன. குறிப்பாக சட்ட ஆட்சி, மனித உரிமைகளை உறுதிப்படுத்தல் போன்ற அடிப்படை விடயங்களை அந்த நாடுகள் உறுதிப்படுத்தி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இதற்கு உதாரணமாக GSP Plus இனை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கும் தகைமைகளைக் குறிப்பிடலாம். இந்த நிபந்தனைகளை புறம் தள்ளி இலங்கையுடன் வர்த்தக உறவினை பேணுமாறு அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு எமது நாட்டின் பேரம் பேசும் தகுதி இல்லை.


மேற்கு நாடுகளும் அவை சார்ந்த நிறுவனங்களும் கடன்களை வழங்குவதற்கும் சில அடிப்படை நியமங்களை விதித்திருக்கின்றன. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன்களை வழங்குவதற்கு நிபந்தனைகளை விதிப்பதும் அவற்றில் ஒன்றுதான்.


ஆனால் சர்வதேச நாணய நிதியம் வழங்கும் கடன்கள், இலங்கை பெற்றுக் கொள்ளும் குறுங்காலக் கடன்களை விட நியாயமானவை. நீண்ட கால நோக்கில் நலன் தருபவை. ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் நிலையில் இலங்கை அரசியல் இல்லை.


அரசியல் கொள்கைகளால் ஏற்படும் முரண்பாட்டால் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கங்களை இலங்கை சீனாவின் மூலம் அடைந்து கொள்ள முயற்சிக்கிறது. ஆனால் சீனா உதவிகளை, இலங்கையுடன் தனது வர்த்தகத்தினை அதிகரிப்பதன் மூலம் வழங்கவில்லை. மாறாக கடன்களை வழங்கியே அந்த இழப்புகளை இலங்கை தற்காலிகமாக சரிசெய்ய உதவுகிறது. உதாரணமாக GSP Plus இனை இலங்கை இழக்க நேர்ந்தால், அதனூடாக நடைபெறும் ஏற்றுமதிகளை இலங்கையால் சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய இயலாது. ஆனால் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை தற்காலிகமாக சீனாவின் கடனுதவியுடன் சமாளித்துக் கொள்ள இயலும். இது ஒருவர் தனது வியாபாரம் வீழ்ச்சியடையும் போது, கடன்கள் வாங்கி தனது செலவுகளை சமாளிப்பதற்கு ஒப்பானது. ஆனால் அவரால் தனது வியாபரத்தை அதிகரித்து அதன் வருமானத்தின் மூலம் கடன்களை செலுத்த முடியாமல் போனால், இறுதியில் அவர் முழுமையாக வியாபாரத்தையும் இழந்து தனது சொத்துக்களையும், வியாபாரத்தையும் எல்லாவற்றையும் விற்று கடன்களை செலுத்துவதுதான் அவருக்கு எஞ்சியிருக்கும் ஒரே வழியாக இருக்கும். 🤔🤔🤔


09/08/2021

கிளப்கவுஸ் செயலி பற்றி

கிளப்கவுஸ். Clubhouse



கிளப்கவுஸ் எனும் ஒரு அப்ஸ் அறிமுகப்படுத்தபப்ட்டிருக்கிறது. அந்த அப்ஸ் உருவானது அதன் வளர்ச்சி, பறியெல்லாம் பல விடயங்கள் உண்டு


இந்த கிளப்கவுஸ் ஒரு கூட்டத்தொடர் நடத்துவது போல் இருக்கும். இங்கு ஒரு தலைப்பில் உரையாட முடியும், கூட்ட தொடர் போல இதனை நிகழ்த்த முடியும்.









இங்கு moderator என்று ஒருவரோ  அல்லது சிலரோ இருக்க முடியும். இதில் மூன்று வகையானயோனோர் இருப்பார்கள். 

1 பேசும் குழு அதில் moderators இருப்பார்கள்

2 பார்வையாளர் பகுதி

3 வருவோர் போவோர்.


இங்கு பேச வேண்டும் என்று நினைப்போர் கையடையாளத்தை தட்டி தாம் பேச இருப்பதை காட்ட முடியும். 


பின் தொடர்தல் மூலம் யார் யார் என்ன குழுவில் இருக்கிறார்கள் என்று அறிந்து அந்த அந்த குழுக்களில் சென்று கேட்கவோ பேசவோ முடியும். இங்கு தனி நபர் பிந்தொடர்தல், குழு பின் தொடர்தல் என பல உண்டு.


உந்த கிளப்கவுஸ் அப்சில் உங்கள் சுயவிபரம், இடுவதன் ஊடாக உங்களை நீங்கள் யார் என்று காட்ட முடியும், அதே போல் tweeter, Instagram போன்ற செயலிலளையும் இணைக்க முடியும். யூரியுப் செயலியின் இணைப்பையும் சுயவிபர இடத்தில் பதிவிடலாம்.


இந்த செயலியில் பல நல்ல விடயங்களும் உண்டு. இந்திய ஏனைய நாட்டு நண்பர்களை யும் இணைத்து கொள்ள முடியும். இங்கு தேவையற்ற விடயங்களும் பேசப்படும்.

சினிமா

தமிழ்தேசியம்

திராவிடம்

இந்திய அரசியல்

தமிழிலக்கியம்

பண்பாடுகள்

ஆங்கில பேச்சு

சோதிடம் என பல விடயங்கள் பேசப்படும் நீங்கள் விரும்பும் துறையில் இணைய முடியும். இந்த செயலி பற்றி ஏனையவற்றை கொமன்ற்றில் கேட்கலாம்.


Chatting வசதியும் உண்டு. தனியாக ஒருவருடன் பேசும் வசதியும், பார்வையாளர் வர முடியாத குழுவும் உருவாக்க முடியும். 


28/06/2021

Living together ஒன்றாக வாழ்தல்

 Living together. )ஒன்றாக வாழ்தல்)


இந்த சொல் நடைமுறை நமக்கு அதிக தூரம். இந்த முறை வெளி நாடுகள் சிலவற்றில் ஏற்று கொள்ள பட்டாலும் பல நாடுகள் கண்டும் காணாது விட்டிருக்கின்றனன.


இந்த வாழ்தல் முறை என்பது மனமொத்த இருவர் ஒரே வீட்டில் அல்லது ஒரு அறையில் ஒன்றாக வாழ்தல். இதில் திருமணம் என்பது இருக்காது. ஆனால் புரிந்துணர்வின் அடிப்படையில் பின்னர் நடக்கலாம்.


ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடி அவர்கள் இருவரும் ஒன்றாக வாழ முடிவெடுப்பதாகும்.. பாலியல் வரை பகிர்ந்து கொள்ளப்படும் இந்த வாழ்க்கை முரையில்.


இதனை வெளி நாடு செல்லும் பலரும் மேற்கொள்கின்றனர். அது உழைப்பு, வருமானம், ஒரே வேலைத்தளம், குடும்ப நிலை போன்றன தீர்மானிக்கின்றன.


ஒரு மாத வாடகையினை பங்கு போடவும், துணை ஒன்று தேவை என்பதற்காகவும், பாலியல் தேவைக்காகவும் இந்த நடைமுறை பயன்படுத்தப்படுகிறது.


இங்கு இவர்களுக்கு திருமணம் முடித்த குடும்பம் பிள்ளைகள் சொந்த நாட்டில் இருப்போர் கூட இதனை கைகொள்வதனை காணக்கூடியதாக இருக்கிறது. 


இதனால் நன்மை தீமைகளும் உண்டு.


குழந்தை பேறு என்பது இல்லாது போகலாம், இங்கு இந்த வாழ்க்கை சில மாதங்கள் போக வேறொருவருடனும் தொடரலாம்..

விவாகராத்து என்பது இடம்பெற வாய்பில்லை.

விபச்சாரிகளின் உருவாக்கம் குறைவடையும் ஆனால் இந்த வாழ்க்கை கூட அவ்வாறே அமையும்.


 வாழ்க்கை செலவு குறைவடையும்.  வெளி நாட்டில் வாடகை செலவு அதிகம். இதனால் இப்படி கதைத்து பேசி முடிவெடுப்பார்கள்.


குழந்தை பேறு குறைவடைவதால் இனத்தின் நிலை கவலைக்கிடமாகும்

 இந்த நிலை காதல் எனும் போர்வையில் தற்போது தொடர்கிறது. ஏதோ அவரவர் மன நிலையில் இந்த வாழ்க்கை முறைதொடர்கிறது.


இதுவும் ஒரு கள்ள வாழ்க்கை. இந்த வாழ்க்கை முறை ஒருவரை 50 வயதிற்கு பின் அதிகமாக மன உழைச்சலை கொடுக்கும். அப்போது மனவிரக்தியால் வாழவே பெரும் அவதிப்பட நேரிடும்.


இழமையில்சிரிச்சவன் முதுமையில் அழுவான். 




04/06/2021

வீசா கனவுக்கு நாட்டை அழிப்போம்

 இலங்கை வாழ் மக்கள் இன்று பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். இந்த நிலை ஆபிரிக்க நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சமனாகும். 


ஆபிரிக்க நாடுகளில் தொற்று நோய்தாகம், அரசியல் அராஜகம், ஆட்சியாளர் பெயர்களில் அனைத்து அரச நிறுவனங்களும், இராணுவ, பொலிஸ் அதிகார கையாளல், என நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் காணப்படுகின்றன.


இதனை போலவே இலங்கையும் மிகவிரைவில் மாற்றம் அடையலாம். அடைந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் ஆபிரிக்க நாட்டிற்கு சமனாக பல விடயங்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதை காணக்கூடியதாயிருக்கிறது.


தமது ஆட்சியில் நடைபெறும் ஊழலை மோசடியை வெளியில் வருவதை தவிர்க்க ஒரு அரசாங்காம் என்ன என்னெல்லாம் செய்யலாமோ அத்தையும் செய்துகொண்டிருக்கிறது.


இதில் மத தலைவர்கள், எதிர்கட்சிகள், எழுத்தாளர்களிற்கு உயிர் அச்சுறுத்தலும், பாச உயிர் பறித்தலும் இலகுவாக அவர்களை அடக்கிவிட முடிகிறது.


இதில் அப்பாவி மக்கள் மீது அதிகார துஸ்பிரயோகமும் கொள்ளை அடிக்க பயன்படும் வழியில் மகக்ளுக்கு சிறு தூவலும் இலகுவாக இருக்கிறது.


தம் பெயரில் தம் பரம்பரை எனும் ஒரு குறுகிய வெறி கடன்களையும் சுமைகளையும் ஏற்றி விட இத்தனையும் ஒரு விதமாக மாற்றி விட தம்மிடம் இருக்கும் அரசியல் ஆளணியினால் சட்டமாகக் படு பிரயத்தனம் நடைபெறும் போது ஏதாவது இலகுவக கையாழக்கூடிய பிரச்சினை ஒன்றை வெள்ளியிடவேண்டும். 


அந்த பிரச்சினையாக கொவிட் 19 இருக்கும் போது திரைமறைவு உச்சம் அடைந்து கனியாகிவிடும். 


என்ன ஒரு இலாபத்தை அடைய முடியும் வெளி நாட்டு வாழ்க்கையில் இலகுவாக சொந்த பந்தங்களில் காலில் விழுந்து சென்றுவிடலாம். 


எமெக்கென்ன வெளி நாடு முக்கியம். வீசா முக்கியம். 


அப்போ நாமும் பிரார்தனை பண்ணுவோம் நாடு எக்கேடு என்றாலும் படட்டும் என்று. 

 



15/05/2021

மறைக்கப்பட்ட துடுப்பாட்ட வரலாற்றில் தமிழ் பெண்.

 1950 இற்கு முன்பு கொழும்பு p. சரவணமுத்து விளையாட்டு மைதானத்தின் மைதான அமைப்பாளராக கடமை புரிந்தவர் " அருள் மேரி " என்றழைக்கப்படும் இந்த தமிழ் பெண் , சுமார் 40 ஆண்டுகள் இந்த கடமையில் இருந்துள்ளார் 



இவ்வாறான ஒரு பனியில் ஈடுபட்ட முதலும் muduvumaana பெண் இதுவரை இவர் மட்டுமே 


கிரிக்கட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சார் டொனால்ட் பிரட்மான் ஆசியாவில் விளையாடிய ஒரே ஒரு திடல் தமிழ் யூனியனுக்கு சொந்தமான இந்த சரவணமுத்து திடல் 


அவர் விளையாடிய போட்டிக்காக  மைதானத்தை பொறுப்புடன்  தயார் செய்தது இவரே 


இன்று தமிழ் யூனியன் கழகத்துக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை,  சரவணமுத்து மைதானம் load's  ஆஃ ஸ்ரீலங்கா என்று அழைக்கப்பட்டது தற்போது p.Sara stadium ஆகிவிட்டது 


அருள் மேரி அம்மணியை யாருக்கும் தெரியாது 


உலகத்தின் அதிசயமாக இருக்க வேண்டிய இந்த தேசம் வக்கிர இனவாதத்தால் நக்குற தேசம் ஆகிவிட்டது 😥😥😥


கிருஷ்ணா

Dharmalingam Krishna

வெளிமாவட்ட அரச உத்தியோகம்.

 



அரசாங்க வேலையென்றால் ஆடும் மேய்க்கலாம் என்றார்கள் 

அவ்வளவாக படிக்காவிட்டாலும் அதட்கேற்ற வேலை கிடைத்தது.


அதிகம் பேசுவதில்லை அடக்கமாய் பணிபுரிந்தேன் 

அதனால் என்னவோ அடுத்த மாதம் இடமாற்றம் என்றார்கள் 


ஆறு மாதம் தான் கடமைக்கு வந்து  அதற்குள் இடமாற்றமா...? என்றேன்

அது அப்படிதான் ஐந்து வருடம் வெளிமாவட்டத்தில் பணிபுரிய வேண்டும் என்றார்கள் 


வெளி மாவட்டத்தில் பணிக்கு சென்றால் செலவுக்கு பணம் பத்தாது பலரிடம் யோசனை கேட்டேன் 

பரவாயில்லை கொஞ்சம் சமாளி

அரசாங் வேலை அநியாயமாக்கிடாதே  என்றார்கள் 


அதுவும் சரியென்று அடுத்தநாள்  பயணமானேன் 

மனைவி கொஞ்சம் சிக்கனக்காரி ஏதோ கிடைத்த பணத்தில்    சிக்கனமாக குடும்பம் நடத்தினாள்

 

ஆண்டு ஐந்து ஓடியது மீண்டும் சொந்த ஊருக்கு இடமாற்றம் 

பஸ்சால் இறங்கி  சைக்கிளை நோக்கி நடந்தேன் அதுவும் காற்றுபோய் நின்றது வீடோ ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் 


காற்று போன சைக்கிளோடு கால்கடுக்க நடந்து வந்தேன் 

கூடிவாழ்ந்த நண்பன் ஒருவன் கோல் எடுத்தான் அப்போது  

கார் ஒன்று வாங்கியிருக்கன் காலையில வாரன் வீட்ட நில் என்றான் சரிடா என்று போனை வைத்து  வீடு வந்து சேர்ந்தேன் 


புன்னகையோடு வாசலில் மனைவி 

வந்த கலைப்பில் திண்ணையில் அமர்ந்தேன்

போன் அலரியது  ஊரில் உள்ள நண்பன் ஒருவன்  மூன்று மாடி வீடு கட்டி முப்பதாம் திகதி திறப்பு விழா கட்டாயம் வந்திடு என்றான்

மழைபெய்ய ஆரம்பிக்க  மனைவி ஓடினால் வீட்டு ஒழுக்குக்கு பாத்திரம் தேடி..... 

நானொரு அரச உத்தியோகத்தன்.....

03/05/2021

ஊடக சுதந்திரம் பற்றி அர்சாங்கம்

 

Jalreview.


எமது நாட்டில் ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதில் எமது அரசாங்கம் உறுதிப்பாட்டோடு உள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.  www.tamilnews1.com 

அனைத்துலக ஊடக சுதந்திர தினமான இன்றைய தினத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  www.tamilnews1.com 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,  www.tamilnews1.com 

உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பது மட்டுமே ஊடகங்களின் பணி அல்ல; உண்மையற்ற செய்திகள் மக்களுக்குள் பரவி குழப்ப நிலைகளை ஏற்படுத்துவதையும் ஊடகங்களே பொறுப்புடன் தடுக்க வேண்டும். www.tamilnews1.com 

இன்று நாடு சந்தித்து நிற்கும் பெரும் சுகாதார நெருக்கடியான ஒரு காலகட்டத்தில், அவ்வாறு செயற்படுவதே  ஊடகங்களின் பெரும் பொறுப்பாகவும் இருக்க முடியும். www.tamilnews1.com 

நிறைவுகள் தொடர்பாகப் பேசுவதைத் தவிர்த்து, குறைகளை மட்டுமே கேள்விக்கு உட்படுத்தி - ஒரு நாட்டையும் அதன் மக்களையும் திறம்பட நிர்வகித்துச் செல்வதில் ஓர் அரசாங்கம் சந்திக்கும் சவால்களை விமர்சிப்பது அல்லாமல், மக்களை நல்வழிப்படுத்திச் செல்வதில் அரசாங்கத்திற்கு ஆக்கபூர்வமான உறுதுணையாகவும் ஊடகங்களே திகழ வேண்டும். அவையே, ஊடக சுதந்திரம் என்பதன் உள்ளார்ந்த அர்த்தம் ஆகும்.

எமது நாட்டில் ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதில் எமது அரசாங்கம் உறுதிப்பாட்டோடு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

01/05/2021

இலங்கையின் வளர்சி எங்கு தடைப்படுகிறது

 இலங்கையின் பொருளாதார வீழ்சியும் வளர்ச்சியும் தங்கியிருப்பது எங்கு என்று பார்த்தால் சின்ன ஒரு இடம்தான். 


இலங்கையின் அனைத்து விடயமும் தங்கியிருத்தல் என்பதன் ஊடாக பல விடயங்களை வளர்க்க வேண்டிய தேவையில்தான் இலங்கை அரசாங்கங்கள் மாறி மாறி செயற்படுகின்றன.


அரசியல் கட்சி சார் அரசாங்கத்தில் மட்டுமே இலங்கையின் பொருளாதாரம், வளர்ச்சி மனித உரிமை, போன்ற அனைத்தும் தங்கியிருப்பது மக்களின் சாபக்கேட்டில் ஒன்றாகும்.


இதனால் கட்சிசார் அரசாங்கம் ஊழல், மோசடி, திறனற்றோரை அரச வேலைக்கு அமர்த்துதல், அரச நிதி மோசமான காரியங்களுக்கு பயன்படுத்தப்படுதல், அரச நடைமுறைகள் கட்சி சார் அரசாங்கத்திற்கு சார்பாக மாற்றப்படுதல், இவ்வாறான செயற்பாடுகளால் வறுமை உள்ளோர் வறுமையிலும், சில முதலாளிகள் மட்டும் வாழ்க்கூடிய சூழலும் உருவாகிக்கொண்டிருக்கின்றன. 


இந்த முறையை மாற்ற கட்சிகள் கூட்டிணைந்த தனி ஒரு கட்சி மட்டும் ஏனையவற்றை ஆளும் தன்மையற்ற ஒரு அரசாங்கம் அமையுமாக இருந்தால் ஒரு நாட்டில் வளர்ச்சி அதிகரித்து செல்லும்.


வளர்ந்த நாடுகளின் திட்டங்களை இந்த ஒன்றிணைந்த கட்சிகளின் அரசாங்கம் ஓரளாவது கட்டுப்படுத்தும். இதனால் ஓரளவு நனமையை மக்கள் அடையக்கூடியதாய் இருக்கும்.


இந்த ஆட்சி முறையில் வாழ்த மக்களும், தம் உழைப்பிற்கு பங்கமாக இருப்பதாக உணர்ந்த வளர்முக நாடுகள் மற்றும் பணமுதலைகளும் எவ்வளவு பணம் செலவழித்தவது அல்லது எவ்வளவு மகக்ளை கொன்றாவது இதனை மாற்ற முயற்சிப்பார்கள். 


இந்த நடவடிகையாலும் மக்கள்தான் அதிகம் பாதிப்படைவார்கள். இந்த பாதிப்பு எதிர்கால சந்ததியையும் கூடவே பாதிக்கும் என்பதை யாரும் உணர்ந்து கொள்வதாக தெரியவில்லை. 


சில விடயங்களை மாற்றினாலே நாட்டில் இருந்து வெளியேறும் நபர்கள் நாட்டை நோக்கி படையெடுப்பார்கள். இதனை உருவாகக் நல்ல ஆட்சியாளர்களின் வருகையே மிக முக்கியமாகும். 


எவ்வாறெனினும் ஒவ்வொரு வரும் இவ்வாறு கட்டுரைகளும், துண்டு பிரசுரங்களும், கவிதை, போன்றனவும் மட்டுமே வெளியிட முடியும். இறுதியாக மக்கள் தம் வாக்கை சரியாக பேணாதவிடத்து இதன் பலனை யாரும் அனுபவித்துவிட முடியாது.


29/04/2021

அரசியல் வீழ்ச்சியும் கொரொனாவும்

 

அரசியலில் தம் இருப்பை தக்கை வைக்கவும்,

படம் 1

தமக்குள் உள்ள பிளவுகளை மறைக்கவும் ஒரு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுக்த்திருக்கும்.

அந்த நடவடிக்கைகள் யுத்தம், குண்டுவெடிப்பு, கடத்தல், உள்நாட்டு யுத்த குழு உருவாக்கம், சட்ட விரோத செயற்பாட்டை ஊக்குவித்தல், இப்படி விரோத நடவடிக்கைகளை அதிகமாக மேற்கொள்ளும்.

இந்த கால கட்டத்தில் குறித்த அரசாங்கம் தன் கட்சியை தன் தனி நபர்களை அதிகமாக வளர்த்துக்கொண்டிருக்கும். இந்த நடவடிக்கைகள் தம் பிளவுகளை மறைப்பதற்காக தோல்விகளை ஒழிப்பதற்காகவே காணப்படும்.

இதன் போது மகக்ளின் மன நிலைகள் மாற்றப்படும். திரைமறைவில் பல விடயங்கள் நடத்தேறும். மகக்ளுக்கு தீமையாகவே அவை இருக்கும்.

எதிர்காலம் என்று பார்த்தால் அடுத்து வரும் அராசங்கம் வெறும் பாத்திரத்தை வைத்து ஏங்கி தவிக்கும் மீண்டும் தம் நாட்டின் மீதும் மக்கள் மீதும் கொண்ட விருப்பின் பெயரில் நல்ல விடயங்களை அறிமுகம் செய்து வளர்தெடுக்கும் போது மக்கள் அந்த நடவடிக்கைகள் பழக்க்ப்படாதால் அது கொடுமையாக உணர்ந்து மீண்டும் வங்குரோத்து அரசாங்க ஆட்சியாளரிடம் கையளிப்பர்.

இந்த அரசாங்க மாற்றம்தான் கீழைத்தேய நாடுகளில் அதிக பிரச்சினைகளை உருவாக்குகிறது.

இப்போ இந்த அரசாங்ங்கள் தம் பிழை, தோல்விகளை மறைக்க அதிகம் கொரொனாவை கொண்டு சுகதார துறையூடாக நிவர்த்தி செய்து வருகிறது.
இதன் கட்டமாக கொரொனாவும் உச்ச கட்டத்தையும் மக்கள் வாழ்வியல் கீழ் நோக்கியும் நகருகிறது.

மேலைத்தேயத்தில் வேறுவித நடவடிக்கைகள். அங்கே நல்ல விடயத்திற்கக அரசாங்கங்கள் கட்சிகள் ஒன்றுகூடும். அப்படி சட்டத்தை இயற்றி வைத்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரையில் அதைப்பற்றி பார்ப்போம்.

படம் 2

28/04/2021

அரசியலில் சிக்கி தவிக்கும் சில பிரச்சினைகள்


 நாட்டில் ஏற்பட தொற்று நோயாகிய கொரொனா பல சங்கடங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் பல பணக்காரர்கள் கடனாளிகளாகவும் சில நடுத்தர வர்கத்தினர் அதிக பணம் சம்பாதித்தோராகவும் மாறியிருக்கிறார்கள்.


உண்மையில் கொரொனா தொற்றின் பாதிப்பு மரணம் வரை அழைத்து சென்றாலும் அதில் சிலர் தப்பிபது எப்படி, எவ்வாறு அவர்களால் நடமாட முடிகிறது. 


இப்படி பல சிக்கலான கேள்வியும் விடையின்றிய அலைவும் இந்த கொரொனா சில திட்டமிட்ட நடவடிக்கைகள் செயற்படுத்த காரணமாக அமைகிறதா??


அதிகமாக தனியார் கம்பனிகள் பாதிப்படைந்திருக்கின்றன. இதில் விடயம் என்னவென்றால் திட்டமிட்டபடி   ஏதும் நடைபெறுகிறதா? இல்லா உண்மையில் இது கொரொனா தொற்றின் வளர்ச்சியா?? 


இவற்றை எல்லாம் யோசிக்கும் அளவிற்கு மக்களை விடாது இதன் செய்திகளையும் அள்ளி வீசும் ஊடகங்கள். 


எப்படியோ பாதிக்கப்படுவது எளிய மக்கள்தான். வலிமை உடையோராக வாழவேண்டும் என்பது நமது கட்டாய தேவையாகும்.

16/09/2020

Adsense மூலம் உழைப்பது எப்படி..


 <script data-ad-client="ca-pub-5429385307257882" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>


இந்த லிங்க் போல் ஒரு லிங் உங்களுக்கு கிடைத்தால் நீங்களும் ஒரு இணைய உழைப்பாளிதான்.. இதைத்தான் பல இணைய நடத்துனர்கள் பின்பற்றுகின்றனர்.  

யுரியுப், மூலம் முகனூல் மூலம் அதிக வருமானம் பெற முடியும்.. அதற்கு இந்த அட்சென்ஸ் லிங் முக்கியமாக இருக்கிறது.. 


இனையத்தில் பல இடங்களில் மனதை கிழறும் தலைப்புகள் இருப்பதற்கு காரணம் பார்வையாளர்கள் அதிகமாகி இந்த உழைஉழைப்பை அதிகரிக்கலாம்.. 


இதனால் பல இணையங்கள் அதிகமக பொய் செய்திகள, புழுகு செய்திகளால் அலங்கரிக்கப்படும்.. மேல் உள்ள லிங்கை நீங்கள் உங்கள் இணையத்தில் பயன்படுத்தி அதனால் விளம்பரம் வந்தால் அரைவாசி வருமானம் தரப்படும்.

பொய்க்கு உண்மையாயிருத்தல்

 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இத...