26/12/2017

சுனாமி தாக்கத்தை ஈடு செய்ய முடியுமா?

உள் நாட்டு போரின் தாக்கத்தை சீர் செய்ய முடியாமல் திணறும் காலத்தில் 13 வருடம் சென்றும் மக்கள் மறக்கவில்லை.

வட கிழக்கு பகுதியில் மக்கள் உறவுகள் உடைமைகளுடன் சொந்த இடத்தையும் விட்டு அகலும் நிலைக்கு இந்த சுனாமி ஏற்படுத்தியது.

மக்கள் தமது தன்னம்பிக்கை உட்பட அனைத்தையும் இழக்க வைத்து கையேந்த வைத்தது.

இந்த சுனாமி நலனோன்பும் நிறுவனங்கள் வர காரணமாகவும் இருந்தது.

அவற்றி உதவி எம்மை தமது முழு கட்டிப்பாட்டில் கொண்டு வந்தது. எம்மை எமது விரல் கொண்டு குத்தும் படி எமது தகவல் தரவுகளை சேகரித்தது.

எல்லாவற்றுக்கும் காலம் வரும் வரை காத்திருந்து எமது போரை அழித்தது.

எமது இனத்தை தட்டி தடுமாற வைத்தது. இஎல்லாம் எமது மக்கள் இழக்கவும் வைத்தது வெறும் 5 வருடங்களில்.

யுத்தத்தால் உலக நாடுகளே அழித்த போது இந்த சுனாமியும் உதவியது என்பது மிகவும் கொடுமை. 

எமது மக்களை இயற்கையும் கொன்று எம்மக்களுக்கு இயக்கையும் எதிராக இருந்திருக்கிறது.






24/12/2017

இவை நடக்குமா? தேர்தலின் பின்

#உள்ளூராட்சி #மன்றங்களால்  #மக்களுக்கு வழங்ககூடிய  #சேவைகள்...

01 .பொதுச் சுகாதாரம்
02 .திண்மக் கழிவகற்றல்
03. கிராமிய பாதைகளை அமைத்தலும் பராமரித்தலும்
04. வடிகாழமைத்தல் பராமரித்தல்
05 .தெருக்களுக்கு வெளிச்சம் தருதல்
06. சிறுவர் பூங்காக்களை உருவாக்குதலும் பராமரித்தலும்
07. விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்
08.இடுகாடுகள்,சுடுகாடுகளை அமைத்தலும் பராமரித்தலும்
09. நூலக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்
10. பொது மல சல கூடங்களை அமைத்தலும்,பராமரித்தலும்.
11. கிராமிய நீர் விநியோகம்
12. பொது நீராடல் நிலையங்களை அமைத்தல்
13. தீயணைப்பு சேவைகள்
14. முன் பள்ளிகளை உருவாக்குதலும் பராமரித்தலும்
15. தாய் சேய் நலப்பணி
16. பொதுக் கட்டிடங்களை நிர்மாணித்தலும் பராமரித்தலும்
17. தொற்று நோய் தடுத்தல்
18. திடீர் அனர்த்த முன்னாயத்தமும் செயற்பாடுகளும்
19. தொல்லைகளைத் தவிர்த்தல்
20. பெண்கள் அபிவிருத்தி
21. கிராமிய மின்சாரம் வழங்கல்
22. வீடமைப்புத் திட்டம்
23. கல்வித் தளபாடங்கள்
24.அபிவிருத்திக் கருத்திட்டங்களை இனங்கண்டு நடைமுறைப்படுத்தல்
25. கால்நடை பன்ணைகளை நடாத்துதல்
26. அறநெறிப் பாடசாலைகளை ஏற்பாடு செய்தல்.
27. சமய விழாக்களை ஏற்பாடு செய்தல்
28. கிராம அபிவிருத்திச் சங்கங்களை ஸ்தாபித்தலும வழிநடத்தலும்
29. வறியோருக்கு நிவாரணம் வழங்கல்.

23/12/2017

தேர்தலால் பாடம் புகட்ட முடியுமா??

வருகின்ற உள்ளூராட்சி தேர்தலால் பாடம் புகட்ட முடியுமா. மக்கள் புகட்டுவரா. ஏன் புகட்டவேணும்

வரும் தேர்தல் மக்கள் அரசின் செயலுக்கு துணை போவோருக்கு பாடம் புகட்டவேண்டிய நேரம் என இளவயதினர் புலம்புவதை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.

அதுவும் தமிழரசு கட்சி தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராகவே.

பிக்குவின் தகனமும், த.தே.கூ அறிக்கைகளும் அதிகமாகவே தாக்கியிருக்கிறது. இளவயதினர் மாறுவது போல் முதியோரும் மாற்றம் விரும்பினால் பெட்டிப்பாம்பாக அவர்கள் மக்கள் நலன் சார்ந்து பேசுவர் என கற்றோர் எதிர்வுகூறுகின்றனர்.

த.தே.கூ எதிர் அணி ஒன்று அவசியம் என்பதும் மிக முக்கியம் எனவும் முணுமுணுப்பதை அவதானிக்கலாம்.



பாடம் கற்குமா தமிழரசு கட்சி. மீண்டெழுமா த.தே.ம.முன்னணி

22/12/2017

பிக்குவின் தகனம் உள்ளூராட்சியில் மோசமான தாக்கம்.

பிக்குவினது உடலை முற்றவெளியில் தகனம் செய்தமை உள்ளூராட்சி தேர்தலில்படு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த தாக்கம் தமிழரசு கட்சிக்கே அதிகம்
 தமிழரசு கட்சி எதிர்கட்சியாக உள்ளபோதும் ஒரு டம்மியாகவே உள்ளது.

மக்களின் கோபத்தை அதிகமாக்கி இருக்கிறது. உள்ளூராட்சி தேர்தலில் இதன் பிரதிபலிப்பு அதிகமாகும்.

இதனால் இக்கட்சி மிகமோசமாக தோல்வியடைய வைக்க வேண்டும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவத் கூறியிருக்கிறார்.

இச்செயற்பாடு இளவயதினரை பெரிதும் பாதித்திருக்கிறது. அவர்களின் இரத்த துடிப்பில் தமிரழசு கட்சி விளையாடியிருக்கிறது.

மக்கள் மாற்று தெரிவை தமது வாக்களிப்பில் கொடுத்து தமிழரசு கட்ட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தமிழ் தேசிய முன்னணியின் வடமராட்சி செயற்குழு உறுப்பினர் தமது உரையாடலில் குறிப்பிட்டார்.





தலையாட்டிகளை வேட்பாளர் ஆக்கியது யார்.

தலையாட்டிகளை வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கின்ற கட்சி உண்டு. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

யாழில் போட்டியிடும் கட்சிகள் பலவும் துடிப்புள்ள எதிர் கருத்து பேசக்கூஇயோரை இறக்கி இருக்கும் போது..

தமிழரசுகட்சி மட்டும் தலையாட்டிகளையும், கொள்கை மாறுவோரையும் நிறுத்தி இருக்கின்றது.

இவர்கள் அரசியலில் வந்து தலையாட்ட போகிறார்களே ஒழிய எதுவும் செய்யபோவதில்லை என மக்கள் விரக்தியில் உள்ளனர்.

சிங்கள கட்சிக்கு தலையாடும் பா.உ போல் இவர்கள் ஆடப்போகிறார்களா.

21/12/2017

வேட்பாளர்களின் கோரிக்கை என்ன?

வேட்பாளர்களின் கோரிக்கை என்ன. இன்றய கால கட்டத்தில் வேட்பாளர்கள் அனைவருமே ஒரே ஒரு கோரிக்கை மட்டும் மக்களிடம் விடுகின்றனர்

அவர்கள் அனைவரும் மக்களுக்கு சேவை செய்ய ஆணையாகா ஓட்டை எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் அதற்கு மக்கள் ஓட்டு போட்டு கொடுக்க வேண்டும். அதற்கு மக்கள் செய்யவேண்டியது அனைவரும் ஓட்டு போட செல்லவேண்டும். தமது வாக்கை போட வேண்டும் அதுதான் வேட்பாளர்களின் கோரிக்கை.

20/12/2017

தேர்தலும் போராட்டமும்.

தேர்தல் வெற்றியும் சமூக பிளவும். இந்த ஒரு வெற்றிக்காகா ஒரு சாதாரண உள்ளூராட்சிக்காக ஒன்று பட்ட தமிழை பிரிக்கும் நிலையில் பேரினவாதம்

இதற்கு சோரம் போகும் வகையில் தமிழ்கட்சிகள். இந்த சமூகத்தை குழப்பி ஒரு வெற்றி தேவையா என கட்சிகள் யோசிக்காத போது 

ஒரு கட்சி மட்டும் ஒன்றிணைந்த இளையோர் சமூகத்தை இறக்கி இருக்கிறது. 

30 வருட போராட்டம் தோற்றுப்போக அந்த சமூக பிரிவினையே காரணமாக்கி தோற்கடிக்கப்பட்ட போதும் இன்னும் புரிந்து கொள்ளாதது ஏன்.

சைக்கிள் கட்சி சார்பாக பிரசாரம் செய்யும் இளையோர் தமிழர் என்றும், போரியல் வடுவை நேரில் தலமை உட்பட அனுபவித்த வகையில் அவர்கள் பயணம் ஏனைய கட்சிகளினை விட மாறுபடுகிறது.

பொய்க்கு உண்மையாயிருத்தல்

 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இத...