29/04/2021

அரசியல் வீழ்ச்சியும் கொரொனாவும்

 

அரசியலில் தம் இருப்பை தக்கை வைக்கவும்,

படம் 1

தமக்குள் உள்ள பிளவுகளை மறைக்கவும் ஒரு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுக்த்திருக்கும்.

அந்த நடவடிக்கைகள் யுத்தம், குண்டுவெடிப்பு, கடத்தல், உள்நாட்டு யுத்த குழு உருவாக்கம், சட்ட விரோத செயற்பாட்டை ஊக்குவித்தல், இப்படி விரோத நடவடிக்கைகளை அதிகமாக மேற்கொள்ளும்.

இந்த கால கட்டத்தில் குறித்த அரசாங்கம் தன் கட்சியை தன் தனி நபர்களை அதிகமாக வளர்த்துக்கொண்டிருக்கும். இந்த நடவடிக்கைகள் தம் பிளவுகளை மறைப்பதற்காக தோல்விகளை ஒழிப்பதற்காகவே காணப்படும்.

இதன் போது மகக்ளின் மன நிலைகள் மாற்றப்படும். திரைமறைவில் பல விடயங்கள் நடத்தேறும். மகக்ளுக்கு தீமையாகவே அவை இருக்கும்.

எதிர்காலம் என்று பார்த்தால் அடுத்து வரும் அராசங்கம் வெறும் பாத்திரத்தை வைத்து ஏங்கி தவிக்கும் மீண்டும் தம் நாட்டின் மீதும் மக்கள் மீதும் கொண்ட விருப்பின் பெயரில் நல்ல விடயங்களை அறிமுகம் செய்து வளர்தெடுக்கும் போது மக்கள் அந்த நடவடிக்கைகள் பழக்க்ப்படாதால் அது கொடுமையாக உணர்ந்து மீண்டும் வங்குரோத்து அரசாங்க ஆட்சியாளரிடம் கையளிப்பர்.

இந்த அரசாங்க மாற்றம்தான் கீழைத்தேய நாடுகளில் அதிக பிரச்சினைகளை உருவாக்குகிறது.

இப்போ இந்த அரசாங்ங்கள் தம் பிழை, தோல்விகளை மறைக்க அதிகம் கொரொனாவை கொண்டு சுகதார துறையூடாக நிவர்த்தி செய்து வருகிறது.
இதன் கட்டமாக கொரொனாவும் உச்ச கட்டத்தையும் மக்கள் வாழ்வியல் கீழ் நோக்கியும் நகருகிறது.

மேலைத்தேயத்தில் வேறுவித நடவடிக்கைகள். அங்கே நல்ல விடயத்திற்கக அரசாங்கங்கள் கட்சிகள் ஒன்றுகூடும். அப்படி சட்டத்தை இயற்றி வைத்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரையில் அதைப்பற்றி பார்ப்போம்.

படம் 2

28/04/2021

அரசியலில் சிக்கி தவிக்கும் சில பிரச்சினைகள்


 நாட்டில் ஏற்பட தொற்று நோயாகிய கொரொனா பல சங்கடங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் பல பணக்காரர்கள் கடனாளிகளாகவும் சில நடுத்தர வர்கத்தினர் அதிக பணம் சம்பாதித்தோராகவும் மாறியிருக்கிறார்கள்.


உண்மையில் கொரொனா தொற்றின் பாதிப்பு மரணம் வரை அழைத்து சென்றாலும் அதில் சிலர் தப்பிபது எப்படி, எவ்வாறு அவர்களால் நடமாட முடிகிறது. 


இப்படி பல சிக்கலான கேள்வியும் விடையின்றிய அலைவும் இந்த கொரொனா சில திட்டமிட்ட நடவடிக்கைகள் செயற்படுத்த காரணமாக அமைகிறதா??


அதிகமாக தனியார் கம்பனிகள் பாதிப்படைந்திருக்கின்றன. இதில் விடயம் என்னவென்றால் திட்டமிட்டபடி   ஏதும் நடைபெறுகிறதா? இல்லா உண்மையில் இது கொரொனா தொற்றின் வளர்ச்சியா?? 


இவற்றை எல்லாம் யோசிக்கும் அளவிற்கு மக்களை விடாது இதன் செய்திகளையும் அள்ளி வீசும் ஊடகங்கள். 


எப்படியோ பாதிக்கப்படுவது எளிய மக்கள்தான். வலிமை உடையோராக வாழவேண்டும் என்பது நமது கட்டாய தேவையாகும்.

16/09/2020

Adsense மூலம் உழைப்பது எப்படி..


 <script data-ad-client="ca-pub-5429385307257882" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>


இந்த லிங்க் போல் ஒரு லிங் உங்களுக்கு கிடைத்தால் நீங்களும் ஒரு இணைய உழைப்பாளிதான்.. இதைத்தான் பல இணைய நடத்துனர்கள் பின்பற்றுகின்றனர்.  

யுரியுப், மூலம் முகனூல் மூலம் அதிக வருமானம் பெற முடியும்.. அதற்கு இந்த அட்சென்ஸ் லிங் முக்கியமாக இருக்கிறது.. 


இனையத்தில் பல இடங்களில் மனதை கிழறும் தலைப்புகள் இருப்பதற்கு காரணம் பார்வையாளர்கள் அதிகமாகி இந்த உழைஉழைப்பை அதிகரிக்கலாம்.. 


இதனால் பல இணையங்கள் அதிகமக பொய் செய்திகள, புழுகு செய்திகளால் அலங்கரிக்கப்படும்.. மேல் உள்ள லிங்கை நீங்கள் உங்கள் இணையத்தில் பயன்படுத்தி அதனால் விளம்பரம் வந்தால் அரைவாசி வருமானம் தரப்படும்.

01/11/2019

விளம்படுத்துவதில் தமிழருக்கு நிகர் தமிழரே




விளம்பரம் என்பது இன்று பொருளாக இருந்தாலும் சேவையாக இருந்தாலும் மிக முக்கியமாக இருக்கிறது. அந்த வகையில் தமிழர்களுடாக எந்த ஒரு விளம்பரத்தையும் கட்டணமின்றி இலகுவாக மேற்கொள்ள முடியும் என்று சிலர் உணர்ந்திருப்பதோடு மேற்கொண்டும் வருவேன்றனர்.

அண்மையில் தென்னிலங்கை உணவகம் ஒன்றிற்காக பல பேர் தங்கள் முகனூலில் எதிர்பதாக கூறி விளம்பரத்தையும் உச்சத்தையுமே கொடுத்தனர்.


சிங்களவரை குஷிப்படுத்த வேலையாட்களை தமிழில் பேசவேண்டாம் என்று கடைக்குள்ளேயே பதாகை வைக்கும் இந்த உணவகத்தை உலகளாவிய தமிழர்கள் கண்டிக்கவேண்டியதும் தண்டிக்கவேண்டியதும் தட்டிக்கேட்க வேண்டியதும் கடப்பாடாகிறது.

மேலும் நாங்கள் செய்யவேண்டியது
Google - peppermint cafe srilanka - review - type ur words and attach this photo.

Google map இலும் இதையே செய்யலாம்.
நான் செஞ்சிட்டேன்.நீங்க வைச்சு செய்யுங்க.இருக்கிற எரிச்சலுக்கு அடிச்சு வெளாட நல்ல இடம்.
இப்படி பலர் பேசி பேசியே இந்த பேபர்மின்ற் கபே பலரது முகனூலில் விளையாடியது.

தமிழருக்கு எதிராக ஒன்றை தொடங்கினால் இலஙகையில் வெற்றி அடையலாம் என்பதும் அதன தமிழரே விளம்பரம் செய்து தருவார்கள் என்பதற்கு இதை விட சான்று வேறு தேவையில்லை.

விளம்பரம் இல்லாது இதனை வேறு முறைகளுக்கூடாக தீர்க்கலாமா என்று யோசிப்பதில்லை. உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கூடாக கடந்து போய்விடுவர். இந்த உணவகம் இனி உயர்மட்ட வளர்ச்சியடைய தமிழரே காரணமாவர்.

அடுத்த கட்டமாக இந்த செயற்பாட்டை மறந்து வேறொன்றினுள் புகுந்து அடுத்த வேலையை பார்பார்கள் எதிலும் தொடர்ச்சி இருப்பதில்லை.

29/10/2019

தேர்தல்லும் மக்களும் இடையில் யாரு






இலஙகை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவருக்கான தேர்தல் சூடுபிடிக்குமா??

மக்கள் என்ன யோசிக்கிறார்கள். போட்டியாளர் என்ன செய்கிறார்கள் என்றால் எல்லாம் புரியாதே உள்ளது..

எதிர்வு கூறமுடியாத அளவில் ஊடகஙகளும் ஆய்வாளர்களும் சொக்கி போயிருக்குமளவிற்கு தேர்தல் நிலவரம் காணப்படுகிறது. தற்போதைய எதிர்வு கூறல் முகனூல் பார்வையாளர்களினை கொண்டே கூறப்படுகிறது.

இந்த எதிர்வு கூறல் எவ்வளவு சாத்தியம். யுத்த முடிவு தமக்கே வெற்றி என்று கோத்தாவும் குடும்ப ஆட்சி முடிவு தமக்கே வெற்றி சஜித்தும் இதற்கிடையில் அனுர தம்பணியை கச்சிதமாக நகர்த்துகிறார்.

ஏனோ படித்த பலர் இவருக்கு பின்னால் இருந்தாலும் கீழ்மட்ட மக்கள் வாக்கு எங்கே என்பதே கேள்விகுறி. மக்கள் தாம் தேர்ந்தெடுக்கும் யாராலும் நன்மை இல்லாத நிலை என்ற எண்ணத்தில்தான்.

இலஙகை எனும் திருநாட்டில் யார் வந்தாலும் விலைவாசி கூட்டி மக்களின் வாழ்வில் விளையாடுவோரே இவர்கள். சரியான வேட்பாளர் தாம் விடும் விஞ்ஞானபவத்திற்கு ஏற்ப நடப்பதுமில்லை.

வெறும் வாய்ப்பேச்சில் மட்டுமே ஆட்சி தொடர்கிறது. மக்கள் நலன் சார்ந்து செயற்பட்ட அரசு அமைந்ததில்லை. அவ்வாறு அமைய மேலைத்தேய நாடுகள் விடப்போவதுமில்லை. 

உறவுகள் ஏன் உதவுவதில்லை.







உறவினர்கள் நல்லா இருந்தும் சிலர் முன்னேற்றமின்றி மிகவும் கடினமான நிலையில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் என்ன.

இரண்டே இரண்டு காரணஙகள்தான். அதில் நம்பிக்கையாக முன்னேற வழஙகப்படும் பணத்தில் சரியாக திட்டமிட்டு முன்னேற்றம் அடைய சிந்திக்காமையும் செயற்படாமையும்.

அடுத்து உறவுகளுக்கு பணம் வழஙகினால் தாம் உதவியது தெரியாது என்பதால் ஊர் பெயெர் தெரியாதோருக்கும், கோவில் குளம் விளையாட்டு கழகம் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு வழஙகினால் தம் பெயரும் புகழும் நிலைக்கும் என்று வழஙகுவர்.

இந்த இரண்டு காரணங்களால் உறவுகள நல்லா இருந்தும் உறவினர்கள் வறுமையில்.

அண்மையில் வெளிநாட்டில் ருந்து வந்த மகள்  தனது தாய்க்கு ஒரு ரூபாய் கூட வழஙகவில்லை. ஆனால் தன்னை பார்க்க தன் இருப்பிடத்திற்கு வந்த வெளியூரவர்களிற்கு 5000 கொடுத்தார். ஏன் எனில் தன்னை பற்றி அவர்கள் நல்லாக பேசவேண்டும் என்று.

தாய்க்கோ சகோதரிகளுக்கோ கொடுத்தால் யாரும் பேசமாட்டார்களாம். போலி வேசதாரிகளின் மத்தியில் நாமும் வாழ்கிறோம் என்று சொல்லி அந்த தாய் மெல்ல நகர்ந்தாள்.

இப்படி பல விடயங்கள் நடந்தாலும் சிலவே வெளியில் வருகின்றன. சிலரே வெளிப்படுத்துகின்ற. எல்லாம் விதி என்று நகர்வோராலே பல பிரச்சினைகள் தொடர்கின்றன

28/10/2019

சுயித் இந்த நிலைக்கு காரணம் "டிஜிட்டல் இந்தியா" நல்லா வருதுடா வாயில



👦 சுர்ஜித் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் இருந்து, இன்னொரு 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் செய்தியாளர்களிடம் ஒரு விடயத்தை கூறுகின்றான் அந்த வீடியோ காட்சியை பார்க்கும் போது "டிஜிட்டல் இந்தியா" நல்லா வருதுடா வாயில

அந்த சிறுவன் கூறுவதை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை இருந்தாலும் அவன் கூறியதை பதிவிடுகின்றேன்.
செய்தியாளர் ஒருவர் அந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவனைப் பார்த்து கேட்கின்றார் இந்த மீட்பு பணி ஆரம்பித்த நேரத்தில் இருந்து நீ ஒரு இடத்தில் நிற்காமல் எல்லா விடயங்களையும் கவனித்து கொண்டு திரிகிறியே எதற்காக என்று, அதற்கு அந்த சிறுவன் கூறுகின்றான் இங்கே மீட்பு பணியில் இருப்பவர்கள் கூட சில தவறுகள் விடுகின்றார்கள் என்று, அதற்கு செய்தியாளர் சொன்னார் நீ சிறுவன், அவர்கள் பெரியவர்கள் அவர்கள் செய்வது தவறு என்று எப்படி உனக்கு தெரியும் என்று,  அதற்கு அந்த சிறுவன் சொன்னான் நான் சிறுவன் தான் ஆனால் எனக்கு இந்த விடயத்தில் நிறைய அனுபவம் உள்ளது, எனது வீடு சுர்ஜித் வீட்டிற்கு அருகில் தான்  உள்ளது, எனது தந்தை இந்த ஆழ்துளை கிணறுகள் தோண்டும் தொழிலையே செய்து வந்தார் இப்போது அந்த தொழிலை கைவிட்டு விட்டார் அவர் அந்த தொழில் செய்யும் காலத்தில் கிணறு தோண்டும் பொழுது உள்ளே உபகரணங்கள் ஏதும்  விழுந்து விட்டால் அதை வெளியே எடுக்க சில உத்திகளை கையாளுவார்.  அது விழுந்த பொருள் இருக்கும் ஆழத்தை பொறுத்தே எந்த உத்தியை கையாள வேண்டும் என்று முடிவெடுப்பார். சாதாரணமாக ஒரு 20 அடிக்குள் விழுந்த பொருள் இருக்குமாயின் நானே அந்த கிணற்றினுள் தலைகீழாக சென்று  விழுந்த பொருளை எடுத்து வருவேன், அதை தான் ஆரம்பத்தில் செய்ய நானும் எனது தந்தையும் முடிவெடுத்தோம் ஆனால் இங்கே இருந்தவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை என்றான்.  மேலும் அவன் கூறுகையில் சிறுவன் சுர்ஜித் கிணற்றில் விழுந்த உடனே அவனுடைய தாயார் ஓடி வந்து எனது தந்தையிடம் கூறினார் நாங்கள் ஓடி வந்து பார்க்கும் போது அவன் குறைந்தது 10 அடி ஆழத்தில் தான் இருந்தான் அவன் மூச்சு விடும் சத்தமே வெளியே இருந்த எங்களுக்கு கேட்டது,  உடனே எனது தந்தை ஓடி சென்று கயிறு போன்ற தேவையான பொருட்கள் எடுத்து வர கொஞ்சம் தாமதமாகி விட்டது ஏனெனில் அவர் அந்த தொழிலை கைவிட்டதால் பொருட்கள் சரியான இடத்தில் இருக்கவில்லை, ஒரு வழியாக எல்லாம் எடுத்து வருவதற்குள் சிறுவன் கிட்டத்தட்ட 20 அடிக்கு சென்று விட்டான் காரணம் கிணற்றில் உட்பகுதி மழையில் ஊறி ஈர தன்மையில் இருந்ததால் வழுக்கும் தன்மை இருந்து, அப்போது நான் கிணற்றினுள் தலைகீழாக இறங்க நானும் தந்தை தயார் ஆனோம் ஆனால் அங்கு இருந்தவர்கள் விடவில்லை, பிறகு ஜேசிபி இயந்திரம் மூலம் பக்கவாட்டில் தோண்ட ஆரம்பித்தார்கள் அப்போது கூட எனது தந்தை சொன்னார் இயந்திரத்தின் அதிர்வால் சிறுவன் இன்னும் கீழே போக வாய்ப்பு உள்ளது என்று யாரும் அதை பொருட்படுத்தவில்லை அதனால் தான் இவ்வளவு கடினமாக உள்ளது என்றான்.
சரி இப்போது உனது தந்தை எங்கே உள்ளார் என்று கேட்க அவன் சொன்னான் இங்கே இருக்கும் வல்லுநர்களின் முட்டாள் தனமான வேலைகளை பார்த்தால் எனக்கு கோபம் வருகிறது நான் இங்கு இருக்கவில்லை என்று வீடு சென்று விட்டார் என்றான்.

ஆரம்பத்தில் இருந்தே எல்லாம் தவறாகத் தான் நடைபெறுகின்றது இந்த சம்பவத்தை வைத்து சில அரசியல் ஏற்பாடுகளும் நடைபெறுவதாக அறிய முடிகின்றது

வல்லுநர்களே படித்தால் மட்டும் போதாது அனுபவம் றொம்ப முக்கியம்

@ரோசி மேரி

பொய்க்கு உண்மையாயிருத்தல்

 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இத...