16/01/2018

அவர்களை இன்று நினைக்கிறார்களா

செலவழித்தும் மண்கவ்வும் கட்சிகள் வடபுலத்தில் அதிகம் உண்டு. ஆனாலும் எந்த செலவுமின்றி அதிக வெற்றி பெறும் பெறும் கட்சியும் உண்டு

அந்த கட்சி த.தே.கூட்டமைப்பு மட்டுமே. 
இவர்களிற்கு ஏனைய கட்சிகள் வானொலி தொலைக்காட்சி ஊடாக விமர்சிப்பது போல் விளம்பரம் செய்கின்றனர்.

அதனை விட நேரடி விவாதத்திற்கும் அழைத்து செலவில்லா விளம்பரம் வழங்குகின்றனர் இது த.தே.கூட்டமைபிற்கு வெற்றிக்கு காரணம். 

த.தே.கூட்டமைப்பை விமர்சிப்பதனை அடிப்படையாக கொண்டு தாமும் தமது கட்சியும் மக்களிற்கு என்ன செய்ய போகுது என்பதனை கூற மறந்து விடுகின்றனர்.

இதனால் மக்கள் எல்லோரும் தமது மனதில் எது இருக்கிறதோ அதேற்கே ஓட்டை போட்டு ஏனையோர் செலவில் த.தே.கூட்டமைப்பு வெற்றி பெற உதவி செய்து விடுகின்றனர். 

தாம் வெட்டிய குழியில் ஏனைய கட்சிகள் வீழ்ந்து விடுகின்றன. கட்டுரை பிடித்தால் கொமன்ற் இடவும். இல்லா  பகிரவும்.

15/01/2018

தமிழ் மக்களின் இன்றய தேவை.



இன்றய சூழலில் தமிழ் மக்கள் இரு பிரதான கட்சியை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.

ஏன் எனில் ஒருவருக்கு ஒருவர் போட்டி இல்லாத போது மக்கள் திணற வேண்டி வரும். போட்டியாளன் உண்டு எனில் சரியான பாதையில் பயணிப்பர்.

மக்களின் கோரிக்கைகள் நிறைவேறும். தமக்கே உரித்தான கடமைகளை செய்வேன செய்வார்கள்.

இதனை  இல ங்கையின் பிரதான சிங்கள கட்சிகள் சில விடயங்களில் பின் நிற்பதை பார்கலாம். அரசியல் போட்டியே இதற்கு முழு காரணமும்.

இந்த நிலை தமிழ் கட்சிகளில் உருவாக வேண்டும். அப்பொழுதே தமிழ் மக்களும் தமது உரிமை மற்றும் இருப்பை தக்க வைக்கமுடியும்.

தமிழ் மக்களிற்கான ஒரு சந்தர்ப்பம். இக்கால கட்டம் ஆணவ காரரை அடக்கி ஏனைய கட்ட்சிகளுக்கும் கடிவாளம் போடும் தருணம்.

தற்போது எந்த கட்சிக்கும் கடிவாளம் தமிழ் மக்களால் போடப்படவில்லை. மக்கள் புள்ளடி கடிவாளமாகுமா.
இக்கட்டுரை பிடித்தால் கொமற் இடவும். 

14/01/2018

இவர்களா மக்களிற்கு சேவை செய்யபோகிறார்கள்


இவர்களா மக்களிற்கு சேவை செய்ய போகிறார்கள். ஆம் இவர்களேதான். எப்படி செய்வர்.

தமது அரசியல் இருப்புக்கும், கதிரை பெறவும்  கட்சி விட்டு கட்சி வந்தோர் மக்களிற்கு சேவை செய்வார்களா?

தமது நலன் சார்ந்தும் , தமது சுய கௌரவம் சார்ந்தும் அரசியலுக்கு வருகை தந்தோரா மக்களிற்கு நல்லது செய்ய போகிறார்கள்.

மக்கள் தாம் ஏமாளிகள் ஆகாமல் இருக்க ஒரு மாற்றமும் தமது பலத்தையும் இந்த உள்ளூராட்சி தேர்தலில் புகட்ட வேண்டும்.

இது ஒவ்வொரு கட்சியும் உணர்ந்து கொள்ளும் முறையில் மக்கள் தீர்ப்பு அமையவேண்டும்.

இந்த சந்தர்ப்பம் போனால் இனி வரும் காலம் 2009 ஆண்டு காலத்தை விட மிகமோசமாகும்.

அவ்வளவிற்கு இளைஞர்கள் இழப்பை சந்திப்போம். மதுவால் பாலியல் தொல்லையால் வீதி விபத்தால்.

தமிழ் மக்களின் ஒற்றுமை மற்றும் ஆணவம் உடையோருக்கு சரியாக பாடம் புகட்ட வேண்டும். யார் எப்போது தேவை என்பதை உணர்ந்து வாக்காளித்தால் தமிழ் வாழும்.

தேர்தலும் சாவீடுகளும்

இந்த தேர்தல் மக்களை ஒன்றிணைக்க வேண்டும். ஆனால் மாறாக பிரிவினையை தூண்டி விட்டு குளிர் காயும் போல் உள்ளது.

கட்சி தலமைகளிற்கு தமது அணி வெற்றி பெற்றால் சரி. அவகள் சாவீடு சென்றாலென்ன சாதி பற்றி கூட்டம் போட்டாலென்ன.

எல்லாம் தலைமைக்கு கட்சி வெற்றிதான் முக்கியம். இத்தேர்தலில் சாதியம் பற்றிய கருத்துக்களும் அள்ளி வீசப்படுகின்றன. 

இந்திய சினிமா பாணிபோல் சாதிக்கு ஓட்டு போடு என்ற நிலை இத்தேர்தலில் மறைமுக விளம்பரமாகும்.

இதனை எல்லா சாதியமும் கண்டும் கானமல் இருக்கின்றனர் பதவி மோகத்தில். இதுவே விருச்சாமாகும் என மாகாணசபை உறுப்பினர் ஒருவரே கவலைப்பட்டார். தாய்முலை திருடியும் தான்வாழ புத்தி என்பது உண்மையே.

08/01/2018

தமிழ் மக்கள் ஓட்டு அரசியல் யாப்புக்கே.



தமிழ் மக்கள் அரசியல் யாப்புக்கே வாக்களிக்கவேண்டும் என்ற கருத்து பட அதன் பேச்சாளர் m.a. சுமந்திரன் கூறியுள்ளார்.

இந்த புதிய அரசியல் யாப்பை ஏற்றுகொள்ள வேண்டும் எனவும் இதனை விட்டால் வேறு சந்தர்ப்பங்கள் இருக்காது எனவும் த.தே. கூ கூறுகின்றது.

ஆனால் ஏனைய கட்சிகள் இந்த யாப்பு தமிழ் மக்களுக்கு சலுகைகள் குறைவு என்றும் இதனை நிறைவேற்ற விட்டால் தமிழ் மக்களும் சிறுபான்மை இனமும் வாழ்வது கடினம் என கூறப்படுகிறது.

எப்படி ஆயினும் மக்கள் ஒரு குழப்ப நிலையில் இருக்கின்றனர். இதற்கு சரியான விளக்கத்தை வேட்பாளர்களும், சட்டவாளர்கள் பாரளுமன்ற உறுப்பினர்களுமே விளக்கவேண்டும்.

உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் தெரிவிலேயே தங்கி இருக்கிறது.

த.தே.கூ வென்றால் ஏனைய கட்சிகள் இனிவரும் காலங்களில் ஆணவத்துடனும் த.தே.ம.முன்னணி வென்றால் த.தே.கூ  கொஞ்சம் இறங்கி வேலை செய்ய வேண்டியும் வரும்.

02/01/2018

கட்சிக்கா வேட்பாளருக்கா??

இது விசித்திரமான கேள்வி. கட்சியை விட வேட்பாளருக்கு வாகளிக்கலாமா மக்கள் கேள்வி ஆதங்கம் ம்ம் அளிக்கலாம்.

இது பிரதேச சபை தேர்தல். பிரதேச கிராமமட்ட அபிவிருத்திக்கி முடிந்த அளவு ஆளும் கட்சிகள் வெற்றி பெற்றால் அபிவிருத்தியடைய வாய்ப்புகள் அதிகம்

கட்சியை விடவும் எம்மக்கள் விரும்பமாட்டார்கள். நின்மதி அபிவிருத்தி இன்றி போனாலும் தன்மானம் விடமாட்டார்கள்.

இதனை உள்ளூராட்சி தேர்தலிலும் மக்கள் புகட்டுவர். எல்லாம் மக்கள் கைகளில். அபிவிருத்தி கட்சிக்கா ஊள்ளூராட்சி கிராமங்களிற்கா

01/01/2018

குழப்புறாரா இல்லா எதிர்கின்றாரா உண்மைகள் சில மாதங்களில்.

பிடித்தால் சேயா மற்றும் கொமன்ற் போடவும். கொமற் குலுக்கலில் வெற்றி பெற்றால் பரிசினை பெறல்லாம்.

 தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான நாளும் குறிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யார் வெற்றி என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த கால கட்டத்தில் தேர்தல் காலங்களில் விக்கி ஐயா பல்வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவார்.

அதனால் தமிழரசு கட்சி ஏக்கத்திலும் ஏனைய கட்சிகள் கொண்டாட்டத்திலும் மிதக்கும்.

இவர்கள் அனைவரும் எதிர்பார்பதற்கு மேலாக மக்கள் தீர்ப்பை மாற்றி விடுவர். எதிர்பார்த்து பார்த்து தோல்வியடைந்தோரில் சைக்கிள் கட்சி அதிகமா உள்ளது.

தற்போதைய நிலையிலும் மக்கள் மாற்று கட்சியை விரும்புகின்றனர். அதன் தாகம் வெளிப்படுமா என்ற நிலையில் விக்கி ஐயாவின் கருத்துக்கள் வீட்டுக்கு பெரும் தலையிடியே.
இதனை எல்லாம் தேர்தலின் பிந்தான் பார்க்க வேண்டும்.

இக்கருத்துக்கள் பலித்தால் விக்கி ஐயா பெரியவராவர். பலிக்காவிட்டால் வீடு ஆணவத்தின் உச்சம் செல்லும்.
மக்களை யாரும் காப்பாற்ற முடியாத நிலையும் உருவாகலாம்.
அடுத்த கட்டுரை படிம அரசியல்.

பொய்க்கு உண்மையாயிருத்தல்

 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இத...