Posts

Showing posts from January, 2018

தீர்கதரிசியின் வார்தை விளங்காதவர்களா??

Image
இந்த உலகம் மானிட தர்மத்தின் சக்கரத்தில் சுழலவில்லை . ஒவ்வொரு நாடும் தனது தேசிய சுய நலத்தையே  முதன்மைப்படுத்துகின்றது. மனித உரிமை, மக்கள் உரிமை, என்ற தார்மீக அறத்திலும் பார்க்க பொருளாதார, வர்த்தக நலன்களே இன்றைய உலக ஒழுங்கை நிர்ணயிக்கின்றன. ஆகையால் எமது போராட்டம் தார்மீக அறத்தினை சர்வதேச சமூகம் உடனடியாக அங்கீகரிகும் என நாம் எதிர்பார்க்க முடியாது. மேதகு வே.பிரபாகரன். இதனை எப்பவோ சொல்லியிருந்தும் மக்கள் ஏமாற்றும் இயல்புடையோரை நம்புகின்றனரா? இல்லை வேறு தெரிவின்றி வாழ்கின்றனர். அதனை பயன்படுத்தியே இவர்கள் தமது அரசியலை நடத்துகின்றனர். ஒவ்வொரு நாடும் தமது தேசிய சுய நலத்திற்காக ஒன்றிணைந்தன. தமிழரின் போரை அழித்தன. தமிழரே உதவினர். தற்போது சேந்து ஒழித்த நாடுகள் தமது இருப்பிற்காக தமிழரை நாடுகின்ற போது அரசியல் வாதிகள் சுகபோகம் அனுபவிக்கின்றனர். கொத்து குண்டு போட்டாலும் அணுகுண்டு போட்டாலும் தமது தேசிய பொருளாதாரத்திற்கு பலன் இல்லாவிட்டால் யார் செத்தாலும் ஏனைய நாடுகளிற்கு எந்த சிக்கலும் இல்லை. இதனை தமிழினத்தின் தலைவர் ஒருசில வார்த்தைகளில் உலகின் தன்மையை சொல்லியிருக்கிறார். இனியாவது மக்க

புலம் பெயர் தமிழர்கள் பிரிகின்றார்களா??

Image
புலம் பெயர் தமிழர்கள் பிரித்தாளும் நடவடிக்கையில் செயற்படுகிறார்களா? இல்லா ஈழத்திற்காக குரல் கொடுக்கின்றனரா? மக்கள் குழம்பிய நிலையில் இந்த நடவடிக்கைகளுக்கு காரணம் என்ன? பிரித்தானிய தமிழரும் அவுஸ்ரேலிய தமிழரும் எதிர்க்க தமிழர் அதிகம் வாழும் கனடாவில் இல ங்கை பாரளுமன்ற உறுப்பினர் சென்று உரையாற்றி வந்திருக்கின்றார். யாருடையா உரையாடலகா  இருந்தாலும் தமிழர்களின் ஒரே தலைவன்  பிரபாகரனையோ அல்லது உயிர்காத்த காவல் தெய்வங்கள் மாவீரர்கள் போராளிகள் பற்றியதாக இருக்கின்றது. இங்கு சிலரின் இருப்புக்கும் சிலர் தம்மை முன்னிறுத்தவுமே இவ்வாறு செயற்படுகின்றனர். "புலிகளை நினைக்கும் போது வருவது என்ன அச்சம் எலிகளைப் போல் ஓடி ஒழிப்பதுதான் மிச்சம்" எனும் பாடல் அடிகள் இங்கு பலருக்கு பொருந்தும். இப்போது தமிழர்களினது நிலை எப்படி இருக்கிறது என்று பார்த்தால் தகப்பன் இல்லாத பிள்ளைகளையும் தாயையும் போலவே ஈழமும் தமிழரும். இந்த நிலைக்கு பிள்ளைகள் ஒன்றிணைய வேண்டும். இல்லாது விட்டால் வளம்  எல்லாம் சுரண்டப்பட்டு விடும். புலம் பெயர் அமைப்புகாலும் புலம் பெயர் தமிழர்களுமே இதற்கு சரியான தீர்வை வைக்கமுடிய

பிணைமுறி சிறு விளக்கம்.

Image
பிணைமுறி என்றால் என்ன? பிணைமுறி என்பது அரசுக்கு கடன் பெற்றுக்கொள்ளும் வழிமுறையாகும். மின் உற்பத்தி நிலையமொன்றை நிர்மாணிக்க நிதி தேவைப்படுகின்றபோது, அரசு மத்திய வங்கியினூடாக பிணைமுறி ஏலம் வெளியிடப்படுகின்றது. அப்படியென்றால் நிரந்தர வைப்புச் சான்றிதழொன்று என நினைத்துக்கொள்க. அவற்றை சாதாரண மக்களைப் போன்றே வங்கிகளும் கொள்வனவு செய்யமுடியும். அதற்காக வட்டியும் வழங்கப்படுகின்றது. இதனால் பிணைமுறிகளை கொள்வனவு செய்வது மக்களைப் போன்றே, வங்கிகளுக்கும் முதலீட்டு உபாயமொன்றாகும். வங்கிகள் இந்த பிணைமுறிகளை கொள்வனவு செய்வதேன்? என நீங்கள் நினைக்கக்கூடும். வங்கிக் கிளைகளுக்கு கிடைக்கப்பெறும் வைப்புகளை கடன் கொடுத்தே அவர்கள் இலாபமீட்டுகின்றனர். அதேபோன்று, அவர்கள் இலாபமீட்டும் எதிர்பார்ப்பில் கடன் வழங்குகின்றனர். கடன் வழங்கியும் எஞ்சியிருக்கும் பணத் தொகையை கிடப்பில் வைக்காது அதனை பிணைமுறிகளில் முதலிடுகின்றனர். பிணைமுறிகளென்பது ஒரு வருடத்திற்கு மேற்பட்ட கால எல்லையைக் கொண்டவைகள். திறைசேரி பில்கள் வருடமொன்றுக்கு குறைவான கால எல்லையைக் கொண்டதாகும்.  எக்ஸ் என்பவர் ஒரு இலட்சம் செலுத்தி பிணைமுறியொன்று கொள்

அரசியலில் மக்கள் தெளிவடைவது எப்போது.

Image
வடக்கு மக்களை பொறுத்தவரை அரசியலில் தெளிவு என்று சொல்லவே முடியாது. தெளிவு படுத்துவோரையும் ஏற்பதும் இல்லை. இம்மக்கள் சொற்படி நடப்போரே. அதனால் கண்மூடித்தனமாக ஓட்டை போட்டு துன்ப படுகின்றனர். இந்த நிலையே இம் மக்களின் வேதனைக்கு காரணம். சிறுபாண்மை கட்சிகளின் வாக்கு பலம் என்று உணர்ந்தும் பேரினவாதம் இவர்களினை வஞ்சிக்க தவறவில்லை. எப்போது அரசியலுக்கு யார் தேவை என்பதை இம்மக்கள் முடிவெடுக்கவேண்டும். அதில் கட்சி பேதங்கள் பார்த்து போடுகின்றனர் என்றால் மக்கள் தெளிவில்லை என்பதே. மக்கள் தெளிவு மிக முக்கியம் ஆட்சியாளருக்கு ஒரு பயம் வர மக்களால் மட்டுமே செயற்பட முடியும்.

படித்தவர்களிற்கு ஆப்பா??

Image
ஆம் எல்லோரும் யோசிக்காத விடயம். திசைதிருப்பல் என்பதும் இதுவே. படித்தோர் பலர் எதிர்பார்க்காத இடத்தில் தாக்குதல். இது யோசிக்க வேண்டிய தருணம்.  பல படித்த அலுவலகங்களில் வேலை செய்வோர் சம்பள உயர்வு என்ற நிலையில் குதுகலமாக்கி பொருட்களின் விலை அதிகமாகி இருக்கிறது.  இதனை உணரும் தருவாயில் எம்மவர் இல்லாத போது அவர்களும் பணம் ஒன்றே குறிக்கோள் எனும் போது பலருக்கு குழந்தை பாக்கியம் கூட இல்லாது செய்யப்படிருக்கிறது.  இங்கு பலரின் கருத்து விதி. ஆனால் ஒரு சிலர் சரி ஏற்று கொண்டாலும் பலரும் குழ ந்தை இன்றி இருப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது.  அதிலும் அரச அலுவலர்கள் இப்பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளனர். அதிக மனாழுத்தமும் காரணம். இங்கு படித்தவர்கள் பணக்காரரே அதிகம் தாக்கப்படுகின்றனர். அவர்கள் பணத்திற்காக தமது இருப்பை இழக்க போகிறார்கள்.  ஒரே தீர்வு பழமை பின்பற்றுவதும் இயற்கை உணவு பழக் கவழக்கங்களினை பின்பற்றுவதுமே.  ஆனால் பணம் வறட்டு கௌரவம் பார்க்கும் எம்மவர் இக்கட்டுரையை கூட தூக்கி வீசலாம்.  ஆனால் உங்களை அறியாமல் நீங்கள் அழிவதை தடுக்கமுடியாது. புற்றுனோய் தாக்கம் கூட அதிகளவ

சாக்கடையில் ஏன் படித்தவர்கள்.

Image
படித்தவர்கள் அதிகமாக அரசியலில் இருக்கின்றனர். ஏன் எல்லோரும் சாக்கடை எனும் இடத்தில் கொட்டகை போட்டு படுத்திருக்கின்றனர். அங்கேதான் பாதுகாப்பு மற்றும் பணம் அதிகம். இக்கதையை படித்தால் புரியும். சீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது ..... கொள்ளையா்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினா் . ""இந்த பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது"" அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் .... . மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . ". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking." . அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தை திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி அமர வைத்தான்.... . இதை தான் செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம் "Being Professional & Focus only on what you are trained"" . கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிர

அவர்களை இன்று நினைக்கிறார்களா

Image
செலவழித்தும் மண்கவ்வும் கட்சிகள் வடபுலத்தில் அதிகம் உண்டு. ஆனாலும் எந்த செலவுமின்றி அதிக வெற்றி பெறும் பெறும் கட்சியும் உண்டு அந்த கட்சி த.தே.கூட்டமைப்பு மட்டுமே.  இவர்களிற்கு ஏனைய கட்சிகள் வானொலி தொலைக்காட்சி ஊடாக விமர்சிப்பது போல் விளம்பரம் செய்கின்றனர். அதனை விட நேரடி விவாதத்திற்கும் அழைத்து செலவில்லா விளம்பரம் வழங்குகின்றனர் இது த.தே.கூட்டமைபிற்கு வெற்றிக்கு காரணம்.  த.தே.கூட்டமைப்பை விமர்சிப்பதனை அடிப்படையாக கொண்டு தாமும் தமது கட்சியும் மக்களிற்கு என்ன செய்ய போகுது என்பதனை கூற மறந்து விடுகின்றனர். இதனால் மக்கள் எல்லோரும் தமது மனதில் எது இருக்கிறதோ அதேற்கே ஓட்டை போட்டு ஏனையோர் செலவில் த.தே.கூட்டமைப்பு வெற்றி பெற உதவி செய்து விடுகின்றனர்.  தாம் வெட்டிய குழியில் ஏனைய கட்சிகள் வீழ்ந்து விடுகின்றன. கட்டுரை பிடித்தால் கொமன்ற் இடவும். இல்லா  பகிரவும்.

தமிழ் மக்களின் இன்றய தேவை.

Image
இன்றய சூழலில் தமிழ் மக்கள் இரு பிரதான கட்சியை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. ஏன் எனில் ஒருவருக்கு ஒருவர் போட்டி இல்லாத போது மக்கள் திணற வேண்டி வரும். போட்டியாளன் உண்டு எனில் சரியான பாதையில் பயணிப்பர். மக்களின் கோரிக்கைகள் நிறைவேறும். தமக்கே உரித்தான கடமைகளை செய்வேன செய்வார்கள். இதனை  இல ங்கையின் பிரதான சிங்கள கட்சிகள் சில விடயங்களில் பின் நிற்பதை பார்கலாம். அரசியல் போட்டியே இதற்கு முழு காரணமும். இந்த நிலை தமிழ் கட்சிகளில் உருவாக வேண்டும். அப்பொழுதே தமிழ் மக்களும் தமது உரிமை மற்றும் இருப்பை தக்க வைக்கமுடியும். தமிழ் மக்களிற்கான ஒரு சந்தர்ப்பம். இக்கால கட்டம் ஆணவ காரரை அடக்கி ஏனைய கட்ட்சிகளுக்கும் கடிவாளம் போடும் தருணம். தற்போது எந்த கட்சிக்கும் கடிவாளம் தமிழ் மக்களால் போடப்படவில்லை. மக்கள் புள்ளடி கடிவாளமாகுமா. இக்கட்டுரை பிடித்தால் கொமற் இடவும். 

இவர்களா மக்களிற்கு சேவை செய்யபோகிறார்கள்

Image
இவர்களா மக்களிற்கு சேவை செய்ய போகிறார்கள். ஆம் இவர்களேதான். எப்படி செய்வர். தமது அரசியல் இருப்புக்கும், கதிரை பெறவும்  கட்சி விட்டு கட்சி வந்தோர் மக்களிற்கு சேவை செய்வார்களா? தமது நலன் சார்ந்தும் , தமது சுய கௌரவம் சார்ந்தும் அரசியலுக்கு வருகை தந்தோரா மக்களிற்கு நல்லது செய்ய போகிறார்கள். மக்கள் தாம் ஏமாளிகள் ஆகாமல் இருக்க ஒரு மாற்றமும் தமது பலத்தையும் இந்த உள்ளூராட்சி தேர்தலில் புகட்ட வேண்டும். இது ஒவ்வொரு கட்சியும் உணர்ந்து கொள்ளும் முறையில் மக்கள் தீர்ப்பு அமையவேண்டும். இந்த சந்தர்ப்பம் போனால் இனி வரும் காலம் 2009 ஆண்டு காலத்தை விட மிகமோசமாகும். அவ்வளவிற்கு இளைஞர்கள் இழப்பை சந்திப்போம். மதுவால் பாலியல் தொல்லையால் வீதி விபத்தால். தமிழ் மக்களின் ஒற்றுமை மற்றும் ஆணவம் உடையோருக்கு சரியாக பாடம் புகட்ட வேண்டும். யார் எப்போது தேவை என்பதை உணர்ந்து வாக்காளித்தால் தமிழ் வாழும்.

தேர்தலும் சாவீடுகளும்

Image
இந்த தேர்தல் மக்களை ஒன்றிணைக்க வேண்டும். ஆனால் மாறாக பிரிவினையை தூண்டி விட்டு குளிர் காயும் போல் உள்ளது. கட்சி தலமைகளிற்கு தமது அணி வெற்றி பெற்றால் சரி. அவகள் சாவீடு சென்றாலென்ன சாதி பற்றி கூட்டம் போட்டாலென்ன. எல்லாம் தலைமைக்கு கட்சி வெற்றிதான் முக்கியம். இத்தேர்தலில் சாதியம் பற்றிய கருத்துக்களும் அள்ளி வீசப்படுகின்றன.  இந்திய சினிமா பாணிபோல் சாதிக்கு ஓட்டு போடு என்ற நிலை இத்தேர்தலில் மறைமுக விளம்பரமாகும். இதனை எல்லா சாதியமும் கண்டும் கானமல் இருக்கின்றனர் பதவி மோகத்தில். இதுவே விருச்சாமாகும் என மாகாணசபை உறுப்பினர் ஒருவரே கவலைப்பட்டார். தாய்முலை திருடியும் தான்வாழ புத்தி என்பது உண்மையே.

தமிழ் மக்கள் ஓட்டு அரசியல் யாப்புக்கே.

Image
தமிழ் மக்கள் அரசியல் யாப்புக்கே வாக்களிக்கவேண்டும் என்ற கருத்து பட அதன் பேச்சாளர் m.a. சுமந்திரன் கூறியுள்ளார். இந்த புதிய அரசியல் யாப்பை ஏற்றுகொள்ள வேண்டும் எனவும் இதனை விட்டால் வேறு சந்தர்ப்பங்கள் இருக்காது எனவும் த.தே. கூ கூறுகின்றது. ஆனால் ஏனைய கட்சிகள் இந்த யாப்பு தமிழ் மக்களுக்கு சலுகைகள் குறைவு என்றும் இதனை நிறைவேற்ற விட்டால் தமிழ் மக்களும் சிறுபான்மை இனமும் வாழ்வது கடினம் என கூறப்படுகிறது. எப்படி ஆயினும் மக்கள் ஒரு குழப்ப நிலையில் இருக்கின்றனர். இதற்கு சரியான விளக்கத்தை வேட்பாளர்களும், சட்டவாளர்கள் பாரளுமன்ற உறுப்பினர்களுமே விளக்கவேண்டும். உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் தெரிவிலேயே தங்கி இருக்கிறது. த.தே.கூ வென்றால் ஏனைய கட்சிகள் இனிவரும் காலங்களில் ஆணவத்துடனும் த.தே.ம.முன்னணி வென்றால் த.தே.கூ  கொஞ்சம் இறங்கி வேலை செய்ய வேண்டியும் வரும்.

கட்சிக்கா வேட்பாளருக்கா??

Image
இது விசித்திரமான கேள்வி. கட்சியை விட வேட்பாளருக்கு வாகளிக்கலாமா மக்கள் கேள்வி ஆதங்கம் ம்ம் அளிக்கலாம். இது பிரதேச சபை தேர்தல். பிரதேச கிராமமட்ட அபிவிருத்திக்கி முடிந்த அளவு ஆளும் கட்சிகள் வெற்றி பெற்றால் அபிவிருத்தியடைய வாய்ப்புகள் அதிகம் கட்சியை விடவும் எம்மக்கள் விரும்பமாட்டார்கள். நின்மதி அபிவிருத்தி இன்றி போனாலும் தன்மானம் விடமாட்டார்கள். இதனை உள்ளூராட்சி தேர்தலிலும் மக்கள் புகட்டுவர். எல்லாம் மக்கள் கைகளில். அபிவிருத்தி கட்சிக்கா ஊள்ளூராட்சி கிராமங்களிற்கா

குழப்புறாரா இல்லா எதிர்கின்றாரா உண்மைகள் சில மாதங்களில்.

Image
பிடித்தால் சேயா மற்றும் கொமன்ற் போடவும். கொமற் குலுக்கலில் வெற்றி பெற்றால் பரிசினை பெறல்லாம்.  தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான நாளும் குறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யார் வெற்றி என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த கால கட்டத்தில் தேர்தல் காலங்களில் விக்கி ஐயா பல்வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவார். அதனால் தமிழரசு கட்சி ஏக்கத்திலும் ஏனைய கட்சிகள் கொண்டாட்டத்திலும் மிதக்கும். இவர்கள் அனைவரும் எதிர்பார்பதற்கு மேலாக மக்கள் தீர்ப்பை மாற்றி விடுவர். எதிர்பார்த்து பார்த்து தோல்வியடைந்தோரில் சைக்கிள் கட்சி அதிகமா உள்ளது. தற்போதைய நிலையிலும் மக்கள் மாற்று கட்சியை விரும்புகின்றனர். அதன் தாகம் வெளிப்படுமா என்ற நிலையில் விக்கி ஐயாவின் கருத்துக்கள் வீட்டுக்கு பெரும் தலையிடியே. இதனை எல்லாம் தேர்தலின் பிந்தான் பார்க்க வேண்டும். இக்கருத்துக்கள் பலித்தால் விக்கி ஐயா பெரியவராவர். பலிக்காவிட்டால் வீடு ஆணவத்தின் உச்சம் செல்லும். மக்களை யாரும் காப்பாற்ற முடியாத நிலையும் உருவாகலாம். அடுத்த கட்டுரை படிம அரசியல்.