29/12/2017

யாழ் மாநகர சபையை இழக்குமா வீடு.




யாழ் மாநகர சபைக்கு யார் மேஜர் என்பது பலரின் கேள்வி. யாருக்கு ஓட்டு போடுவது என்பது மற்றய கேள்வி.

விடை கிடைக்குமா?? எல்லாம் 11 திகதி மக்களின் தீர்ப்பில்தான். ஆனால் மா நகத சபை தேர்தலில் த.தே.கூ அமைப்பு வெல்லும் நிலை காணப்பட்டாலும் எதிரணியினரும் பலமான வேட்பாளர்களை இறக்கியுள்ளது

த.தே.ம. பேரவையில் மணிவண்ணன் தலமையில் பலமாக உள்ளது.

அடுத்த நிலையில் இலங்கை சுதந்திர கட்சி ஊரில் மதிப்பு மிக்க ஊரில் வேலை செய்யும் மக்கள் மத்தியில் உலாவுவோரையும் நிறுத்தி உள்ளது.

இது நிட்சயம் வீட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம். மக்களும் வீட்டில் விரக்தி உற்று இருப்பதும் பெரும் இழப்பே ஆகும்.

அதைவிட ஊடகங்கள் ஏனைய கட்சிகள்ளுக்கு கொடுக்கும் ஆதரவும் அதிகம்.

சமூக வலைத்தளங்களும் தாக்க தவறவில்லை. இதை எல்லாம் எப்படி சமாளித்து வீடு உருப்பெறும் என்பதே கிளைமாக்ஸ்.


28/12/2017

பருத்தித்துறை தொகுதியில் மண் கௌவுவாரா.


பருத்தித்துறை தொகுதி வட அரசியலில் பேசப்படுகின்ற இருவருக்கான முக்கிய தொகுதி.

அத்தொகுதியில் தம்மை நிலை நிறுத்துவது மிகவும் அவசியம். அதனால் இருவருக்கிடையிலான செயற்பாடுகள் தீவிரமாக இருக்கிறது.

சுமந்திரன் மற்றும் கயேந்திரகுமார் ஆகியோருக்கிடையிலானது. இங்கு தமது இருப்பை தக்கை வைப்பது என்பது மிக அவசியம்.

சுமந்திரன் உள்ளூராட்சியில் வடமராட்சி கிழக்கில் தனது பலத்திற்காக பலரை இறக்கி இருக்கிறார். அவர்கள் மீது தெரிவு செய்யப்படாத சிலர் அதிதிருப்தியில் உள்ளனர்.

கயேந்திரகுமார் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது கட்சியின் மீதும், வேட்பாளர் கனவுள்ளோரையும் இறக்கி உள்ளார்.

சுமந்திரன் மீதான வெறுப்பும் கயேந்திரகுமார் வெல்ல சாத்தியப்படலாம்.

யார் மன் கௌவுவது என்பது அந்த அந்த உள்ளூராட்சி வேட்பாளர் கைகளிலேயே.

தமது தலையை காக்க சிறப்பாக செயற்படவேண்டும்.

27/12/2017

தமிழரசு கட்சிக்கு ஆபத்தா


தமிழரசு கட்சிக்கு ஆபத்தா. எல்லோரும் ஆபத்து என்றே கருதுகின்றனர். ஆனால் அதற்கும் மீறி பலம் கூடவும் வாய்பு அதிகம்

விக்கி ஐயா எதிராக பேசுவதும் சம்மந்தர் ஐயாவை மகிந்த பார்த்ததும் குழப்பத்தை ஏற்படுத்தும் என சிலர் எண்ணுகின்றனர்.

எல்லாம் மீறி வீடு பலம் அடைவதை யாராலும் தடுக்க முடியாமல் இருக்கும்.

அதன் போது பிரிந்தவர்கள் கூட மனதிற்குள் ஏங்கும் நிலை வரும்


இது உள்ளூராட்சி தேர்தல் என்பதால் வீடு பலம் குன்றலாம். விக்கி ஐயாவின் பிரிவு தாக்கமாக அமையப்போவது இல்லை என்பதும் கண்கூடாகும்

எல்லாம் காத்திருந்தே பார்க்கவேண்டும்.

26/12/2017

சுனாமி தாக்கத்தை ஈடு செய்ய முடியுமா?

உள் நாட்டு போரின் தாக்கத்தை சீர் செய்ய முடியாமல் திணறும் காலத்தில் 13 வருடம் சென்றும் மக்கள் மறக்கவில்லை.

வட கிழக்கு பகுதியில் மக்கள் உறவுகள் உடைமைகளுடன் சொந்த இடத்தையும் விட்டு அகலும் நிலைக்கு இந்த சுனாமி ஏற்படுத்தியது.

மக்கள் தமது தன்னம்பிக்கை உட்பட அனைத்தையும் இழக்க வைத்து கையேந்த வைத்தது.

இந்த சுனாமி நலனோன்பும் நிறுவனங்கள் வர காரணமாகவும் இருந்தது.

அவற்றி உதவி எம்மை தமது முழு கட்டிப்பாட்டில் கொண்டு வந்தது. எம்மை எமது விரல் கொண்டு குத்தும் படி எமது தகவல் தரவுகளை சேகரித்தது.

எல்லாவற்றுக்கும் காலம் வரும் வரை காத்திருந்து எமது போரை அழித்தது.

எமது இனத்தை தட்டி தடுமாற வைத்தது. இஎல்லாம் எமது மக்கள் இழக்கவும் வைத்தது வெறும் 5 வருடங்களில்.

யுத்தத்தால் உலக நாடுகளே அழித்த போது இந்த சுனாமியும் உதவியது என்பது மிகவும் கொடுமை. 

எமது மக்களை இயற்கையும் கொன்று எம்மக்களுக்கு இயக்கையும் எதிராக இருந்திருக்கிறது.






24/12/2017

இவை நடக்குமா? தேர்தலின் பின்

#உள்ளூராட்சி #மன்றங்களால்  #மக்களுக்கு வழங்ககூடிய  #சேவைகள்...

01 .பொதுச் சுகாதாரம்
02 .திண்மக் கழிவகற்றல்
03. கிராமிய பாதைகளை அமைத்தலும் பராமரித்தலும்
04. வடிகாழமைத்தல் பராமரித்தல்
05 .தெருக்களுக்கு வெளிச்சம் தருதல்
06. சிறுவர் பூங்காக்களை உருவாக்குதலும் பராமரித்தலும்
07. விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்
08.இடுகாடுகள்,சுடுகாடுகளை அமைத்தலும் பராமரித்தலும்
09. நூலக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்
10. பொது மல சல கூடங்களை அமைத்தலும்,பராமரித்தலும்.
11. கிராமிய நீர் விநியோகம்
12. பொது நீராடல் நிலையங்களை அமைத்தல்
13. தீயணைப்பு சேவைகள்
14. முன் பள்ளிகளை உருவாக்குதலும் பராமரித்தலும்
15. தாய் சேய் நலப்பணி
16. பொதுக் கட்டிடங்களை நிர்மாணித்தலும் பராமரித்தலும்
17. தொற்று நோய் தடுத்தல்
18. திடீர் அனர்த்த முன்னாயத்தமும் செயற்பாடுகளும்
19. தொல்லைகளைத் தவிர்த்தல்
20. பெண்கள் அபிவிருத்தி
21. கிராமிய மின்சாரம் வழங்கல்
22. வீடமைப்புத் திட்டம்
23. கல்வித் தளபாடங்கள்
24.அபிவிருத்திக் கருத்திட்டங்களை இனங்கண்டு நடைமுறைப்படுத்தல்
25. கால்நடை பன்ணைகளை நடாத்துதல்
26. அறநெறிப் பாடசாலைகளை ஏற்பாடு செய்தல்.
27. சமய விழாக்களை ஏற்பாடு செய்தல்
28. கிராம அபிவிருத்திச் சங்கங்களை ஸ்தாபித்தலும வழிநடத்தலும்
29. வறியோருக்கு நிவாரணம் வழங்கல்.

23/12/2017

தேர்தலால் பாடம் புகட்ட முடியுமா??

வருகின்ற உள்ளூராட்சி தேர்தலால் பாடம் புகட்ட முடியுமா. மக்கள் புகட்டுவரா. ஏன் புகட்டவேணும்

வரும் தேர்தல் மக்கள் அரசின் செயலுக்கு துணை போவோருக்கு பாடம் புகட்டவேண்டிய நேரம் என இளவயதினர் புலம்புவதை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.

அதுவும் தமிழரசு கட்சி தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராகவே.

பிக்குவின் தகனமும், த.தே.கூ அறிக்கைகளும் அதிகமாகவே தாக்கியிருக்கிறது. இளவயதினர் மாறுவது போல் முதியோரும் மாற்றம் விரும்பினால் பெட்டிப்பாம்பாக அவர்கள் மக்கள் நலன் சார்ந்து பேசுவர் என கற்றோர் எதிர்வுகூறுகின்றனர்.

த.தே.கூ எதிர் அணி ஒன்று அவசியம் என்பதும் மிக முக்கியம் எனவும் முணுமுணுப்பதை அவதானிக்கலாம்.



பாடம் கற்குமா தமிழரசு கட்சி. மீண்டெழுமா த.தே.ம.முன்னணி

22/12/2017

பிக்குவின் தகனம் உள்ளூராட்சியில் மோசமான தாக்கம்.

பிக்குவினது உடலை முற்றவெளியில் தகனம் செய்தமை உள்ளூராட்சி தேர்தலில்படு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த தாக்கம் தமிழரசு கட்சிக்கே அதிகம்
 தமிழரசு கட்சி எதிர்கட்சியாக உள்ளபோதும் ஒரு டம்மியாகவே உள்ளது.

மக்களின் கோபத்தை அதிகமாக்கி இருக்கிறது. உள்ளூராட்சி தேர்தலில் இதன் பிரதிபலிப்பு அதிகமாகும்.

இதனால் இக்கட்சி மிகமோசமாக தோல்வியடைய வைக்க வேண்டும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவத் கூறியிருக்கிறார்.

இச்செயற்பாடு இளவயதினரை பெரிதும் பாதித்திருக்கிறது. அவர்களின் இரத்த துடிப்பில் தமிரழசு கட்சி விளையாடியிருக்கிறது.

மக்கள் மாற்று தெரிவை தமது வாக்களிப்பில் கொடுத்து தமிழரசு கட்ட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தமிழ் தேசிய முன்னணியின் வடமராட்சி செயற்குழு உறுப்பினர் தமது உரையாடலில் குறிப்பிட்டார்.





தலையாட்டிகளை வேட்பாளர் ஆக்கியது யார்.

தலையாட்டிகளை வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கின்ற கட்சி உண்டு. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

யாழில் போட்டியிடும் கட்சிகள் பலவும் துடிப்புள்ள எதிர் கருத்து பேசக்கூஇயோரை இறக்கி இருக்கும் போது..

தமிழரசுகட்சி மட்டும் தலையாட்டிகளையும், கொள்கை மாறுவோரையும் நிறுத்தி இருக்கின்றது.

இவர்கள் அரசியலில் வந்து தலையாட்ட போகிறார்களே ஒழிய எதுவும் செய்யபோவதில்லை என மக்கள் விரக்தியில் உள்ளனர்.

சிங்கள கட்சிக்கு தலையாடும் பா.உ போல் இவர்கள் ஆடப்போகிறார்களா.

21/12/2017

வேட்பாளர்களின் கோரிக்கை என்ன?

வேட்பாளர்களின் கோரிக்கை என்ன. இன்றய கால கட்டத்தில் வேட்பாளர்கள் அனைவருமே ஒரே ஒரு கோரிக்கை மட்டும் மக்களிடம் விடுகின்றனர்

அவர்கள் அனைவரும் மக்களுக்கு சேவை செய்ய ஆணையாகா ஓட்டை எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் அதற்கு மக்கள் ஓட்டு போட்டு கொடுக்க வேண்டும். அதற்கு மக்கள் செய்யவேண்டியது அனைவரும் ஓட்டு போட செல்லவேண்டும். தமது வாக்கை போட வேண்டும் அதுதான் வேட்பாளர்களின் கோரிக்கை.

20/12/2017

தேர்தலும் போராட்டமும்.

தேர்தல் வெற்றியும் சமூக பிளவும். இந்த ஒரு வெற்றிக்காகா ஒரு சாதாரண உள்ளூராட்சிக்காக ஒன்று பட்ட தமிழை பிரிக்கும் நிலையில் பேரினவாதம்

இதற்கு சோரம் போகும் வகையில் தமிழ்கட்சிகள். இந்த சமூகத்தை குழப்பி ஒரு வெற்றி தேவையா என கட்சிகள் யோசிக்காத போது 

ஒரு கட்சி மட்டும் ஒன்றிணைந்த இளையோர் சமூகத்தை இறக்கி இருக்கிறது. 

30 வருட போராட்டம் தோற்றுப்போக அந்த சமூக பிரிவினையே காரணமாக்கி தோற்கடிக்கப்பட்ட போதும் இன்னும் புரிந்து கொள்ளாதது ஏன்.

சைக்கிள் கட்சி சார்பாக பிரசாரம் செய்யும் இளையோர் தமிழர் என்றும், போரியல் வடுவை நேரில் தலமை உட்பட அனுபவித்த வகையில் அவர்கள் பயணம் ஏனைய கட்சிகளினை விட மாறுபடுகிறது.

மக்களின் பொது அமைப்புக்களின் கோரிக்கை.

தமிழ்த்தேசிய பேரவை சார்பில் வேட்பாளராக - மணிவண்ணனை நியமிக்க கோரிக்கை!

உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்த் தேசிய பேரவையின் சார்பில் யாழ். மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்பாளராக தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் தேசிய அமைப்பாளரும் இளம் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன்  அவர்களை நியமிக்கும்படி வடக்கு கிழக்கு பொது அமைப்புக்கள் பலவ ற்றின் சார்பாக தமிழர் சம உரிமை இயக்கம் தமிழ் தேசிய பேரவையின் தலைமைப் பீடத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

19/12/2017

கட்சிகளின் பிரதான கடமை என்ன.

(#உங்கள் கருத்துகளை இடுங்கள் உறவுகளே)


கட்சிகளின் பிரதான  கடமை என்ன,? எல்லா கட்சிகளுனை விடவும் சைக்கிளின் முக்கிய கடமை.

ஏனைய கட்சிகளுக்கு அக்கடமை அவ்வளவு அவசியமில்லை. மற்றய கட்சிகளுக்கு கதிரை அவசியம் அதனால் அவர்களின் கடமை வேறு.

சைக்கிள் கட்சி செய்யவேண்டியதே மக்கள் அனைவரையும் ஓட்டு போடவைப்பதே அவர்களின் பிராதன கடமை.

ஆனால் மக்கள் அனைவரும் ஓட்டு போட்டால் ஏனைய கட்சிகளுக்கு வடக்கில் சந்தர்பம் மிக குறைவாகும்.

இதனை  முன்னர் நடைபெற்ற மாகாண, ஜனாதி பதி தேர்தலில் மக்கள் ஓட்டு போட்டதை போல் போட்டால் த.தே.கூ அமோக வெற்றி பெறும். ஆனால் இம்முறை மக்கள் ஓட்டு போடும் ஆர்வம் குறைவு.

இதனால் மற்ற கட்சிகள் வெற்றி பெற்று ஆசனம் பிடிக்கும்.

18/12/2017

மூக்கு உடையப்போகும் கட்சிகள்.

இந்த தேர்தல் சர்வசாதரண தேர்தல் இல்லை. இத்தேர்தல் நாட்டின் ஆளும் தரப்பு மற்றும் பிரதான கட்சிகளின் வலிமை ஆய்வின் முடிவை கூறும் தேர்தல்.

இங்கு வடக்கில் மூக்கு உடைபடும் கட்சிகள் இரண்டு காணப்படும். ஏனைய கட்சிகள் மீண்டெழவும் இத்தேர்தல் காணப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

வீடு மற்றும் சைக்கிள் கட்சிகளின் போட்டியின் போது நிட்சயம் மூக்கு உடைவு இருவருக்குமே. இக்கட்சிகளின் மீது அதிருப்பி உள்ள மக்கள் வாக்களிக்க செல்வது குறையும்.

புலி விழுந்தது நரிக்கு தாயமே.

 ஏனைய கட்சிகளின் ஓட்டு போடுனர்
குறைவு என்றாலும் மொத்த வாக்களிப்பில் வெற்றி என்பதிலும் அதித வெற்றி கிடைக்கும்.


17/12/2017

இந்த திகதிக்கு பின் நடப்பது யாருக்கு சாதகம்.

எல்லோரும் நினைப்பது போல் நடக்கும். அது எந்த திகதி என்ன நடக்கும்
 பதவி ஆசைப்பட்டோர் வால் பிடித்தோர் யாவரும் வெளியில் தெரியும் படி சிலது நடக்கும். அதுதான் 18-12.2017அன்றின் பின் இவை சகயம். வேட்பாளர் கனவுடன் உள்ள சிலர் தாம் தெரிவு செய்யப்படவில்லை என்று அறிவர். இது காலம் பிந்திய அறிவு. பெரும்பாலும் இது தமிழ்தேசிய கூட்டமைப்பில் காணலாம்.எனவே பலர் தமக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டமையால் எதிராக பிராச்சாரம் செய்ய வாய்ப்பு அதிகம். இது ஏனைய கட்சிகளில் பெரிதும் குறைவு. அவர்கள் வேட்பாளர்கள் இன்றி தவிக்கின்றனர். த.தே.கூட்டமைப்பு எதிர் கட்சிகளில் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க கூடாது என்றும், தமது கட்சியில் வாய்ப்பு கொடுத்தால் தலையிடி என்றும் சிலரை கழடிவிடும். இதில் சிலர் விழுந்தேன் மீசையில் மண் முட்டவில்லை என்றும் கூறலாம். இவை அனைத்தும் வேட்பு மனு தாக்கலின் பிந்தான். வேலை இன்றி போவோர் எண்ணிக்கையும் பதிவு செய்யப்படும். வேலை சம்பளமற்ற விடுமுறை, சிலர் வேலை நீக்கம் என இந்த பட்டியலும் நீளும். எதிர் கட்சிகளுக்கே வெளிச்சம். மாற்றம் நிகழ வாய்ப்பாக மாறலாம்
 இதெல்லாம் மக்கள் கைகளிலே

16/12/2017

வட்டார தொகுதி, விகிதாசார முறையில் வெற்றி சுயேட்சைக்கும்

இந்த தேர்தல் முறை புரியாதவர்கள் இதனைக் கவனிக்கவும்!

கலப்பு முறை என்றால்  என்ன?
அது எப்படி கணக்கு பார்கிறது?
இந்த பெண்களும் கட்டாயம் போகனுமாமே! அதனுடைய விளக்கம் என்ன?

இதெல்லாம் நமக்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கனும் நண்பர்களே ..இல்லாட்டி இவர்கள் நம்மட தலையில தேங்கா ஒடச்சிட்டு போய்டுவாங்க...

இதுல ஒரு சீன வித்தையும் இல்ல. சிம்பிளா விளங்கிக் கொள்ளலாம்!

இப்ப உதாரணத்துக்கு ஒரு ஊரை எடுப்பம். அதுல ஒரு 12 வட்டாரம் பிரிச்சிருக்கு என்று எடுத்துகொள்ளுங்க. இப்ப இந்த கலப்பு முறையில எப்படி வரும் என்றால்.

முதல்ல வட்டாரம் எல்லாம் கூட்டி 60 சதவீதமாக கணக்கெடுப்பாங்க; பிறகு அதோட சேர்த்து விகிதாசர முறையிலும் 40 சதவீதம் தெரிவு செய்வாங்க.

அதாவது நம்மட பாசையில சொல்ல போனால், 12 வட்டாரத்துக்கும் 12 பேர், அதோட சேர்த்து போனஸா 8 பேர்! அப்ப மொத்தம் 20 பேர் சபைக்கு போவாங்க!!

சரியோ அவ்ளோதான் கணக்கு!

இப்ப தேர்தல் நடக்குது.

ஒவ்வொரு வட்டாரத்துலையும் ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை போடும். நம்ம விரும்புற கட்சிக்கு வோட்டு போடுவம். இப்ப அதுல எந்த கட்சி அதிகமாக வோட்டு எடுக்குதோ அந்த கட்சி அந்த வட்டாரத்துல வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

அப்ப அந்த 12 பேரையும் தெரிவுசெய்து முடிஞ்சி!

சரி இப்ப மற்ற 8 ஆசனங்களும் எப்டி தெரிவு செய்வாங்க?

அதுக்கு என்ன செய்வாங்க என்றால் நண்பர்களே,

எல்லா வட்டாரத்துலையும் எல்லா கட்சிகளும் எடுத்த மொத்த வோட்டுகளை கூட்டுவாங்க. அதாவது ஊர்ல அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளை கூட்டுவாங்க.

உதாரணத்துக்கு அப்டி கூட்டி ஒரு 15,000 வோட்டுகள் வருது என்று எடுத்துக்கோங்க!

இப்ப அந்த 15,000 வோட்டையும் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கையான 20 ஆல பிரிப்பாங்க. அப்டி பிரிச்சா 750 வரும்.

இப்ப அந்த 750 வோட்டுத்தான் ஒரு ஆசனம் கிடைப்பதற்கான ஆகக்குறைஞ்ச வோட்டு! சரியோ?

இப்ப என்ன செய்வாங்க என்றால்,

ஒவ்வொரு கட்சியும் எல்லா வட்டாரங்களையும் சேத்து மொத்தமா எத்துன எத்துன வோட்டு எடுத்திருக்கு என்று பார்ப்பாங்க.

உதாரணத்துக்கு CWC எடுப்பம். அந்த கட்சி எல்லா வட்டாரங்களையும் சேர்த்து ஒரு 6000 வோட்டு எடுத்திருக்கு என்று வச்சிக்கொள்வோம்.

இப்ப இந்த 6000 வோட்டுக்கும் எத்தனை ஆசனம் கிடைக்கும் என்று கணக்கு பார்ப்பாங்க. அப்படி என்றால், இந்த  6000 ஐயும் 750 ஆல பிரிப்பாங்க. அப்படி பிரிச்சா 8 வரும். அதனுடைய அர்த்தம் என்ன என்றால் CWC  க்கு மொத்தம் 8 ஆசனங்கள் போய்ச் சேரனும்.

சரியோ!

இப்ப CWC எத்துன வட்டாரத்துல வெற்றி பெற்றிருக்கு என்டு பார்ப்பாங்க. உதாரணத்துக்கு அவங்க 5 வட்டாரத்துல வெற்றி பெற்றிருந்தால், அந்த ஐந்தையும் கழித்துவிட்டு அவங்களுக்கு போய் சேர வேண்டிய மிச்சம் 3 ஆசனங்களும் அந்த போனஸ் லிஸ்டுல இருந்து வழங்கப்படும்.

அதோட கேம் ஒவர்!

இன்னம் ஒரு உதாரணமும் சொல்லனும்.

இப்ப ஒரு சுயேட்சை குழு எலக்சன்ல நிக்கிது என்று வச்சிகோங்க. இப்ப அவங்க ஒரு வட்டாரத்துலயும் வெற்றி பெறல்ல என்று எடுப்பம்.

ஆனால்,

எல்லா  வட்டாரங்கலைளையும் சேத்து அவங்களுக்கு ஒரு 800 வோட்டு கிடைச்சிருக்கு என்று எடுத்தால், அவங்களுக்கும் போனஸ் லிஸ்டுல இருந்து ஒரு ஆசனம் வழங்கப்படும். ஏன் என்டால் அவங்க ஒரு ஆசனத்துக்கான ஆகக்குறைஞ்ச வோட்டு எண்ணிக்கையான 750 எடுத்திருக்காங்க!!

ஆகவே இதுல எல்லா கட்சிகளுக்கும் எல்லா வகையிலையும் வெற்றி பெறலாம்.

ஒரு கட்சிக்கு ஒரு வட்டாரத்துல மட்டும்தான் வாக்கு இருந்தாலும் ஆசனம் கிடைக்கும் வாய்ப்பிருக்கு. அப்டி இல்லாம ஊருக்குள்ள பரவலாக வாக்குகள் இருந்தாலும் ஆசனம் கிடைக்கும் வாய்ப்பிருக்கு.

இதுல லிஸ்டு போட்றத்துல இன்னொரு விசியமும் இருக்கு. அது என்ன என்றால்,

இப்ப ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒவ்வொரு கட்சி சார்பாகவும் ஒவ்வொரு ஆள் நியமக்கப்பட்டு ஒரு லிஸ்டு போடுவாங்க தானே?

ஆமாம்!

அதுக்கு மேலதிகமாக இன்னுமொரு போனஸ் லிஸ்டும் நிரப்பி கொடுக்கப்படும். அதாவது எங்களுக்கு போனஸ் ஆசனம் கிடைக்கும் பட்சத்தில் நாங்க இதுல இருந்து ஆக்கள் நியமிப்போம் என்று கொடுப்பாங்க.

ஆனா அதுல சுவாரஷ்யம் என்ன என்றால், கட்டாயம் அந்த லிஸ்டுல இருந்து தான் போனஸ் ஆசனத்துக்கு ஆக்கள் போடனும் என்று கட்டாயம் இல்ல. வட்டாரத்துல தோல்வியடைந்த ஆக்களையும் போடலாம்.

சரியோ அவ்வளவுதான் விஷயம்.

சரி இப்ப, அந்த பெண்கள் ஆசனங்கள் தொடர்பான விளக்கம் என்ன?

கட்டாயம் 25 சதவீதம் சபைக்கு பெண்கள் நியமிக்கப்படவேணும் என்று சொல்றாங்களே அப்படி பார்த்தால் அந்த 20ஆசனங்களில் 5 ஆசனங்கள் பெண்களா இருக்கனுமா? அப்டின்னு நீங்க யோசிக்கிறது நியாயம்.

ஆனால், இதை பத்தி எல்லா கட்சிகளும் பயப்பட தேவல்ல மக்களே!.

ஏன் என்றால்! 3 ஆசனங்களுக்கு மேலதிகமாகவும் மொத்த வாக்குகளில் 20% ஆன வாக்குகளுக்கு மேலதிகமாகவும் பெறுகின்ற கட்சிகள் மட்டும்தான் அந்த கணக்குக்குள் உள்வாங்கப்படுவார்கள்.

ஆகவே அந்த லிஸ்டுக்குள்ள வார கட்சிகளில் பெண்கள் வெற்றி பெறாத பட்சத்தில், அவர்களின் போனஸ் லிஸ்டிருந்து கட்டாயம் பெண்கள் நியமிக்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

சில நேரங்களில் பெண்கள் எண்ணிக்கை 25%ஐ விட குறையவும் வாய்ப்பிருக்கு.

கட்சிகள் எடுக்கன்ற ஆசனங்களின் நிலைப்பாட்டை பொறுத்து தேர்தல் ஆணையம் அதனை அனுமதிக்கும்.

சரியோ. அதுதான் அந்த வெளக்கம்.

இனி வோட்டு போட ரெடியாகுவோம்......

 Copied...

உள்ளூராட்சியில் மாற்று தெரிவிவை விரும்பும் மக்கள்


உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் மாற்று தெரிவை விரும்புகின்றனர். அத்தெரிவில் மக்கள் குழம்பியும் இருக்கின்றனர். தம்மையே ஏமாற்றும் கட்ட்சி ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றுவது பெரிய விடயம் இல்லை. இந்த கால கட்டத்தில் மக்கள் பேரவையும், வடமாகாண முதலமைச்சரும் எந்த கருத்துக்களையும் வெளியிடாது இருக்கின்றமை மக்களினை இன்னும் அதிக குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பது அடுத்த தேர்தலுடன் தமிழரசு கட்சியாக மட்டும் போட்டியிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. புளட், ரெலோ மற்றும் ஏனைய கட்சிகள் புதிய கூட்டணி உருவாக்கும். அக்கூட்டணி தமிழ்தேசிய முன்னணியுடன் சேரும் பட்சத்தில் தனித்துவமாக செயற்பட வாய்ப்பு அதிகம். பலமான எதிர்கட்சி ஒன்று தமிழரசு கட்சிக்கு இக்கால கட்டத்தில் அவசியமாகிறது. இல்லாது விட்டால் தமிழர் நிலை கவைக்கிடமாகலாம்
 ஏன் இந்த நிலைக்கு தமிழரசு கட்சி கொண்டு செல்கின்றது என்று யாருக்கும் இன்னும் புரியவில்லை. இந்த நிலை மாறவேண்டும் என்றால் மக்கள் மாற்று தெரிவினை தெரியவேண்டும். 

15/12/2017

தேர்தல் ஓட்டு யாருக்கு. குழப்பம் தீர்ந்தது.

அன்பான மக்களே உங்கள் வாக்கு உரிமை காப்பதற்கா...? உலக வல்லாதிக்க நலன்களை காப்பதற்கா...?

#வீட்டு சின்னதில் போட்டியிடும் #தமிழ்த்_தேடிசியக்_கூட்டமைப்பு அமெரிக்கா உள்ளிதேர்தல்ல்ட்ட  மேற்குலக நாடுகளின் பிராந்திய நலன்களை முன்னிறுத்தி நல்லாட்சி அரசை கண்மூடித்தனமாக காப்பாற்றும் நிகழ்ச்சி நிரலின் கீழேயே இத்தேர்தலை எதிர்கொள்கிறது.

#உதய_சூரியன் சின்னத்தில் போட்டியிடும் #தமிழர்_விடுதலை_கூட்டமைப்பு இந்தியாவின் பிராந்திய நலன்களை காப்பாற்றும் ஒரே ஒரு நோக்குடன் இத் தேர்தலை எதிர்கொள்கிறது.

#சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் #தமிழ்த்_தேசியப்_பேரவை தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை ஆகிய தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்தி இத் தேர்தலை எதிர்கொள்கிறது.

அன்பான மக்களே உங்கள் வாக்கு உரிமை காப்பதற்கா...? உலக வல்லாதிக்க நலன்களை காப்பதற்கா...? இந்த வகையில் தெருவில் கெல்மெற் சண்டை போடுவோரின் கதிரை ஆசையும், பதவி ஆசையும் பன்னியாக தெரிகின்றது. ஏமாற்று காரர்களினை விட மக்கள் நலனுக்காக வருவோரை கள். மாற்றம் அவசியம் என்பதை நிருபித்து அடுத்த தேர்தலில் உண்மையின் படி நடக்க ஆவன செய்யுங்கள்

14/12/2017

தொப்பை குறைக்க வெந்தயம் பகுதி 2

தொப்பை குறைக்க உணவு கட்டுப்பாடு அவசியம் என்று அனைவரும் கூறுவர். யானைப்பசி பசிக்குதே எப்படி கட்டுப்பாட்டுடன் இருப்பது என்று தோன்றும். இருக்கலாம் அதற்கு வெந்தயம் போதும். காலை வேளை அரை தேக்கரண்டி வெந்தயத்தை நீரில் கழுவி பவுக்கம் சாப்பிடுவது போல் சாப்பிடுங்கள். வெந்தயத்தில் நார்ச்சத்து இருப்பதால் பசியை குறைக்கிறது. இது மலச்சிக்கல், மூல நோய், உடல் சூடு என்பவற்றையும் குறைக்கிறது. வெந்தயம் சாப்பிட்டு விட்டு அரை லீற்றர் நீர் குடித்தால் இன்னும் பலன் அதிகம். நீங்கள் ஜிம் உடற்பயிற்சி அவசியமும் இல்லை. உங்கள் சந்தேகங்களை கொமன்ற் பகுதியில் கேளுங்கள் 

13/12/2017

வெந்தயத்தால் தொப்பை குறைக்கும் முறை

தினமும் காலை வேளை நீங்கள் செய்யவேண்டியது, நடப்பதோ ஓடுவதோ தேவையில்லை. மிக இலகுவாக உடல் எடை குறைய வழி இதுதான். சற்று கடினம். ஆனால் முடியும் எண்ணி ஒரு மாதம் நீங்களே வியக்கும் அளவில் எடை என்பதை விட தொப்பை குறையும். செய்யவேண்டியது கொஞ்சம் வெந்தயம் எடுத்து அரை தேக்கரண்டியளவு. நீரில் ஊறப்போட்டோ அல்லது போடாமலோ காலை வேளை மென்று சாப்பிடவேண்டும். இதன் பின்னர் இன்னொரு செயலும் செய்யவேண்டும் அதனை அடுத்த பதிவில் பார்கலாம். மிகவும் இலகு. உடனே குங்கள். எம்மால் பந்தயம் கட்டமுடியும். இவ்வழிமுறை எம்மால் பரிட்சிக்கப்பட்டது. உடலில் வலிமை, ஆண்மைதன்மை என்பனவும் அதிகரிக்கும்.

10/12/2017

தொப்பை குறைய 3 நிமிடம்

எல்லோருக்கும் தொப்பை பெரிய பிரச்சினை குறைக்க வழிதேடாதோர் இல்லை. தொப்பை அழகை குறைகிறது ஜிம் பாடியை கெடுக்கிறது. சீதணத்தை குழப்புகிறது. இப்படி நீண்டு செல்கிறது. உணவுக்கட்டுப்பாடே வண்டி குறைக்க முதல் வழி.
தொப்பை குறைக்க எமது பாரம்பரிய முறைகளை பின்பற்றவேண்டும். நாளுக்கு மூன்று நிமிடம். சின்ன ஒரு சகிப்புத்தன்மை இருக்கவேண்டும். இக்கட்டுரை ஒருவரின் அனுபவத்தினால் வரையப்படுகிறது. தினமும் அவர் ஒரு வகை தானியம் உண்பார் அதன் விளைவாக பின்னர் நீர் அருந்துவார். அதனால் அவர் 20 நாட்களில் தொப்பை மட்டும் குறையக்கண்டார். சாவால் விடுகின்றார். தொப்பை குறைத்து காட்டுவதாக. தொப்பையுடன் சில நோய்களும் சேர்ந்தே குறைகிறது என்கின்றார். நாளைய கட்டுரையில் தானிய வகை உணவு செமிப்பாட்டு முறை அனைத்தும்  குறையும் முறைகள் பற்றி பார்ப்போம். அது வெந்தயம் நாளை பார்ப்போம்

09/12/2017

Northern election rustle

Northern Opposition polls There is a lie and fault with the election and the deception of people. Here there is a lot of gossip and laughing talk. Everything is desirable. The only thing they can do is to tell people what they are capable of doing. What can we do to people is successful? But they are campaigning to declare competitive politicians in northern politics. Some go to parties as employment, promotion and popularity. People in the interests of the people are thrown out. In Tamil politics, Tamil Nadu is acting as a full enemy in northern politics. One party is afraid of the other party. In the electoral period, the people are tied together. Then you get out. Nobody understands why people did not take this decision seriously.

வடபகுதி தேர்தல் சலசலப்பு. தேர்தல் என்றாலே பொய்யும் குறைக்கூறலும் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளும் இடம்பெறுவது வழமை. இங்கு கோமாளித்தன்மை, நகைப்பிற்கிடமான பேச்சுக்கள் அதிகளவில் இடம்பெறும். எல்லாம் பதவி  ஆசையினால். மக்கள் நலன் சார்ந்து இவர்கள் செயற்படுவதாக இருந்தால் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை மட்டும் கூறவேண்டியது மட்டும்தான். மக்களிற்கு என்ன செய்வோம் என்று கூறினாலே வெற்றி கிட்டும். ஆனால் வடக்கு அரசியலில் போட்டி அரசியல் வாதியை குறைத்து கூறுவதே இவர்கள் பிரச்சாரம். சிலர் கட்சிகளை நாடுவது வேலைவாய்ப்பு, பதவி மற்றும் பிரபலம் என செல்கின்றனர். மக்கள் நலன் சார்ந்து செல்பவர்கள் தூக்கி வீசப்படுகின்றனர். வடக்கு அரசியலில் தமிழ் தரப்புக்கு தமிழ்தரப்பே முழு எதிரியாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.  ஒரு கட்சி மற்றய கட்சிக்கு பயப்படுகிறது. தேர்தல் காலங்களில் மக்களோடு பின்னி பிணைகின்றன. பின்னர் கழன்று விடுகின்றன. மக்கள் இவற்றை அறிந்தும் ஏன் தீர்கமான முடிவு எடுக்கவில்லை என்று யாருக்கும் புரியவில்லை.

07/12/2017

A small draft about the contemporary Sri Lankan Tamil political situation.

A small draft about the contemporary Sri Lankan Tamil political situation. The Tamils ​​are increasingly drawn with the intention of housing party politics. Whoever prevails here is victorious on the basis of popularity, but the violators are thrown out. There is a state of peace in politics. Udaya sun symbol and a radiation is right. The Ooter people have been frustrated for the chase and the new coalition has begun. People are not going to change their vote. Hence the house is strong and the arrogance arrogance is more likely to prevail. Even if the party does not campaign, victory is a victory. The bicycle party tries to make the party stand out. Joining frustrators. The strength of the house is the desire to change the chair. Weakness of the bicycle Some people in the interests of the people will not let the people know them.


தற்கால இலங்கை தமிழ் அரசியல் நிலவரம் பற்றி சிறிய வரைபு. தமிழர்கள் அதிகளவில் புள்ளடி இடும் வீட்டு கட்சி அரசியலில் பதவி சார்ந்த நோக்கத்தோடு செல்கின்றனர். இங்கு யார் நின்றாலும் வெற்றி என்பதும் அங்கு பிரபலமானோர் என்ற அடிப்படையில் வெற்றி கிட்டுகிறது ஆனால் தலமை மீறி செயற்படுவோர் தூக்கி வீசப்படுகின்றனர். அரசியலே வாழ்வு என்போன் அமைதி காக்கும் நிலை அங்கு உண்டு. உதய சூரியன் சின்னமும் ஏதாவது ஒரு கதிரை கிடைத்தல் சரி என்ற நிலையில். கதிரைக்காக ஓடியோர் மக்கள் விரக்தி அறிந்து புதிய் கூட்டணி ஆரம்பித்துள்ளனர்.  மக்கள் தமது வாக்கு எதுவானலும் புள்ளடி பெரிதாக மாறப்போவதில்லை. இதனால் வீடு பலம் பெறுவதோடு அகங்காரம் ஆணவம் மேலோங்க வாய்ப்பு அதிகம். அக்கட்சியினர் பிரச்சாரம் செய்யாது விட்டாலும் வெற்றி நிட்சயம். சைக்கிள் கட்சி வீட்டி கட்சியின் நிலைப்பாட்டை புரிய வைக்க முயற்சிக்கிறது. விரக்தியானோரை சேர்கிறது. கதிரை ஆசையுள்ளோர் மாறி மாறி போவதும் வீட்டின் பலம். சைக்கிளின் பலவீனம். மக்கள் நலன் சார்ந்து உள்ளோர் சிலர் அவர்களை இனங்கட்டும் மக்கள் புள்ளடி இடாதது மனவருத்தம்.

06/12/2017

Sri Lankan team recovered.

Sri Lankan team recovered. The Sri Lankan team has helped each of the players to realize their work in each tournament. Even though the Indian team played their wins, they could not enjoy success. Sri Lankan players have changed the competition in an unexpected manner. It has been astonishing that the Sri Lanka team has resurrected everyone.



மீண்டெழுந்த இலங்கை அணி. இலங்கை அணி வீரர்கள் தமது பணியினை ஒருவர் ஒருவர் ஒவ்வொரு போட்டியிலும் உணர்ந்து மேற்கொண்டமை அவ்வணி போட்டியை சமப்படுத்த உதவியாக இருந்திருக்கிறது. இந்திய அணி தமது வெற்றி உறுதி என்று விளையாடியபோதும் அவர்களால் வெற்றியை ரசிக்க முடியவில்லை. அனைவரும் எதிர்பாரத வகையில் போட்டியை மாற்றி அமைத்தனர் இலங்கை வீரர்கள். இது இலங்கை அணி மீண்டெழுந்து காட்டியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

News of the day

News of the day. In the local government election, the Tna has been tied to 80:20. Work in Northern Province for Southern Youth Train drivers are still working from today. Lamborghini, who was in Colombo, had a name. Select the correct local roster members. Emergency meeting was held in Jaffna. The rural officers are ready for the alliance

இன்றய செய்திகள். உள்ளூராட்ட்சி தேர்தலில் 80:20பங்கில் கூட இழுபறி நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்ட்சி இழுபற்னிலை. தென்னிலங்கை இளைஞர்களிற்கு வடமாகணத்தில் வேலை வாய்ப்பு. புகையிரத ஓட்டுனர்கள் இன்றிலிருந்து வேலைனிறுத்தம்.  கொழும்பில் இருந்த லம்போர்கினி நாமலின் உடையது என்று தெரிவிப்பு. சரியான உள்ளூராட்ட்சி உறுப்பினர்களை தெரிவு செய்யகோரல். அவசர நிலை கூட்டம் யாழில் இடம்பெற்றது. கிராமமட்ட அலுவலர்கள் முப்படையினர் தயார் நிலையில்

05/12/2017

05-12-2017 jal news

Jaffna News. Conduct local authority elections quickly, with the Pabbar organization filed a fundamental right in the High Court against the Election Commission. 37 lakhs of pirated private company in Jaffna. Avoid going to sea due to the speed of wind. Swine cut in the massacre and youth wound. One of the men arrested in Panamasady Notify the number of students who do not have a standard examination card number 1911. Dengue eradication

யாழ்ப்பாண செய்திகள். உள்ளுராட்சி தேர்தலை விரைவாக நடத்துக, பப்ரல் அமைப்பால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல். யாழில் தனியார் நிறுவனத்தில் 37 இலட்சம் திருட்டு.காற்றின் வேகம் அதிகமாகையால் கடலுக்கு செல்வதை தவிர்க்கவும். மீசாலையில் வாள் வெட்டு இளைஞர் படுகாயம். பனமோசடியில் யாழில் ஒருவர் கைது. சாதரண தர பரீட்சை அனுமதி அட்டை கிடைக்காதோர் 1911 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குக. டெங்கு ஒழிப்பில் இளவாலை வருத்தப்பாடதோர் சங்கம்

04/12/2017

Today jaffna news

Jaffna News at a glance Pasi Sabha election on the 10th of May Nominations for 243 nominations today The Congress is the only bureaucrat symbol of the competition and police complaints against the police. TNA is competing as a strong party. Minister Arjini needs to remove party politics to resolve the country's problem. The period with rain will continue. Water contamination on diesel at Kokku fuel station Attack on the journalist Karthikai Deepa Festival, Jaffna

யாழ்ப்பாண செய்திகள் ஒரே பார்வையில். மாசி மாதம் 10ம் திகதி பிரதேசசபை தேர்தல். 243 சபைகளுக்கான வேட்பு மனு இன்று அறிவிப்பு. காங்கிரஸ் தனித்து துவிச்சக்கர சின்னத்தில் போட்டி, பொலிசாருக்கு எதிரான முறைப்பாடுகள் பதிய வடக்கு மக்களிற்கு விழிப்புணர்வு போதாது பொலிஸ் ஆணைக்குழு பணிப்பாளர். பலமான கட்சியாக tna போட்டியிடும். நாட்டின் பிரச்சினை தீர்க்க கட்சி அரசியல் நீங்க வேண்டும் அமைச்சர் அர்ஜின. மழையுடன் கூடிய கால நிலை தொடரும். கொக்குவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலில் நீர் கலப்படம். ஊடகவியலாளர் மீது தாக்குதல் கார்த்திகை தீப விழா யாழில், யாழ்ப்பாணம் வெளிச்சக்காடாக  மாற்றிய மக்கள்

03/12/2017

India is more likely to succeed.

India is more likely to win Sri Lanka. India's cricket is great. The ball is also standard. Even today, the chance of winning Sri Lanka is less. Goali  200 hit may break. The Indian team will have a chance to win. These defeats will continue until they do not focus on Sri Lanka team training and player selection.

இந்தியா சிறிலங்கா கிறிக்கெற் இந்தியா வெல்வதற்கான வாய்ப்புக்களே அதிகம். இந்தியாவினது துடுப்பாட்டம் சிறப்பாக அமைந்துள்ளது. பந்து வீச்சும் தரமானதாகவே இருக்கின்றது. இன்று இடை நிறுத்தி கொடுத்தாலும் இலங்கை வெல்வதற்கான வாய்ப்புக்கள் குறைவே. கோலி 200 அடித்தது இடை நிறுத்தப்படலாம். இதனால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமே. இலங்கை அணி பயிற்சி மற்றும் வீரர் தெரிவில் கவனம் செலுத்தாத வரை இந்த தோல்விகள் தொடரும்.

02/12/2017

Money in online.

Everyone wants to work. Need more money. But nobody can do it. Some people achieve success. We want to be one of them. Can you do that? What can we do? How does anyone need advice? Get together alone. With so many questions. Hmmm you get all the answers. Continuous budding



எல்லோருக்கும் உழைக்க ஆசை. அதிக பணம் தேவை. ஆனால் யாராலும் அதனை செய்ய முடிவதில்லை. சிலர் சாதித்து விடுகின்றனர். அவர்களில் ஒருவராக எமக்கு ஆசை உண்டு. முடியுமா அவ்வாறு. முடியும் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். எப்படி யாரின் ஆலோசனை தேவை. தனியாகவா கூட்டாகவா. இவ்வாறு பல கேள்விகளுடன். ம்ம் இதற்கு எல்லாம் விடைகள் உங்களுக்கும் கிடைக்கும். தொடர்ந்து இருங்கால்

பொய்க்கு உண்மையாயிருத்தல்

 இன்று பலரும் வாழ்க்கை முறையில் பொய்க்கு உண்மையகா இருக்கிறரகள். இது என்ன வித்தியாசமான சிந்தனை. இது ஒரு வகை தக்கன பிழைக்கும் முறைமுறைதான். இத...